Monday 4 January 2021

நர்சிங் காலேஜ் - 9

 மூன்று பெரும் சாப்பிட்டு முடித்துவிட்டு என்னுடைய புடவை ஜாக்கெட்டுகளை try செய்தோம்.

uniform ஜாக்கெட் அனைத்தையும் போட்டு பார்த்தேன். எல்லா அளவுகளும் சரியாக இருப்பதாக அம்மாவும் தங்கையும் சொன்னார்கள். மற்ற ஜாக்கெட் அனைத்தும் ரெடிமேட் ஆக எடுத்திருந்ததால் சில திருத்தங்கள் செய்ய வேண்டி இருந்தது. அம்மா அவற்றை குறித்து கொண்டார்கள். நாளை alter செய்து வாங்கி வந்து விடுவார்கள். மிகவும் கச்சிதமாக இருந்த ஒரு ரெடிமேட் ஜாக்கெட்டை கொடுத்து, நாளை இந்த ஜாக்கெட்டை போட்டுக்கொள்ள சொன்னார். அது ரத்த சிவப்பு கலரில் இருந்தது. கை அளவு சிறியதாகவும், இடுப்பிலும் கைகளிலும் பட்டு border இருந்தது. அதற்கு match ஆக ஒரு சிவப்பு கலர் பட்டு புடவையும் கொடுத்தார்கள்.

முந்தைய நாளை போலவே இன்றும் புடவையுடன் தூங்கினேன். கனவில் பலமுறை நான் பெண் வேடத்தில் தோன்றினேன். என் தங்கைக்கு திருமணம். நானும் அவளும் ஒரே மாதிரி பட்டு புடவை கட்டிக்கொண்டு இருந்தோம். கைகளில் அழகாக மெகந்தி போட்டிருந்தேன். பிட்டம் வரை முடி இருந்தது. இன்னும் பல கனவுகள், அனைத்திலும் நான் பெண்ணாகவே இருந்தேன். காலை எழுந்திருக்க late ஆகிவிட்டது. ஹாலில் வந்து அமர்ந்தேன், ரம்யாவும் .இருந்தாள்.

"என்ன அண்ணா, நல்ல தூக்கம் போல.."

"ஆமா. நிறைய கனவு வந்துச்சு."

"breakfast சாப்பிட்டயா"

"இன்னும் இல்லைண்ணா.. குளிச்சிட்டு சாப்பிடலாம்னு இருக்கேன்."

"நான் இப்போ குளிக்கல.. சரி, நீ குளிச்சிட்டு வா, சாப்பிடலாம்."

ரம்யா குளித்துவிட்டு வந்தாள்.

"அண்ணா. இங்க வா. ப்ளீஸ் எனக்கு தலை சீவ help பண்ணு."

"சரி வா.."

இருவரும் மேக்கப் டேபிள் முன் சென்றோம். அவள் stool மேல் அமர்ந்து கொண்டாள்.

"இன்னைக்கு நீதான் எனக்கு தலை சீவி விடணும். நான் ஒரு help ம் பண்ண மாட்டேன்."

நேற்று செய்தது போலவே தலைக்கு மசாஜ் செய்து, எண்ணெய் தடவினேன். பின்னர் கூந்தலை சீவ ஆரம்பித்தேன். தலையின் பின்னர் சென்டரில் கிளிப் மாட்டி, மூன்று பாகமாக பிரித்து பின்ன ஆரம்பித்தேன். இறுதியில் பேண்ட் மாட்டி விட்டேன்.

"அண்ணா! சூப்பரா பின்னி விட்டிருக்கண்ணா. நீயெல்லாம் பொம்பளையா பொறந்துருக்கணும். ஒரே நாள்ல புடவை கட்ட படிச்சிட்ட, தலை சீவ கத்துகிட்ட. வெரி குட் அண்ணா."

இருவரும் சாப்பிட்டு முடித்தோம். ரம்யா பாத்திரங்களை கழுவ ஆரம்பித்தாள். நான் அவளுக்கு துணையாக பேசிக்கொண்டு இருந்தேன்.

நானும் குளித்துவிட்டு அம்மா கொடுத்த பட்டு புடவையை கட்டலாம் என எடுத்தேன்.
அம்மாவின் கப்போர்டில் தேடி சிவப்பு கலர் உள்பாவாடை கண்டுபிடித்து எடுத்தேன். ரம்யா புடவை கட்ட உதவினாள். இன்று எப்படி எளிதாக bra மாட்டுவது என்று சொல்லிகொடுத்தாள். முதலில் கைகளை நுழைக்காமல், இடுப்பில் சுற்றி hooks முன்னால் வருமாறு வைத்து hooks மாட்டிவிட்டு பின்னர் hooks முதுகில் வருமாறு bra வை சுற்றினாள். இந்த method ஈசி ஆக இருந்தது.பின்னர் ஜாக்கெட் மாட்டினேன். முதுகு பக்கம் கயிறு கட்டுவது போல டிசைன். ரம்யா அதை கட்டி விட்டாள். நானே புடவையை கட்டினேன். கடைசியில் கொசுவத்தை மடிப்புகள் அழகாக வருமாறு சரி செய்தாள். என்னை மேக்கப் டேபிள் முன் கூட்டி சென்றாள்.

"அண்ணா! இன்னைக்கு நாந்தான் உனக்கு மேக்கப் போட்டு விடுவேன். நீ எதுவும் பேச கூடாது." - ரம்யா சொன்னாள்.

நான் கண்ணாடி பார்க்க முடியாதவாறு, முதுகு பக்கம் கண்ணாடி இருக்க அமர சொன்னாள். ஒரு tweezer எடுத்து என் புருவங்களை சரி செய்தாள்.

"ஏய்! என்ன செய்யுற நீ?"

"அண்ணா! நீ எதுவும் பேசகூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல.. அமைதியா இரு. கண்கள் தான் பெண்களுக்கு முகத்துல ரொம்ப அழகு.."

பின்னர் நிறைய creamகளை முகத்தில் தடவினாள். powder apply செய்தாள். ஒரு பென்சில் கொண்டு கண்களை தீட்டினாள். லிப்ஸ்டிக் போட்டாள். போட்டு வைத்தாள். எல்லாம் முடித்துவிட்டு கண்ணாடியை பார்க்க சொன்னாள். என்னால் நம்பவே முடியவில்லை. கண்ணாடியில் தெரிவது நான்தானா? ஓர் அழகான பெண் போலவே இருந்தது.

No comments:

Post a Comment