Monday 23 March 2015

பூஜாவின் வாழ்கைக் கதை - Part 3

என்ன condition என்று அக்காவிடம்  கேட்டேன். நீ படித்து பெரிய ஆளா வர வேண்டும்,அதனால் காலேஜ் போகும் வரை இந்த பெண்ணாக வேண்டும்  என்ற எண்ணம் வெளிய யாருக்கும் தெரிய வேண்டாம்,தெரிந்தால் ஸ்கூலில், ஊரில் உன்னை கிண்டல் செய்வார்கள் ,அதனால்  இந்த  படிப்பு பாதிக்கும். நான்  படி  படியாக  அம்மாவிடம்  சொந்தகரர்களிடம்  friendsடம்யும்  சொல்லிகிறேன்  , நீ  கவலை  படாத டா  . சரி  அக்கா  ,அனால்  நீ  என்ன  வாடா  போடா  என்ன  டா போட்டு  பேசுவது  நல்லா   இல்லாக ,என்ன  வாடி  போடின்னு  ஒரு பொண்ண  நினைச்சு  கூப்பிடனும்  என்று  சொல்லி  வெட்கத்தால் தலை குனிந்தேன். அட  வெட்கத பாரு என் தங்கசிக்கு என்று உரிமையோடு சொன்னால்.போக்கா  கிண்டல் பண்ணாதிங்க என்றேன் . அக்கா என்று தயக்கமாக  கூப்பிட்டேன். என்னடி  வேணும் என்றால் என் அக்கா . அக்கா  உன் டிரஸ்  வேண்டும் என்றேன் . அட என் தங்கசிக்கு  உடனே  பெண்  அகனுமோ? என்றால், இன்னக்கி  வேண்டாம்  அம்மா வரும் நேரமாச்சி ,நல்கி  Saturday நம்ம ரெண்டு பேத்துக்கும் லீவ்,அம்மா  ஆபீஸ் போனவுடன் நீ  பெண்ணாகலம்  என்றால்,இரவு  தூக்கம்  வரவே இல்லை ,எப்போது  விடியும்  என்றிருந்தது.காலையில்  அம்மா  ஆபீஸ்  கிளம்பியதும், அக்கா  எப்போது  கூபிடுவல் என்று ஏங்கினேன். பெட் ரூமில் இருந்து அக்கா  என்னை கூப்பிடும் சத்தம்  கேட்டது. நான் ஆர்வமாய் போனேன் ,என்னடி பாக்குற உனக்கு என்ன டிரஸ் புடிக்குமோ அதை  என் கப் போர்டில் இருந்து எடுத்து வர என்றால்,அக்கா  கப்  போர்டில்  இருந்து ,தாவணி  பாவிட  எடுத்தேன் ,அதை  பார்த்த  என்  அக்கா ,என்  தங்கசிக்கு  ஆர்வத  பரு ,அதுக்குள்ள  தாவணி  பாவாட  கட்ட  வேண்டும்னு  ஆசை. அக்கா  வந்து  முதலில் பாவாட சட்டை  போடுடி ,அப்புறம்  படி  படியா  தாவணி  ,சேலைலாம்  கட்டலாம்  என்றால் .அக்காவே  ஊதா  கலர்ல  பாவாட ,but கை வச்ச சட்டை ,petticoat எடுத்து வந்து  பூட்டு விட்டால் ,இப்படியே  நேரம் கிடைக்கும்  போதெல்லாம் நானும் அக்காவும் சேர்ந்து கற்பனை  உலகிற்கு செல்வேன். 10ஆம்  வகுப்பு ஆரம்பம் ஆனது, என்  friend பூஜா தாவணி பாவாடையில் என் வீட்டிற்கு வந்தால். அதை  பார்த்ததும் எனக்கும் பாவாட தாவணி கட்ட வேண்டும் என்ற ஆசை  வந்தது.என் அக்காவிடம்  சென்று  இதை சொன்னேன். அவ வயசுக்கு  வந்துடா  டி ,அதான்  இப்படி டிரஸ் பண்றாள்  என்று  சொன்னால் ,அதற்கு  எனக்கும் அவள் வயசு தானே ஆகுது என்றேன், அப்படின்னா  என் தங்கசிக்கும் வயசுக்கு வந்துடலா  என்றால். சரிடி  இனிமேல் நீ  தாவணி  பாவாட கட்டலாம் என்றால்.

தொடரும்

பூஜாவின் வாழ்கைக் கதை - Part 2

நான் ஒரு முடிவுக்கு வந்தேன். என் அக்கா எனக்கு friend போல இருப்பால். என் அக்காவிடம் என் உள் உணர்வை சொன்னேன். என் அக்கா shock ஆகி விட்டால். என்னடா சொல்ற நீ ஒரு பெண் போல feel  பன்றியா, தாய் இது இந்த வயசு கோளரா  இருக்கும், நானும் பிரியாவும் அம்மாவும், என பெண்கள் கூடவே நீ இருப்பதால் உனக்கு அப்படி தோன்றும். கொஞ்ச நாள் ஆனா புறம் காலேஜ்ல போகும் போது மாறிடும் என்றாள் என் அக்கா. 2 மாதம் போனது என்னால் உணர்வா அடக்க முடியவில்லை. அதற்கும் அடுத்த நாள் நேரே என் அக்காவிடம் போய் , இல்ல அக்கா நான் ஒரு பெண் என்ன உன் தங்கச்சிய ஏதுக்கோ என்றேன். அக்கா தர்ம சங்கடம் ஆனால். சரி ஆனால் ஒரு condition. 

தொடரும்

பூஜாவின் வாழ்கைக் கதை - Part 1



எல்லாருக்கும் வணக்கம் . என்  பெயர்  பூஜா .இது  ஒரு  நிஜமும்  கதையும்  கலந்த  சம்பவங்களை  நம்  சகோதரிகளுக்கு  சொல்ல  விரும்புகிறேன் . நான்   என்  அம்மா  மற்றும்  என்  அக்கா  இதுதான்  என்  குடும்பம் . எனக்கு  அப்பா  இல்ல . சின்ன   வயதிலே  தவறிட்டார் . என்  அம்மா  govt ல்  social  welfare deptல் வேலை  செய்கிறார் . என்  அக்கா  +2 படிக்கிறார் . நான்  9த்  படிக்கிறேன் . நேரடிய  கதைக்கு  செல்வோம் . நான்  6 வகுப்பு  படிக்கும்  பொது  dramaவில்  பெண்  வேடம்  போடா  வேண்டும்  என்ற  சூழ்நிலை . எனக்கோ  வெட்கமாய்  இருந்தது . டீச்சரிடம்  முடியாது  என்றேன் . ஆனால்  டீச்சர்  இந்த  கேரக்டர்க்கு   நீதான்  சரி  வருவாய் ,அப்படி  ஒரு  முக  அமைப்பு  என்று  கூறி  என்  அம்மாவிடம்  சொல்லி  சம்மதம்  வாங்கினர் . அதுதான்  நான்  முதல்  தடவை  பெண்  வேடம்  போட்டது . அன்று  எவனிங்  பாவாட  சட்ட  தோடு  கொலுசு  என்  அனைத்து  மடேரியால்லும்  எடுத்து  வர  சொன்னார்  என்  டீச்சர் . நான்  என்  அக்காவின்  பாவாடை  எடுத்து  பார்த்தல்  சைஸ்  பெரிதாக  இருந்தது . என்  அக்கா  என்  பக்கத்துக்கு  வீட்டில்  உள்ள  என்  கிளாஸ்  படிக்கும்  பிரியா  அம்மாவிடம்  சென்று  விளக்கம்  சொல்லி  வாங்கி  வந்தாள் . அன்றிலிருந்து  பிரியா , அவ  அம்மா  ரொம்ப  என்  குடும்பத்திடம்  நெருக்கம் ஆனார்கள் . 6 ஆம்  வகுப்பு  முடிந்ததில்  இருந்து  அடுத்து  நடக்கும்  அனைத்து annual day functionலும்  பெண்  வேடம்  தான். சரி  நிகழ்  காலத்திரிக்கு   வருவோம் . எனக்கு  கடந்த  3 வருடமாக  பெண்  வேடம்  போட்டதாலும் . வீட்டில்  பெண்களுடனே  இருப்பதாலும் . ஸ்கூல்லில்  பிரியாவுடனே  இருப்பதாலும் ஏன்  நான்  மட்டும்  பாய்(boy)யாக   பிறந்தேன் ,நானும் பெண்ணாக இருந்தால்  எவ்வளவு  நல்ல இருக்கும்  என்பது போல  தோன்றும்  . கடந்த  3 மாதமாக  இது  மனதில்  தோன்றி  என்  மனதை  அரித்தது . ஒரு  முடிவுக்கு  வந்தேன்.
தொடரும் 

Sunday 22 March 2015

அபிராமி ஓர் ஆச்சரியம் - பகுதி 12


இதோ பள்ளித்தேர்வுகள் முடிந்திவிட்டது இன்றோடு. தேர்வு முடிந்து, 
நண்பர்கள் கட்டாயப்படுத்தியதால் பள்ளியில்  இருந்தேன். மாலை நானும் கீதாவும் ஒன்றாக வீடு வந்தவுடன் நான் என் அறைக்குச் சென்று உள்ளாடை மற்றும் நைட்டி அணிந்து கொண்டேன்.கீதாவும் நைட்டி அணிந்து கொண்டாள். 


"அபி, இனிமேல் நமக்கு எந்த கவலையும் இல்லை. எக்ஸாம் முடிஞ்சது" கீதா ஆனந்தமாய் சிரித்தாள்.

"ஆமா  டி .. இனிமேல் எதுவும் படிக்கத் தேவை இல்லை. நிம்மதியா வெளிய போகலாம்."

"ஆமாம். அதான் எக்ஸாம் முடிஞ்ச பின்னாடி நீ ஒரு பொண்ணு மாதிரி வெளிய போகலாம்னு அம்மா ஏற்கனவே சொன்னாங்க. நாளைக்கு நம்ம வெளிய போகலாம்."

நாங்கள் இவ்வாறு பேசிக்கொண்டு இருக்கும்போது அம்மா வேலை முடித்து வீட்டிற்கு வந்தார்கள். அவர் கையில் சில புத்தகங்கள் இருந்தது. அவைகளை மேஜை மீது வைத்தவுடன் நானும் கீதாவும் அதைப் பார்த்தோம். அவைகள் பெண்களுக்கான மாத மற்றும் வார இதழ்கள்.

"உங்களுக்கு இன்னைக்கு எக்ஸாம் முடிஞ்சது. டெய்லி உங்களுக்கு போர் அடிக்குமே என்று இந்த புக்ஸ் வாங்கினேன்." என்றார் அம்மா.
கீதா ஒரு ஆங்கில இதழ் ஒன்றை எடுத்துக்கொண்டாள். எனக்கு "மங்கையர் மலர்" எடுத்துக் கொடுத்து படிக்கச் சொன்னாள். முன்பு அம்மாவும் கீதாவும் 

"அவள் விகடன்" படிக்கப் பார்த்திருக்கிறேன் என்பதால் "அவள் விகடன்" இதழையும் எடுத்துக்கொண்டேன்.

இரவு உணவு சாப்பிடும் பொது அம்மாவிடம் நாளை வெளியில் செல்வதற்கு அனுமதி வாங்கினோம். அம்மா எங்களை  பத்திரமாக சென்று வரவேண்டும் என்றார். அம்மாவுக்குத் தெரியாது நாங்கள் ஏற்க்கனவே வெளியில் சென்றது. சாப்பிட்டபின் கீதா அவள் அறைக்கு சென்றுவிட்டாள். அம்மா என்னை பாத்திரம் கழுவ கூப்பிட்டார்.

சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருக்கும்போது அம்மா பேச்சு கொடுத்தார்.

"ஏண்டி அபிராமி, இனிமேல் உனக்கு லீவ் தான. என்ன செய்யப் போற?"

"தெரியல.. போர் அடிக்கும் எனக்கு வீட்டுல இருக்க."

"ஆமா, கீதாவும் விளையாட்டு போட்டிக்கு வெளியூர் போயிடுவா. நீ மட்டும் தனிமையில் இருப்ப."

"ஹ்ம்ம்.. என்ன செய்யலாம்னு சொல்லுங்க மா?"

"சரி, நான் யோசிச்சி சொல்றேன்" என்று அம்மா சொன்னபோது கீதாவின் குரல் கேட்டது.

"அம்மா, அக்காவுக்கு போர் அடிக்கும் என்றால் அவளுக்கு சீக்கிரம் மாப்பிள்ளை பாத்து கல்யாணம் பண்ணிவைங்க" என்று சொல்லி கையில் துவைக்க வேண்டிய துணிகளை வைத்துக்கொண்டு படியில் இறங்கி வந்தாள்.

"பாருங்க அம்மா, அவ என்னை கிண்டல் பண்ணுறா. முதல அவளுக்கு கல்யாணம் பண்ணி வைங்க." என்று கோபித்துக்கொண்டேன்.
எங்கள் சண்டையை பார்த்து அம்மா சிரித்துக்கொண்டு இருந்தார்.
"நிறுத்துங்கடி உங்க சண்டையை.. உங்க ரெண்டு பேருக்கும் ஒரே நாளில் தான் கல்யாணம். இன்னொரு சிறப்பு என்னவென்றால், நீங்க ரெண்டு பெரும் ஒரே ஆணுக்குத்தான் கழுத்தை நீட்டனும். அப்போ தான் நீங்க இப்படி சண்டை போடாம உங்க புருஷனை ஒழுங்கா கவனிப்பிங்க." என்று சொல்லி சிரித்தார்.
இதைக் கேட்டதும் எனக்கும் கீதாவும் வெட்கமாய் வந்ததால் நாங்கள் இருவரும் எங்கள் அறைக்கு ஓடிவிட்டோம். பின்பு எனது கட்டிலில் படுத்துக்கொண்டு "மங்கையர் மலர்" படிக்க ஆரம்பித்தேன். இதோ, அப்படியாய் என்னை அறியாமல் தூங்கி விட்டேன்.

அபிராமி ஓர் ஆச்சரியம் - பகுதி 11

இன்னும் பாதி நாள் இருக்கு நான் இந்த சேலையில் இருக்க. இன்று காலை நடந்த நிகழ்ச்சியால் நான் சந்தோசமாக இருக்கிறேன். மாலையில் பூர்ணிமா அவள் அம்மாவுடன் வீட்டுக்கு வந்தாள். எனக்கு அவள் அம்மா ஒரு  நீள புடவையும், ஜாக்கெட் பிட்டும் ஒரு தட்டில் வைத்து கொடுத்தார்.

அம்மா செல்வி அக்காவிடம் சொல்லி அவர்கள் இருவருக்கும் தேநீர் கொண்டுவர சொன்னார். சமையல் அறையில் இருந்த செல்வி அக்காவிடம் சென்று சொன்னேன்."அபிராமி, என் கூட இரு. நான் உனக்கு தேநீர் போட சொல்லித்தரேன்" என்று செயல் முறைகளை சொல்லிக் கொடுத்தார். பின்பு என்னை கொண்டு போய் கொடுக்கச் சொன்னார். அம்மா சொல்லி இருக்கிறார் போல் எனக்கு இந்த மாதிரி வேலைகளை எனக்கு சொல்லித் தரவேண்டும் என்று.

நான் தேநீர் தட்டை கொண்டு வரும்போது என் கையின் அடியில் வேர்வை இருந்து உருத்தியத்தை உணர்ந்தேன். என் ஜாக்கெட் வேர்வையில் நனைந்து இருந்தது தெரிந்தது. இருந்தாலும் புடவை மாற்றும் எண்ணம் இல்லை.எங்கள் இருவர் அம்மாவும் எங்களை கல்லூரியில் சேர்க்கும் வழிகளைப் பற்றி பேசி இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தனர். அவர்கள் இருவரும் அந்த வேலைகளை பாத்துக் கொள்வதாக சொன்னதால் நான் நிம்மதி அடைந்தேன். இன்று நீண்ட நெடிய நாளாய் இருந்ததால் நான் புடவையோடு படுத்து விட்டேன்.
இதோ இன்னொரு நாள் விடிந்து விட்டது. இன்னும் பொதுத் தேர்வுக்கு 2 வாரம் தான் இருக்கு. நான், பூர்ணிமா மற்றும் கீதா மூவரும் எங்கள் வீட்டில் படித்துக் கொண்டிருந்தோம். அம்மாவேறு வீட்டில் இல்லை. எனக்கு திடீர் என்று ஒரு ஆசை வந்தது.

"எனக்கு இன்னக்கி ஒரு பொண்ணு மாதிரி வெளிய போயிட்டு வரணும்னு ஆசை.. பரிட்சைக்கு முன்னாடி ஒரே ஒரு முறை சென்று வந்தால் எனக்கு நிம்மதியா இருக்கும்."

"வேண்டாம்டி அம்மாக்கு தெரிஞ்சா திட்டுவாங்க. என்றாள் கீதா.

"அதுக்குள்ள என்ன அவசரம். பரீட்சை முடியட்டும்" என்றாள் பூர்ணிமா."நான் தான் நேற்றே வயசுக்கு வந்து விட்டேன்ல.. அப்புறம் என்ன?" என்று கிண்டலாய் கேட்டேன். ஒரு வழியாக அவர்களை சம்மதிக்க வைத்தேன். ஒரு வண்டி மட்டுமே வீட்டில் இருந்ததால் நானும் பூர்ணிமாவும்  செல்லலாம் என்று முடிவு எடுத்தோம். பூர்ணிமா நீல டி-ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்திருந்தாதால் நானும் அதே மாதிரி அணியலாம் என்று எண்ணினேன்.



இறுதியாக நான் டி-ஷர்ட் மற்றும் கருப்பு ஜீன்ஸ் அணிந்து வெளியே வந்தபோது கீதாவும் பூரணியும் ஆச்சரியப்பட்டனர்.

 "ஒய் அபிராமி, செமையா இருக்கடி இந்த டி-ஷர்ட்ல" என்றாள் பூர்ணிமா. கீதாவும் ஆம் என்றாள்.

"நான் புஷ்-அப் பிரா மற்றும் பிரா பேட் யூஸ் பண்றேன் இப்போ" என்றேன்.
"அது மட்டும் இல்லாம டைட்டா டி-ஷர்ட் போட்டிருக்க இல்லையா?" கேட்டாள் கீதா. நான் ஆம் என்றேன்.

"என்னடி கீதா, இவ நம்மளைவிட ஸ்பீடா இருக்கா. விட்டா இன்னைக்கே புது பாய் பிரெண்ட் புடிச்சிடுவா போல" - பூர்ணிமா.

"சீ போங்கடி. எனக்கு அது எல்லாம் புடிக்காது"

"பாக்கலாம்.. பாக்கலாம்" என்று பூர்ணிமா வெருப்பேற்றினாள்.

இதோ, நானும் பூரணியும் ஸ்கூட்டியில் போய் கொண்டிருக்கிறோம். பூர்ணிமா வண்டி ஓட்ட நான் பின்னால் அமர்ந்திருந்தேன். அப்போது பின்னாடி சத்தம் கேட்டது. அது என்னவென்று வண்டியின் கண்ணாடி வழி பார்த்து விட்டாள் பூரணி.

"அபிராமி, சில பொறுக்கி பசங்க நம்மை பின் தொடர்ந்து வராங்க. நீ அமைதியா இரு"

"ஏன்?"

"பொண்ணுங்க ரோட்ல போனா அப்படித்தான் நடக்கும்"

"அது தெரியும் டி.. நான் ஏன் அமைதியா இருக்கணும்னு கேட்டேன்"

"லூசு.. நீ எதாவது பண்ணா அவுங்களுக்கு உன்னைப் பத்தி தெரிஞ்சிரும். அதான் சொல்றேன்" என்றபோது எனக்கும் அது சரி என்று பட்டது.

"மச்சி, சூப்பர் பிகருங்க டா" என்றான் ஒருவன்.

"வண்டி ஓட்டுற பொண்ணு சூப்பர் டா" என்றான் இன்னொருவன்.

"பின்னாடி இருக்குற குட்டிய பாருடா. நைட் முழுக்க அனுபவிக்கலாம்" என்று இது மாதிரி எங்கள் காதில் விழும்படி பேசிக்கொண்டிருந்தனர். எங்கள் இருவருக்கும் கோபம் வந்தாலும் அமைதியாக இருந்தோம்.

அப்போது தெருவில் இருந்த சில காவல் துறையினர் எங்களை மடக்கி லைசென்ஸ் கேட்டனர். எங்கள் பின்னால் வந்த அந்த ஆண்களையும் பிடித்தனர்.

மனதுக்குள் பயம் வந்து விட்டதால் நான் அமைதியாக இருந்தேன். பூர்ணிமா, அவள் அம்மா ஒரு கலெக்டர் என்று சொன்னதும் எங்களை விட்டுவிட்டனர். அந்த பசங்களையும் விட்டு விட்டனர் சில நோட்டுக்களை வாங்கிக் கொண்டு.
நாங்கள் கிளம்பும் போது, அந்த பையன் என்னை பின்னாடி தட்டி விட்டான். நான் அதிரிச்சி அடைந்தேன். பூர்ணிமா இதை கவனித்து காவலரிடம் சொன்னதும் அந்த இருவரையும் பிடித்து அழைத்துச் சென்றனர்.
பின்னால் நாங்கள் இருவரும் வீடு வந்து நடந்ததை கீதாவிடம் சொன்னேன்.

"அது என்னபா, உன்னை ஒரு நைட் முழுக்க வச்சி என்ன பன்னுவான் அவன்?" என்று கிண்டலடித்தாள் கீதா.

"ச்சீ போடி. சும்மா என்னை கிண்டல் பண்ணுறீங்க" என்று சிணுங்கினேன்.
இறுதியாக இன்று நடந்ததை அம்மாவிடம் சொல்லக் கூடாது என்று கேட்டுக்கொண்டேன்.

அபிராமி ஓர் ஆச்சரியம் - பகுதி 10

அன்று காலை ஏழுந்தவுடன் கீதா என்னை பாத்திரம் கழுவ அழைத்தாள். பாத்திரம் கழுவிக் கொண்டே நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது நான் நேற்று கடையில் என்னைப் பார்த்து சிரித்த காரணம் கேட்டேன்.


"இல்ல, நேத்து காலைல நீ என்னோட கிலிவேஐ்(cleavage) தெரியுது என்று சொன்ன... நியாபகம் இருக்கா உனக்கு?"

"ஆமாம் சொன்னேன். அதுக்கு என்ன இப்போ?"

"நேற்று நீ கடையில் அந்த பிங்க் பிரா போட்ட போது உனக்கும் கிலிவேஐ் தெரிந்தது. அந்த சிலிக்கான் பிரா பேட் வைத்தவுடன் இன்னும் அம்சமாய் இருந்தது. அதான் சிரிச்சேன்."



"நிஜமா நல்லா இருந்ததாடி? அப்படி காமிக்கலாமா? தப்பு இல்லை?"


"தப்பு என்று எதுவும் இல்லடி. எனக்கு அது புடிக்காது. அப்படி  பப்ளிக்ல போகும் போது, எல்லா பசங்களும் பாப்பாங்க. அது ஒரு மாதிரி கூச்சமா இருக்கும்."

இப்படி நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது அம்மா அம்மா வந்து கீதாவை தனியாக கூப்பிட்டு ஏதோ சொல்லிவிட்டு சென்றார். பின்பு கீதா கையில் சிலவற்றைக் கொண்டு வந்தாள்.


"அம்மா உனக்கு இந்த கிரீம் எல்லாம் போட்டு விட சொன்னாங்க.  ஏன் என்று எல்லாம் என்னைக் கேக்காதடி. எனக்கு தெரியாது."



"என்ன கிரீம் இது?"


"உடம்பில் உள்ள முடியை எடுக்க. இது போட்டதுக்கு அப்புறம் உன்னோட ஸ்கின் ரொம்ப மென்மையா இருக்கும். சூப்பரா இருக்கும்."

"சரி, அம்மா சொன்னா ஒரு காரணம் இருக்கும். எனக்கு போட்டு விடு"

"அதுக்குள்ள ஆசைய பாரு. போய் டிரஸ் கழட்டிட்டு, பேன்ட்டி மட்டும் போட்டுக்கிட்டு வா" என்றாள். நானும் அவள் சொன்னது போலவே செய்தேன்.

பின்பு அவள் வீட்(veet) எனப்படும் அந்த கிரீம் எடுத்து என் கை மற்றும் கால்களில் தடவினாள். என் நெஞ்சினிலும் தடவினாள். ஏற்கனவே எனக்கு இயற்கையாகவே உடம்பில் முடி இல்லாவிட்டாலும், இந்த கிரீம் நல்ல ஒரு மென்மையை தரும் என்றாள் கீதா.


 
சிறிது நேரம் கழித்து கை கால்களை துடைத்தவுடன் என் மேனி பளப்பளவென்று பட்டு போல் மென்மையாக இருந்தது. கீதா சென்று என் அம்மாவை கூட்டிகிட்டு வந்தாள்.


அம்மா அப்போது வந்து என்னிடம் ஒரு உள்பாவாடை கொடுத்து கட்டிக்கச் சொன்னார். ஒரு பெண் குளிக்கும் போது கட்டும் முறையில் கட்டுமாறு கீதாவை எனக்கு உதவச் சொன்னார். நான் கீதா உதவியுடன் கட்டிக் கொண்டதும் என்னை சரியாக 10:30 மணிக்கு பின் பக்கம் வரச் சொன்னார். அப்போது தான் நல்ல நேரம் ஆரம்பமாம். எனக்கு ஒரே குழப்பம். இன்று நடக்கும் அனைத்தும் எனக்கு வியப்பாக இருந்தது.


"என்ன நடக்குது கீதா? என்ன ஆச்சு அம்மாவுக்கு இன்னக்கி?" கீதாவிடம் கேட்டேன்.


"எனக்கு மட்டும் என்ன தெரியும். பொறுத்திருந்து பாக்கலாம்"


இன்னும் அம்மா சொன்ன நேரத்துக்கு இன்னும் அரை மணிநேரம் இருப்பதால் , நான் என் அறையில், அந்த உள்பாவாடை கட்டிக்கொண்டு அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தேன். கீதா என்னுடன் இருந்தாள்.


இதோ மணி காலை 10:30 ஆகிவிட்டது.என்னை அழைத்து வரும்படி அம்மா கூப்பிட்டது எங்கள் காதில் விழுந்தது. நானும் கீதாவும் தோட்டத்துப் பக்கம் சென்றோம்.



அங்க அம்மாவுடன் எங்கள் வீட்டு வேலைகாரி செல்வி, பூர்ணிமா  மற்றும் அவளின் அம்மா இருந்தனர். சற்றுத் தள்ளி வேலைக்காரியின் மகள் சாந்தி என்னைப் போலவே உடம்பை மறைக்குமாறு உள்பாவாடை கட்டி ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தாள். என்னனயும் அவள் அருகில் இருந்த மற்றொரு நாற்காலியில் அமரச் சொன்னார் பூர்ணிமாவின் அம்மா. எனக்கு ஒன்றும் புரியாமல் அம்மாவை பார்த்தேன்.



அம்மா அப்போதுதான் விளக்கமாய் சொன்னார்.  வேலைக்காரி எங்கள் வீட்டில் ஒரு அங்கம்தான். பல வீட்டில் வேலை செய்தாலும் எங்கள் மேல் ஒரு தனி அன்பு. அவர்களின் செலவுகளை என் அம்மாதான் பார்த்துக்கொள்வார்.


செல்வியின் மகள் சாந்தி 8ஆம் வகுப்பு படிக்கிறாள். நேற்று வயதுக்கு வந்துவிட்டாளாம். அவளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்த வேண்டுமென்பது செல்வியின் ஆசை. அதற்கு அம்மாவிடம் பணம் கேட்டிருக்கிறார். என் அம்மாவிற்கு தன்னோட பெண் அபிராமிக்கு இது மாதிரி மஞ்சள் நீராட்டு விழா நடத்தி பார்க்க முடியவில்லை என்று ஒரு ஏக்கம் இருந்ததாம். அதனால் எனக்கும் சாந்திக்கும் சேர்த்து ஒரே மஞ்சள் நீராட்டு விழாவாக கொண்டாட ஒரு யோசனை தோன்றியது. அதனால் இந்த ரகசிய ஏற்பாட்டினை செய்தார்.

எனக்கு காரணம் தெரிந்ததால், என்ன சொல்வது என்று தெரியாமல் எனக்கு அழுகை வந்து விட்டது. என் அம்மாவும் பூர்ணிமா அம்மாவும் என் அழுகையை நிப்பாட்ட முயன்றனர்.

"நல்ல நாள் அதுவுமா இப்படி அழுகாதடி. இன்னக்கி உனக்கு ஒரு முக்கியமான நாள். சந்தோசமா இரு" என்றார் என் அம்மா.

"இதுக்கே இப்படி அழுதா எப்படி.கல்யாணம் பண்ணிக்கிட்டு உன் புருஷன் வீட்டுக்கு போகும் பொது எப்படி அழுகப்போறியோ" என்று பூர்ணிமாவின் அம்மா கிண்டல் அடித்தார்.

வேலைக்கார அக்காவோ , "அப்போ வீட்டோட மாப்பிளை பார்த்து கட்டி வைக்கவேண்டியதுதான்" என்று அவர் பங்குக்கு பேசினார்.


எனக்கு வெட்கம் வந்து என் அம்மாவை கட்டிப் பிடித்துக்கொண்டேன்.


"உன் புருஷனை இப்படி கட்டிப்பிடு.. இப்போ உங்கம்மாவை விடு" என்று செல்வி அக்கா என்னை அழைத்துக்கொண்டு நாற்காலியில் அமரச் செய்தார்.

எனக்கு வெட்கம் கலந்த சந்தோசம் ஆட்கொண்டது. அந்தப் பெண் சாந்திக்கும் அப்படித் தான் இருக்கும் போல். நாங்கள் இருவரும் தலை தாழ்த்தி வெட்கத்துடன் அமர்ந்திருந்தோம்.


பின்பு எனக்கு என் அம்மாவும், சாந்திக்கு செல்வி அக்காவும் உடம்பு முழுவதும் மஞ்சள் தேய்த்தனர். பூர்ணிமாவும் கீதாவும் அம்மாவோடு சேர்ந்து கொண்டு என் கை மற்றும் கால்களில் மஞ்சள் தேய்த்தனர். எனக்கு வெட்கம் மட்டுமே வந்தாதால் வார்த்தைகள் எதுவும் வரவில்லை.

சிறிது நேரம் கழித்து, எங்கள் மீது மஞ்சள் நீர் ஊற்றி குளிப்படினார்கள். கீதா அவள் மட்டும் தனியாக எனக்கு மஞ்சள் நீராட்ட வேண்டும் என்று ஆசை பட்டதால் அவள் மட்டும் மீண்டும் ஒரு முறை தனியாக எனக்கு மஞ்சள் நீராட்டினாள்.


"தங்கச்சிக்கு அப்புறம் அக்கா வயசுக்கு வருவது இந்திய தொலைக்காட்சியில் இது தான் முதல் முறை, அதனால் நான் இதை மறக்க மாட்டேன்" என்று நகைச்சுவையுடன் பேசினாள். அம்மா சொன்னதால் என்னை அழைத்துக் கொண்டு கீதா அவள் அறைக்கு சென்றாள்.


"அம்மா உன்னை டிரஸ் மாத்திட்டு திரும்பி வர சொன்னாங்க. புது டிரஸ் எடுத்து வைத்திருக்காங்க" என்றாள் கீதா.

"அது எல்லாம் இருக்கட்டும். இதை எல்லாம் ஏன் இப்படி ரகசியமா வச்சீங்க? ஏன் முன்னாடி சொல்லவில்லை?"

"எனக்கே தெரியாதுடி. எல்லாம் அவுங்க முடிவு பண்ணி இரகசியமா பண்ணிட்டாங்க" என்று சொல்லிகொண்டிருந்த போது பூர்ணிமா உள்ளே வந்தாள்.

"இப்போ உங்க அம்மவுக்கும் செல்வி அக்காவுக்கும் தெரிஞ்சி போச்சி என்னைப் பத்தி. என்ன நினைப்பாங்க என்னைப் பத்தி?"

"ஏன் இதுக்கு போய் கவலைப்படுற? எப்படியும் நீ ஒரு பெண்ணாய் வெளியே வரணும். நாலு பேரு பாப்பாங்க. அதனால நீ அதைப்பத்தி எல்லாம் கவலைப் படக்கூடாது. இப்போ அவுங்களுக்கு தெரியும் என்பதால் இன்னும் நீ சுதந்திரமா இருக்கலாம். நாங்க நிறைய பேரு உனக்கு சப்போர்ட் இப்போ" என்று அவள் சொன்னது உண்மை என்று தோன்றியது.

அப்புறம் நான் உடை அணிய ஆரம்பித்தேன். புதிதாய் வாங்கிய லேஸ் வைத்த  புஷ்-அப் பிரா அணிந்த பின் சிலிகான் பிரா பேட் உள்ளே வைத்தேன். பின்பு அதன் கூட எடுத்த பேன்ட்டி அணிந்து கொண்டு பாத்ரூமில் இருந்து வெளி வந்து இருவரிடமும் காமித்தேன். அப்போது அம்மா உள்ளே வந்தார்கள்.

முதன்முறையாக அம்மா என்னை உள்ளாடையில் பார்கிறார்கள். எனக்கு அது ஒரு மாதிரி கூச்சமாய் இருந்தது. அம்மாவுக்கும் அப்படித்தான் போல். என்னை இதுவரை ஒரு மகனாய் பார்த்து விட்டு , இப்போது ஒரு பெண்ணாய் அதுவும் பெண்கள் அணியும் உள்ளாடையில் பார்கிறார். அவர் அழுது விட்டார்.


பின்பு அவரே சுதாகரித்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்.



"நான் இப்படி உன்னை பிரா போட்டுக்கிட்டு, உண்மையான ஒரு பொண்ணு  வெட்கபடுகிற மாதிரி பார்ப்பேன்னு கனவிலும் நினைக்க வில்லை. நீ வெட்க படுறதை பாக்கும்போது எனக்கு ஆச்சரியமா இருக்கு. இவ்ளோ நாள் எங்கடி போச்சி உனக்குள்ள இருந்த இந்த பெண்மை? இப்படி உன்னை இப்போது பார்த்து விட்டதால் உன்னை ஒரு பெண்ணாக தான் என் மனசு பார்க்கும் இனிமேல்" என்று சொல்லியபடி ஆடைகளை எடுத்துக்கொடுத்தார்.


அந்த பையில் பச்சை-நீளம் கலந்த புடவை, ரவிக்கை, கருப்பு உள்பாவாடை இருந்தது. அம்மா மற்றும் பூர்ணிமா உதவியுடன் ரவிக்கை அணிந்து கொண்டேன். அணிந்திருந்த பிராவிற்கு மேல் ரவிக்கை வைத்து கொஞ்சம் இழுத்து ரவிக்கையின் அந்த 5 ஹூக் மாட்டும் போது ஒரு பரவசத்தை உணர்ந்தேன். பின் உள்பாவாடை எடுத்து  இடிப்பில் கட்டிக்கொண்டேன். அம்மா எனக்கு புடவை கட்டிவிட்டார்.

கையில் வளையல்கள், கழுத்தில் 1 பெரிய நெக்லஸ், 1 சிறிய நெக்லஸ், காலில் வெள்ளி கொலுசு அணிந்தேன். நெக்லஸ் அணிய கீதா உதவினாள். பின்பு நான் வாங்கிய ஜிமிக்கி அணியச் சொன்னார் அம்மா. ஒரு காதில் நான் மாட்டினேன். மற்றொரு காதில் கீதா மாட்டிவிட்டாள். தலையில் விக் அணிந்த பின், அதை அழகாய் வாரிவிட்டு, மல்லிகை பூ வைத்து விட்டார். முதல் முதலாய் இப்போது தான் புடவை அணிகிறேன்.

நடக்கும் போது காலில் இருந்த கொலுசு ஏற்படுத்தும் சத்தமும், தலை அசையும் போது, காதில் இருந்த ஜிமிக்கி என் மேல் உராயும் உணர்ச்சியும் என்னை ஏதோதோ பண்ணியது. பெண்மையின் சுகங்களை அப்போது தான் முழுவதுமாய் உணர்ந்தேன்.


"அபிராமி, உனக்கு இந்த புடவை புடிச்சிருக்கா?"



"ரொம்ப நல்ல இருக்கு அம்மா. எல்லாம் புதுசா இருக்கே.. எப்போ எடுத்தீங்க?"


"அதுவா, அன்னைக்கு நான் உங்களை கடையில் தனியா விட்டுட்டு போனேன்ல. நீங்க கூட கேட்டீங்க.. நான் அப்புறம் சொல்றேன் என்று சொன்னேன்.. உனக்கு இந்த புடவை வாங்கத்தான் வேற கடைக்கு போனேன். அப்புறம் டைலர் கிட்ட கீதா ப்ளௌஸ் அளவு கொடுத்து உனக்கு இந்த ப்ளௌஸ் வாங்கினேன்." என்று சொல்லி என்னை மறுபடியும் தோட்டத்து பக்கம் கூட்டிச் சென்றார்.

அங்கே சாந்தியும் புடவை மற்றும் நகை அணிந்து, அமர்ந்து இருந்தாள். நான் அவளருகில் அமர்ந்தேன். பின்பு அங்கிருந்த அணைத்து பெண்களும் எனக்கும் சாந்திக்கும்  நெத்தியில் கும்குமம் வைத்தனர். நான் தலை குனிந்து பொறுமையாய் இருந்தேன்.


என் வாழ்வின் மிக முக்கியமான நாள் இது. இன்று தான் நான் உண்மையாய் வயதுக்கு வந்ததாய் அம்மா சொன்னார். இதோ எல்லாரும் சென்று விட்டார்கள். நான், அம்மா மற்றும் கீதா மட்டும் இருக்கிறோம் எங்கள் வீட்டில். முதன் முதலாய் அணிந்த இந்த புடவையை இன்று முழுவதும் கலட்டப் போவதில்லை.


உங்களுக்கும் புடவை பிடிக்கும்தானே?

அபிராமி ஓர் ஆச்சரியம் - பகுதி 9

தினமும் கீதா  நைட்டி போட்டுக்கொண்டு படுப்பது எனக்கு பழக்கமாகி விட்டது. நேற்றும் அதான் நடந்தது. அனால் இன்று காலை நான் எழுந்தவுடன் கீதா பொய்யாய் என்னுடன் சண்டை போட்டாள். இந்த பொய் சண்டைகள் மிகவும் சந்தோசமாக இருந்தது. இதோ அந்த சண்டைகள்."ஹேய், ஏன் டி என்னோட நைட்டி போட்டுருக்க? அதான் நேத்து உனக்குன்னு புதுசு எல்லாம் வாங்கியாச்சி இல்ல?""போடி நான் அப்படித்தான் போடுவேன். என் தங்கச்சி நைட்டி நான் போடாம வேற யாரு போடுவா?""சரி தொலைஞ்சி போ... நைட்டி போட்டுக்கோ. ஆனா என் பிரா கூடவா போடுவ?""ஆமாம், அப்படித்தான் போடுவேன்.""அடிப்பாவி, புது புது பிரா வாங்கி வைச்சிருக்க..அப்படி இருந்தும் ஏன் என்னோட பழைய பிரா போடுற?""என்னதான் இருந்தாலும் என் தங்கச்சி பிரா மாதிரி வருமா?" என்றதும் என்னை அடிக்க வந்துவிட்டாள். நாங்கள் இருவரும் சிறு வயது பெண்பிள்ளைகள் போல் வீட்டுக்குள் ஓடிக் கொண்டிருந்தோம். அம்மாவும் இதை பார்த்து சிரித்தார் என்று தான் சொல்ல வேண்டும்.சிறிது நேரம் கழித்து நாங்கள் மூவரும் அமர்த்து சும்மா பேசிக் கொண்டிருந்தோம். அப்போது கீதாவின் மார்பகங்கள் சிறிது தெரிந்தது. அதை பற்றி அவளிடம் சொன்னதும் , எனக்கும் அது மாதிரி அழகாய் தெரியனுமா என்று மெதுவாய் கிண்டல் அடித்தாள்  என் காதில், அருகில் அம்மா இருந்ததால். பின் கீதா நான் சொல்லத் தயங்கியதை பேச ஆரம்பித்தாள்."அம்மா, அபிராமிக்கு நேற்று ஷாப்பிங் புடிக்கல போல.. என்ன கரெக்டா?"அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. முதல் முதலா ஷாப்பிங் போறேன்ல பொண்ணுங்க ட்ரெஸ் வாங்க. அதான் கொஞ்சம் கூச்சமா இருந்தது""இவ பொய் சொல்றா மா. எல்லா டிரஸ் -ஐயும் எவ்ளோ  ஆர்வமா பாத்தா தெரியுமா? நீங்க அங்க இல்லாம போய்டீங்க. நீங்க எங்க போயிருந்தீங்க?""அப்படியா அபிராமி? நான் எங்க போனேன்னு நாளைக்கு தெரியும்""இல்ல அம்மா அவ பொய் சொல்றா" என்றேன் நான்."இல்ல மா. இவ தான் பொய் சொல்றா. இவ ஒரு சுடிதார் காமித்து அது மாதிரி வேணும்னு கேட்டா. அது முதுகு முழுசா தெரியுற மாதிரி இருந்தது. நீங்க ஒத்துக்க மாட்டீங்கன்னு சொன்னேன்" என்று அம்மாவிடம் என்னை மாட்டி விட்டாள்."ஓ.. அப்படியா அபிராமி? சொல்லவே இல்லை? சரி பொண்ணுங்களா, இன்னக்கி நீங்களே போய் உங்களுக்கு என்ன என்ன வேணுமோ அதையெல்லாம் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். நான் ஏதும் சொல்ல மாட்டேன்" என்று அம்மா ஆச்சரியம் அளித்தார்."உண்மையாவா மா சொல்றீங்க" கேட்டாள் கீதா."அமாம்டி, அபிராமி முதல் முதலா என்கிட்ட ஆசை பட்டு கேட்டிருக்கா. அவ சந்தோசமா இருக்கனும். நீயும் எதாவது போய் எடுத்துக்கோ""அப்போ, நாங்க பூர்ணிமா கூட்டிட்டு பஸ்ல போறோம்" என்றேன்."சரிடி என் செல்லங்களா" என்று அவரோட ATM கார்டு மற்றும் சிறிது பணமும் கொடுத்தார் அம்மா.
சிறிது நேரம் கழித்து நான், கீதா, பூர்ணிமா ஷாப்பிங் போக கிளம்பினோம். பூர்ணிமா இளம் பச்சை சுடிதாரும் கீதா அதே நிறத்தில் குர்தி-யும் அணிந்திருந்தனர். நான் ஆண் உடையில் இருந்ததால் எனக்கு சந்தோசம் இல்லை இன்றும்.முதலில் எனக்கு பிரா வாங்க போலாம் என்ற பூர்ணிமா, எங்களை தி-நகர் கடை ஒன்றுக்கு அழைத்தச் சென்றாள். இங்கே தான் அவளும் அவள் அம்மாவும் உள்ளாடைகள் வாங்க வருவார்களாம். கடை மிகவும் பெரிது இல்லை என்றாலும் நிறைய வகைகள் இருந்தன. அவர்கள் அடிக்கடி அங்கே செல்வதால் அங்கே பணிபுரியும் பெண் பூர்ணிமாவிற்கு நன்றாக தெரியும் என்று அவள் சொன்னாள். கடையில் வேறு யாரும் இல்லை எங்களைத்தவிர."நான் எல்லாத்தையும் சொல்லிட்டேன் அவ கிட்ட. ஸோ, கவலைப்படாத. நிம்மதியா நீ ஷாப்பிங் பண்ணலாம்" என்றாள் பூர்ணிமா."என்னடி சொன்ன?""உனக்குத்தான் பிரா வாங்க வந்திருகோம் என்று சொன்னேன்""அய்யோ, ஏன் அப்படி சொன்ன? அவ என்னை பார்த்து சிரிக்க போறா.""அவ என் கூட பத்தாவது வரை என்னோடு பழைய ஸ்கூலில் படித்தாள். நீ ஒன்னும் கவலைப் படாதடி" என்று சொல்லி என்னை இழுத்துச் சென்றாள்.பிங்க் நிற புஷ்-அப் பிரா ஒன்றை என் கையில் கொடுத்து அளவு பார்கச் சொன்னாள் அந்த பெண். அவள் பெயர் பத்மினி என்று அறிந்து கொண்டேன். அளவு சரி பார்க்க என்னை பூர்ணிமா ஒரு அறைக்கு அழைத்து சென்றாள். என்னோடு அவளும் உள்ளே வந்து அந்த பிரா அணிய உதவி செய்தாள். புஷ்-அப் பிரா மார்பகங்களை நல்லா அழகாய் காமிக்கும் என்று சொன்னாள்.என்னை அந்த பிரா அணித்து இருக்க சொல்லிவிட்டு , அவள் போய் கீதா மற்றும் பத்மினி இருவரையும் அழைத்து வந்து காமித்தாள். கீதா என்னைப் பார்த்து எதோ சிரித்தாள், காரணம் தெரியவில்லை.பத்மினி என்னை திரும்ப சொல்லி ஒரு முறை என்னை பார்த்தாள்.பின்பு சில பஞ்சு போன்று இருந்த பேட்களை பூர்ணிமாவிடம் தந்து என் பிரா உள்ளே வைக்கச் சொன்னாள். அவைகளை உள்ளே வைத்ததும் என் மார்பகங்கள் உண்மையான ஒன்றாய் தோன்றியது."இவளுக்கு இயற்கையான மார்பகங்கள் இல்லாததால் இன்னும் பெரிய பேட்(pad) தாங்க. அப்போதான் கரெக்டா இருக்கும்" என்று கீதா பத்மினியிடம் சொன்னதும், பத்மினி சிலிகான்யில் தயாரித்த பெரிய பேட் 2 ஜோடி கொடுத்தாள். அதில் ஒன்றை இப்போது அணிந்து பார்க்கும் படி கீதா கட்டாயப் படுத்தினாள் என்பதால் நான் செய்தேன்."இப்போ எப்படி இருக்கு கீதா? உன்னோட சைஸ் மாதிரி இருக்கா?" என்றேன்."ஆமா. இப்போதாண்டி உனக்கு அம்சமா இருக்கு. உனக்கு இப்போ எல்லா டிரஸ் கச்சிதமா இருக்கும்"பின்பு அந்த பிரா அளவான 36 சைஸ்-யில் மேலும் சில பிரா எடுத்துக் கொடுத்தனர். அந்த பிரா அனைத்திலும் சின்ன ரிப்பன் மற்றும் லேஸ் இருத்தன. பூர்ணிமா வீட்டில் இது மாதிரி பார்த்திருக்கிறேன். நான் ஏதும் மறுப்பு சொல்லாமல் வாங்கிக் கொண்டேன்."நாளைக்கு இந்த லேஸ் வச்ச பிரா போட்டு பாரு. உனக்கே ரொம்ப புடிக்கும். எல்லா பெண்களுக்கும் புடிக்கும்" என்றாள் பூர்ணிமா.அதே நிறங்களில் பேன்ட்டி மேட்சிங் பார்த்து எடுத்துக் கொண்டோம். சிம்மி எனப்படும் ச்லிப்ச் எடுத்துக்கொண்டு சுடிதார் எடுக்க மேல் மாடி சென்றோம். அங்கே ஒரே ஒரு அனார்கலி சுடிதார் மட்டும் எடுத்துக்கொண்டு சுடிதார் தைக்க 3 துணிகளை வாங்கினோம். எனக்கு புடித்த மாதிரி தைக்க வேண்டும் என்பதால் டைலரிடம் கொடுத்து அளவு பார்த்து தைக்க வேண்டும் என்று கீதா சொன்னாள்.புடவை வேண்டுமா என்று பத்மினி கேட்டதற்கு நான் புடவை அணிய இன்னும் வயது இருக்கு என்று வெட்கத்துடன் சொன்னேன்.அதற்கு அவள் "36b சைஸ் பிரா போடணும் என்று ஆசை படும்போதே சேலை அணியும் வயசு வந்துடுச்சி என்று அர்த்தம்" என்று சிரித்தாள். கூடவே மற்ற இருவரும் சிரித்தனர். இறுதியாக எனக்கு மட்டும் 6000 ரூபாய்க்கு துணிகள் வாங்கி இருந்தோம் இன்று மட்டும். கீதாவின் செலவு தனி.
அதற்குள் மதியம் ஆகிவிட்டதால் உணவு உண்ண ஹோட்டல் சென்றோம். உண்டபின் பூர்ணிமா எங்களை ஒரு தெரு ஓர கடைக்கு அழைத்துச் சென்றாள். அது ஒரு கம்மல் கடை. பூர்ணிமா ஒரு கம்மல் வாங்கி அங்கேயே அணிந்தாள். எனக்கும் ஆசை வந்தது."எனக்கும் கம்மல் போடணும்.. அந்த ஜிமிக்கி மாடல் வேணும்" என்றேன்."காது குத்தாம எப்படி போடமுடியும்" என்றாள் கீதா."அப்போ வா, இப்போவே காத்து குத்திக்கலாம்""அம்மா திட்டப் போறாங்க""ஒன்னும் திட்ட மாட்டாங்க" என்று நான் அவர்களை கட்டாயப் படுத்தினேன். அவர்களும் வேறு வழி இல்லாமல் என்னை அழைத்துச் சென்று ஒரு நகை கடையில் காது குத்தித் கொண்டேன். அந்த வழியிலும் ஒரு சந்தோசம் இருந்தது. ரொம்ப ஆர்வமாய் இருந்தேன் வீட்டுக்கு போய் அந்த குடை ஜிமிக்கி அணிய வேண்டும் என்று. பின்னர் வீட்டுக்கு சென்றோம்.வீட்டுக்கு போனதும் முதலில் அதை சொல்லி விட்டாள். அம்மா முதலில் என்ன அவசரம் என்று திட்டினாலும் பின்னர் சமாதானம் அடைந்தார். அனால் நாளை தான் அந்த ஜிமிக்கி மற்றும் இன்று வாங்கிய ஆடைகளை அணிய வேண்டும் என்று கட்டாயமாக சொன்னார் காரணம் சொல்லாமல். அதனால் கீதாவின் பழைய நைட்டி போட்டுக் கொண்டு படுக்கச் சென்றேன்.நாளை காலை நிறைய ஆச்சரியங்கள் காத்திருந்ததை அம்மா மாட்டும் அறிந்தார்.

அபிராமி ஓர் ஆச்சரியம் - பகுதி 8

காலை 6 மணி. அம்மா சொன்னது போல் தினமும் சீக்கிரம் எழுந்துவிட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். அலாரம் அடித்து முடித்து. தூக்கம் வந்தாலும் கட்டிலில் எழுந்து அமர்ந்தேன். நேற்று அம்மா வைத்துவிட்ட மல்லிகை பூவோடு தூங்கி விட்டதால் கட்டில் முழுக்க காய்ந்து போன மல்லிகை பூக்கள் இருந்தன. அந்த மல்லிகையின் வாசம் மிகவும் நன்றாக இருந்தது. முகம் கழுவி, பல் விலக்கி விட்டு கீழே சென்றேன்.கீழே அம்மாவும் கீதாவும் தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர்.எனக்கும் ஊற்றிக் குடுத்தனர்."அபிராமி,  முதல எழுந்தவுடனே கண்ணாடி பார்த்து டிரஸ் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும். எப்படி இருக்க பாரு. எல்லாமே கலைஞ்சி இருக்கு. நீ பொண்ணா இருக்க விருப்பப்படுறது பெருசு இல்ல. பொண்ணு மாதிரி வாழ்றதுதான் பெரிய விஷயம். இங்க வா" என்று என்னை அழைத்தார்.சிறிது மேலும் கீழுமாய் இருந்த என்னுடைய மார்பகங்களை ஒழுங்கு படித்தினார். தலையில் இருந்த காய்ந்த பூக்களை எடுத்து குப்பையில் போட்டார். நேற்று நெற்றியில் இருந்த ஸ்டிக்கர் போட்டு இப்போது கன்னத்தில் ஒட்டிக்கொண்டு இருந்தது. அதையும் எடுத்து நெற்றியில் மீண்டும் வைத்தார்.
"படுக்கும்போது பிரா அப்படிஇப்படி நகரும். நாமதான் சரி படுத்தனும். இங்க பாரு பிரா ஸ்ட்ராப் வெளிய தெரியுது. இன்னக்கிதானே இரண்டாவது நாள், போக போக நீயே கத்துப்பனு நம்பிக்கை இருக்கு" என்று சொல்லிக்கொண்டே அட்ஜஸ்ட் செய்து விட்டார்."அக்கா, என் பெட்ரூம் வாங்க. நேத்து தொவைச்ச துணி எல்லாம் இருக்கு. மடிச்சி வைக்கலாம்" என்றாள்."ஆமாண்டி, நீயும் போய் பண்ணு. அப்போத்தான் பழக்கமாகும்" அம்மா சொன்னார். நானும் அவளும் அவள் அறைக்கு சென்றோம்."எனக்கு நீ மரியாதையா பேசுறது புடிக்கல கீதா. முன்னாடி மாதிரி பேசு. நான் இப்போதான் உனக்கு ரொம்ப நெருக்கமா பீல் பண்ணுறேன்.""எனக்கும்தான் புடிக்கல டி அபி. ஆனா அம்மாக்காக அப்படி பேசுறேன். ""நான் சொல்லுறேன் அம்மாகிட்ட. நீ வாடி போடிஎன்றே பேசு""ஓகே டி அபிராமி" என்று சொல்லி துவைத்து காய்ந்த துணிகளை எல்லாம் கட்டிலில் போட்டாள். எனக்கு அவள் துணிகளை எப்படி மடித்து ஒழுங்கா வைக்கவேண்டும் என்று சொல்லிக் கொடுத்தாள்."கீதா, என்ன இந்த பிரா புதுவிதமா இருக்கு?" என்று ஒருகிரீம் நிற பிராகையில் எடுத்து அவளிடம் காமித்தேன்."இதுவா, இது ஸ்போட்ஸ் பிரா டி. கேம்ஸ் விளையாடுற பொண்ணுங்க போடுறது. நான் த்ரோ பால் விளையாடுறேன் இல்ல. அதான்.""என்ன ஸ்பெஷல் இதுல?""பொண்ணுங்க விளையாடும்போது ஓடவும், குதிக்கவும் வேண்டி இருக்கும். அப்போ நம்ம மார்பகங்கள் நம்மோடு சேர்த்து குலுங்கி ஆடும் டி.அப்போ ரொம்ப கஷ்டமா இருக்கும்விளையாட. அதான் இந்த பிரா போட்டுகிட்டா அப்படி ஆடாது""என்னோட மார்பகங்கள் குலுங்குவதை நான்அனுபவிக்கணும் பா""உன் ஆசை புரியுது டி. கண்டிப்பா நான் சொல்றேன் என்ன பண்ணலாம்னு. இப்போ ஷாப்பிங் போனும். போய், ரெடி ஆகு" என்று அனுப்பிவைத்தாள். இன்று  ஷாப்பிங்  போகலாம்  என்று  அம்மா  சொல்லி  இருந்தததால் நானும் கீதாவும் கிளம்பி  தயாராக  இருந்தோம். நான்  ஒரு  பெண்ணாக பரீட்சை முடியும் வரை வெளியே செல்லக் கூடாது என்று அம்மா சொல்லி இருந்தார். அதனால் நான்  ஆண்  உடையும்,  கீதா பிங்க் நிற சுடிதார்-யும் அணிந்து இருந்தோம். அம்மா வழக்கம்போல் புடவை அணிந்திருந்தார். எப்போதும்  அம்மாவும்  கீதாவும் ஷாப்பிங் போவதென்றால் ஸ்கூட்டி-யில் செல்வார்கள். இன்று நாங்கள் மூன்று பெண்கள் போவதால் எங்கள் கார் எடுத்துக் கொண்டோம்.முதலில் நாங்கள் ஆடைகள் எடுக்கச் சென்றோம். மேலாடைகளுக்கு ஏற்ற மாதிரி உள்ளாடைகள் எடுக்க வேண்டும் என்று அம்மா காரணம் சொன்னார்.நாங்கள் சென்ற கடை பெண்களுக்கான கடை. இல்லை இல்லை அதை கடல் என்றுதான் சொல்லவேண்டும். மிகவும் பிரமாண்டமாய் இருந்தது. எங்கு பார்த்தாலும் பெண்கள் ஆடையாய் இருந்தாதால் என் கண்ணுக்கும் மனதிற்கும் பிடித்திருந்தது."நீங்க ரெண்டு பேரும் இங்க ஷாப்பிங் பண்ணிட்டு இருங்க.. நான்ரெண்டாவதுமாடியில ஷாப்பிங் பண்ணுறேன்" என்று எங்களை அங்கே விட்டுச்சென்றார்.நாங்கள் பலவிதமான ஆடைகளை தேர்ந்தெடுத்து வைத்தோம். கீதா பொதுவாக பிங்க் நிறத்தை விரும்பியதால் நானும் அதிகமாக பிங்க் நிற ஆடைகளை எடுத்தேன்.அங்கே கடையில் ஒரு பெண் இருந்தாள். அவளது சுடிதார் மிக நன்றாக இருந்தது. அவள் முதுகை மிக அதிகமாக காமித்தது. அது மாதிரி வ வேணும்னு கேட்டபோது அம்மா ஒத்துக்க மாட்டங்கன்னு கீதா சொன்னாள்.பின்பு நாங்கள் எடுத்த ஆடைகளை போட்டு பாத்து அளவு சரியா இருக்கானு சரிபார்த்தோம். கடையில் கூட்டம் இல்லாததால் என்னால் எளிதாக அணிந்து பார்க்க முடிந்தது.பின்பு சிறிதுநேரம் கழித்து அம்மா வந்தார்கள். நாங்கள் எடுத்து வைத்திருந்த துணிகளை பார்த்துவிட்டு பணம் செலுத்தினார்.நாங்கள் அடுத்து சென்றது உள்ளாடைகள் வாங்க. எனக்கு மட்டும் 7 பிராக்கள் வாங்கினார். பேண்டி சேர்த்துதான். என்னிடம் அம்மா எதுவும் கேட்க வில்லை.நாங்கள் மிகவும் சோர்வாக இருந்ததானால் நாங்கள் சீக்கிரம் வீட்டுக்கு வந்தோம். இன்றைய நாள் எனக்கு மிகவும் சந்தோசமாமானதாக இல்ல. எதோ ஒன்று குறைந்தது போன்ற ஒரு உணர்வு. விட்டிற்கு வந்த பின்பு எல்லோரும் உறங்க சென்றோம்.நாளை தான் எல்லா ஆடைகளையும் முழுதாக அணிந்து பார்க்கவேண்டும்.

அபிராமி ஓர் ஆச்சரியம் - பகுதி 7

காலையில் எழுந்தவுடன் மேலிருந்து என் தங்கச்சியை அழைத்தேன். அவளும் மேலே வந்தாள்.
"என்ன அக்கா? என்ன வேணும்?"
"ஒன்னும் இல்லடி. முதல்தடவை என்னை நீங்க ஒரு பொண்ணா பாக்கப்போரிங்க. அதனால் நான் நல்ல ஒரு ட்ரெஸ் போட்டுக்கிட்டு உங்க முன்னாடி வரலாம்னு இருக்கேன்"
"நல்ல ஐடியா தான். கொஞ்சம் இருங்க அக்கா, இதோ வரேன்" என்று சென்ற அவள் சிறிது நேரம் கழித்து வந்தாள்.

"அக்கா, இந்தாங்க என்னோட பாவாடை சட்டை. நான் வயசுக்கு வந்தப்போ எடுத்தது. நம்ம ரெண்டு பேரும் ஒரே சைஸ் தான். ஸோ, உங்களுக்கும் கரெக்டா இருக்கும்கா" என்று என் கையில் கொடுத்தாள். அது ஒரு நல்ல சிகப்பு நிற பாவாடை சட்டை.
மேலும் அவள் ஒரு பிரா மற்றும் பேட்டி தந்தாள்.
"இது தான் நீங்க போட்ட என்னோட முதல் பிரா, பேன்ட்டி. இதை இனிமேல் நீங்களே வச்சிக்கலாம் அக்கா. என்னோட கிப்ட் உங்களுக்கு" என்று சிரித்தாள்.
"ரொம்ப தேங்க்ஸ் கீதா"
"இருக்கட்டும்.. என் அக்காவுக்காக இதை கூட தரமாட்டேனா? நீங்க டிரஸ் பண்ணிட்டு சொல்லுங்க. அம்மா கடைக்கு போயிருக்காங்க. அவங்க வெயிட் பண்ண சொன்னங்க."
"சரி டி" என்று சொல்லி அவள் சென்றபின் கதவை தாழிட்டேன். பிறகு எனது நைட்டி கழட்டிவிட்டு குளிக்கச் சென்றேன். இப்போது அணிந்திருக்கும் பிரா, பேன்ட்டி கூட நானே வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்துவிட்டேன்.
குளித்துவிட்டு கீதா குடுத்த பிரா மற்றும் பேண்டி போட்டுக் கொண்டேன்.  பின்பு பாவாடை சட்டை அணிய முயற்சித்தேன். போன முறை அணிந்த மாதிரி இல்லை இது.பின்பக்கம் 7 அல்ல 8 கொக்கிகள் இருந்தன. முதுகில் கொக்கிகள் இருந்தாதல் என்னால் அணிய முடியவில்லை. மீண்டும் கீதாவை அழைத்தேன்.
"அக்கா, நான் கொடுத்த பிரா போட்டு இருக்கீங்களா?"
"ஆமா கீதா. நீ கொடுத்த அதே பிங்க் நிற பிரா மற்றும் பிரவுன் நிறபேண்டி போட்டுஇருக்கேன்"
"அப்புறம் ஏன் முன்னாடி இப்படி சமமா இருக்கு? அக்கா, ஒரு பொண்ணுக்கு முன்னழகு ரொம்ப முக்கியம். நீங்க முன்னாடி பண்ண மாதிரி துணி வைங்க பிரா உள்ள" என்று சொல்லிவிட்டு வெளியே காத்திருந்தாள்.
நான் அவள் சொன்னதுபோல் பிராவினுள் சில துணிகளை வைத்தேன். பின்பு அவள் மீண்டும் உள்ளே வந்து முதுகுக்கு பின்னால் இருந்த அனைத்து கொக்கிகளையும் மாட்டி விட்டாள்.
"ஏய் கீதா, இப்போ திடிர்னு டிரஸ் ரொம்படைட்டா இருக்குற மாதிரி இருக்கு பா"
"அப்படித்தான் இருக்கும் கா, இப்போ உங்களுக்கு என்னமாதிரி மார்பகங்கள் இருக்குல.அதான். சரி, நீங்க இங்கேயே இருங்க. நான் அம்மா வந்ததும்மேல வாரேன்" என்று சொல்லி சென்றுவிட்டாள்.
நான் சிறிது நேரம் கண்ணாடியில் எனது உடையை கண்டு ரசித்தேன். பின்பு அவள் கையில் ஒரு பையுடன் வந்தாள்.
"அம்மா இப்போதான் வந்தாங்க. உனக்காக என்ன வாங்கி வந்துருக்காங்க பாரு" என்று அதை காமித்தாள்.அது ஒரு தலை முடி விக். என் தலையில் வைத்து எப்படி அணிய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தாள். எனக்கு அது ரொம்ப பிடித்திருந்தது. என் கழுத்துக்கு கீழ் சிறிது நீண்டிருந்தது.
"அக்கா, நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. எனக்கே பொறாமையா இருக்கு. இப்போ வாங்க. அம்மா ரொம்ப ஆர்வமா இருக்காங்க அவங்க பெரிய பொண்ண பாக்க" என்று என்னை கீழ் அழைத்துச் சென்றாள்.


அம்மா என்னைப் பார்த்து உண்மையில் ஆச்சரியபட்டர்கள். அவர் கண்ணில் ஒரு ஆனந்தம்.
"இங்க வாடி அபிராமி, என் தங்கமே. எவ்ளோ அழகா இருக்க நீ. என் கண்ணே பட்டிடும் போல. இவ்ளோ நாள் எங்கடி இருந்த? ரொம்ப லட்சணமா இருக்கா இல்லடி உன்னோட அக்கா?"
எனக்கு ரொம்ப வெட்கமாய் இருந்தது. தலையை குனிந்து கொண்டேன்.
"ஆமா அம்மா. எனக்கே கொஞ்சம் பொறாமையா தான் இருக்கு அக்காவை பாக்கும்போது" என்றாள் கீதா.
"நீயே கண்ணு வைகாதடி. அவளுக்கு திருஷ்டி சுத்தி போடணும் அப்புறம். சரி, இது நீ வயசுக்கு வந்தப்போ எடுத்த பாவாடை சட்டைதான இது"
"அதே ட்ரெஸ் தான் மா இது."
"அப்போ எடுத்தது இன்னக்கி இவளுக்கு யூஸ் ஆகுது. சரி அபிராமி, என் பக்கத்துல வந்து உட்காரு" என்று அழைத்தார். நான் அம்மா அருகில் அமர்ந்தேன்.
"கொஞ்சம் திரும்பி உட்காருடி" என்றார் அம்மா.
நான் திரும்பி அமர்ந்ததும் அம்மா அவுங்க கழுத்தில் இருந்த ஒரு நெக்லஸ்  கழட்டி என் கழுத்தில் மாட்டிவிட்டார்.
"ஏன் அம்மா.. நீங்க போட்டுக்க வேண்டியதுதான?" என்று கேட்டேன்.
"பரவாயில்லை. அம்மா நகை எல்லாம் பொண்ணுக்குதான. உனக்கு இது நல்லா இருக்கு" என்றார். அப்படியே எனக்கு நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு வைத்துவிட்டார்.
"அப்போ உங்க நகை எல்லாம் எனக்கு இல்லியா" என்றாள் கீதா.
"உங்க ரெண்டு பேருக்கும் தாண்டி எல்லாம் சொந்தம்".
"நீங்க என் கல்யாணத்துக்கு 100 சவரன் நகை போடணும். அக்காவுக்கு உங்க இஷ்டம்" கிண்டலடித்தாள் கீதா.
"என்னோட பெரிய பொண்ணு அபிராமிக்கு தான் நான் 200 சவரன் போட்டு கல்யாணம் பண்ணுவேன்" என்று அவரும் கிண்டலடித்தார். எனக்கு ரொம்ப வெட்கம் வந்ததால் என் அம்மாவின் தோளில் முகத்தை புதைத்துக் கொண்டேன்.
"அக்கா நேற்று ஒரு பொண்ணுமாதிரி அழுத, இன்னக்கி பொண்ணு மாதிரி வெட்கப்படுற. நிஜமா நீ பொண்ணு மாதிரி எனக்கு தோணுது" கீதா சொன்னாள்.
"என்னடி சந்தேகம் உனக்கு. அவ என்னோட பொண்ணுதான்.சரி, பிரா போட்டிருகியா இல்லையா?"
"போட்டிருக்கிறேன் மா.கீதா அவ பிரா ஒன்னு எனக்கே கொடுத்துட்டா. அதை தான் இப்போ போட்டிருக்கிறேன்."
"ஆனா அவளோட சைஸ் 36 ஆச்சே. உனக்கு ஒக்கே வா அபி?" கேட்டார் அம்மா.
"எனக்கும் 36 சைஸ் தான் வேணும்" என்று வெட்கத்துடன் சொன்னேன். அம்மவும் கீதாவும் மாறிமாறி பார்த்து அவர்களுக்குள் சிரித்து கொண்டனர்.
எனக்கு என்ன செய்வதுன்னு தெரியாமல் என் அறையில்  படிக்கப்போவதாக சொன்னேன்.உடனே அம்மா என்னை இருக்க சொலிவிட்டு பூஜை அறையில் இருந்து மல்லிகை பூ கொண்டு வந்து வைத்து விட்டார்.
"ஒரு வயசு பொண்ணு, நெத்தியில பொட்டும், தலையில் பூ இல்லாமல் எப்போதும் இருக்க கூடாது" என்றார். பின் நான் என் அறைக்கு சென்றேன். மேலிருந்து நானே என்ன முன்னழகை பார்க்கும்போது என் மார்பகங்கள் கொடுத்த மேடு பள்ளங்கள் என்னை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தது.
நான் படித்துக்கொண்டிருக்கும் போது பூர்ணிமா வந்தாள். கீதா அவளுக்கு போன் பண்ணதாகவும் நான் முதல் முதலில் போட்ட அவளோட பிரா, பேண்டி எனக்கே தரும்படி கீதா சொன்னாளாம். அதான் என்கிட்டே அதை கொடுக்க வந்தாள்.
"அபிராமி, யாரு டிரஸ் டி இது. ரொம்ப சூப்பர்." என்று கேட்டாள் பூரணி.
"இது கீதா டிரஸ்.அவ வயசுக்கு வந்தப்போ எடுத்ததாம்"
"அப்போ நீ எப்படி வயசுக்கு வரபோற? நான் வயசுக்கு வந்து ரொம்பநாள் ஆச்சி. நீ?" என்று சிரித்தாள். மீண்டும் என்னை வெட்கம் பிடித்துக்கொண்டது.
மேலும் அவள் "டெய்லி நான் தான் இனி உன்னோட வீட்டுக்கு வரணும். நம்ம இங்க ஒன்னா படிக்கலாம்" என்றாள். இரவும் ஆனது. பூர்ணிமா சென்றுவிட்டாள்.
நான், அம்மா, கீதா ஒன்றாக அமர்ந்து இரவு உணவு சாப்பிட்டோம். நாளையில் இருந்து நானும் வீட்டு வேலை எல்லாம் பாக்கணும்னு சொல்லிட்டாங்க. நாளைக்கு நாங்க மூணு பேரும் ஷாப்பிங் போகபோறோம். பின்பு உள்ளாடைகளை கழற்றாமல் அம்மா எடுத்துக் கொடுத்த நைட்டி போட்டுக் கொண்டு படுக்கச் சென்றேன்.

அபிராமி ஓர் ஆச்சரியம் - பகுதி 6

                           குடும்பத்தில் புதுப் பெண்
நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தபோது என் அறை கதவை தட்டும் சத்தம் கேட்டது. அதற்குள் காலை ஆகிவிட்டது போல். நான் உடனே சென்று கதவை திறக்கலாம் என்று செல்லும் போதுதான் தெரிந்தது நான் என் தங்கச்சி உடை அணிந்திருக்கிறேன் என்று."கதவை திறடா ஆனந்த். இன்னக்கி எனக்கு மேட்ச் இறுதி போட்டி இருக்கு. சீக்கிரம் குளிச்சிட்டு கிளம்பனும்" என் தங்கை கத்திக் கொண்டிருந்தாள்.நான் என்ன செய்வது என்று தெரியாமல் அவசரம் அவசரமாய் ஆடைகளை கலைந்தேன். மேலாடையை கழற்றிவிட்டேன். ஆனால் என் உள்ளாடைகளை கழற்ற முடியவில்ல. பிரா ஹூக் கழட்ட ரொம்ப கஷ்டப்பட்டும் முடியவில்லை. அதற்குள் கீதா கதவை வேகமாக தட்ட ஆரம்பித்தாள்."இன்னுமா தூங்குற.. எழுந்திரிடா. கதவை திற. நான் குளிக்கணும்" என்றாள்.நான் இப்போது பிரா மற்றும் பேன்ட்டி போட்டுக்கொண்டு நின்று இருந்தேன். பிராவினுள் வைத்திருந்த துணிகளை எதுத்து விட்டேன். அடுத்து எனக்கு என்ன பண்றதுன்னு புரியவில்லை. அவரசரமாக என்னுடைய ஆண் டி-ஷிர்ட் மற்றும் ஷாட்ஸ் போட்டுக்கொண்டேன்.பின்பு மெதுவாய் கதவைத் திறந்தேன். உள்ளிருந்த படியாய் என்னவென்று கேட்டேன். அவள் கதவைதள்ளிக்கொண்டு;உள்ளே வந்தாள்.அப்போதுதான் என்னோட பிராவும் பேண்டியும் ஆடைகளில் இருந்து வெளியே தெரிகிறது என்று உணர்ந்தேன். இப்போது நான் அதை அட்ஜஸ்ட் பண்ணக்கூட முடியாது . முயற்சித்தால் மாட்டிக்கொள்வேன் என்று தெரியும். அவள் பார்த்து விடக்கூடாது என்று கடவுளை வேண்டினேன்."டேய் , என்னடா இது?" என்று  கத்தினாள்.அய்யயோ, பார்த்துவிட்டாள் என்று தெரிந்தது. இருந்தாலும் சமாளிக்க  முயிர்ச்சிதேன்."என்னடி, என்ன ஆச்சு?""என்ன போட்டிருக்க உன் டி-ஷிர்ட் உள்ளே?""ஒன்னும்  இல்லே""இல்ல இல்ல நான் பார்த்தேன்" என்று பத்ரூம்குள் சென்று பார்த்தாள். அங்கே அவள் மேலாடை மட்டும்தான் இருந்தது. உள்ளாடைகளை காணவில்லை.நான்  மறைத்தாலும் அவள் விடுவதாய்  இல்லை."ஏன் நீ என்னோடதை போட்டிருக்கிற?, சொல்றியா இல்லை  அம்மாவை கூப்பிடவா?""அது எல்லாம் எதுவும் இல்லை""இல்லை . நான் நிச்சியமாய் பார்த்தேன்""என்ன பார்த்த? இங்க  பாரு , என்கிட்டே எதுவும் இல்லை" என்று  என் கையை காட்டினேன்."பொய்  சொல்லாதடா. என்னால உன்கிட்ட அதை சொல்ல  வெட்கமா இருக்கு. இரு அம்மாவை கூப்பிடுறேன். அம்மா, இங்க  வாயேன்" என்று கத்தினாள் ."இரு இரு , அம்மாவை  கூப்பிடாத. நானே சொல்லிடுறேன்" என்றேன்."அப்போ  ஒத்துக்குறதானே?""ஆமா""சரி.. எனக்கு இப்போ நேரமாச்சு.. நான் விளையாடிட்டு வரேன். சாயந்திரம் பேசலாம்."அவள் குளித்துவிட்டு சென்றுவிட்டாள். அவள்  என் முன்னே வரும் போதெல்லாம் என்னை வெட்கம் பிடுங்கித்தின்றது. உள்ளாடைகளை இப்போது களைந்துவிட்டு கட்டிலில் அமர்ந்தேன். என்னை அறியாமல் நான் அழத் தொடங்கிவிட்டேன். நான் நாள்முழுவதும் அழுது கொண்டு இருந்தேன். நான் வெளியே வராததைகண்டு அம்மா என் அறைக்கு வந்தார். உடம்பு சரி இல்லாததால் இன்று அவர் லீவ்."ஏன்டாகாலைல இருந்து உள்ளே இருக்க.. என்ன ஆச்சு? உனக்கும் உடம்பு சரி இல்லையா?""ஒன்னும் இல்ல.""என்னடா அழுதியா என்ன? என்ன காரணம்?""அதான் ஒன்னும் இல்லன்னு சொல்றேன்ல. நீ போ""சரி சரி, கொஞ்சம் தூங்கி ரெஸ்ட் எடு. எல்லாம் சரியாகிடும்" என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அவர் சென்ற பின்னும் என் அழுகை நிக்கவில்லை.நான் அவள் வீட்டுக்கு வராததால், பூர்ணிமா என்னைத்தேடி என் அறைக்கு வந்துவிட்டாள்."என்னடி அபிராமி அழுவுற? உன் பாய் பிரண்டு முத்தம் கொடுத்துதானா?" என்று விஷயம் தெரியாமல் கிண்டலடித்தாள். அதனால் இன்னும் அதிகமா அழ ஆரம்பித்தேன்.நான் அவளிடம் நடந்ததை சொன்னேன். அவள் எனக்கு சமாதானம் சொன்னாள். ஆனால் என்னால் அதை ஏற்க முடியவில்லை."இது எப்படியும் ஒருநாள் கண்டிப்பா தெரியப் போகுதுடி. அது இப்போ தெரிஞ்சா என்ன? நமக்குதான நல்லது?""கீதா என்னை ஒரு மாதிரி கேவலமா பாத்தா. எனக்கு ஒரு மாதிரி இருந்தது""முதல் தடவை பாக்குறா.. அதான் அப்படி. நான் பேசுறேன் அவகிட்டையும் அம்மாகிட்டயும்.""ஒத்துப்பாங்களா என்னை ஒரு பொண்ணா?""கண்டிப்பா. நீ கவலைப்படாத. நான் கீதா வரும்வரை வெயிட் பண்ணுறேன்" என்று என்னருகில் அமர்ந்தாள். நாங்கள் இருவரும் காத்திருந்தோம் கீதாவின் வருகைக்காக. என் மனதுக்குள் ஒவ்வொரு நிமிடமும் ஒரு வருடம் போல் தோன்றியது.கீதா இரவு 7 மணிக்குவீட்டுக்கு வந்தாள். நான் அறையைவிட்டு வெளியே வரவில்லை என்பதை அம்மவிடம் இருந்து தெரிந்து கொண்டாள். கீழ் அறையில் தண்ணீர் வரவில்லை என்பதால் இப்போதும் என் அறைக்கு அவள் குளிக்கவந்தாள். அழுகை முகத்துடன் என்னைப் பார்த்தாள். பின்பு பூர்ணிமாவை பார்த்து சிரித்துவிட்டு பத்ரூம்குள் சென்றாள். அவள் குளித்துவிட்டு வரும்போது சாட்டின்(satin) நைட்டி அணிந்திருந்தாள். இன்று நடந்த விளையாட்டு போட்டியில் வென்றுவிட்டதாக சந்தோசமா சொன்னாள்."கீதா, நான் சொல்லுறதைக் கேளு" பூர்ணிமா ஆரம்பித்தாள்."சொல்லுடி பூரணி""அபிராமி இன்னக்கி நடந்ததை சொன்னாள். ஒரே அழுகை""யாரு அபிராமி?" என்று புரியாமல் கேட்டாள்."இதோ. இவள்தான் அபியாமி" என்று என்னைக் காட்டினாள்."என்ன சொல்ற? இது என்னோட அண்ணன்?""நான் உனக்கு எல்லாத்தையும் சொல்றேன்" என்று எல்லாவற்றையும் விளக்கினாள்."இல்ல இல்ல என்னால இதையெல்லாம் ஒத்துக்க முடியாது. அவன் வாழ்க்கை என்ன ஆவது? பொண்ணு மாதரி காலேஜ் படிச்சா ஆண் மாதிரி அவன் வேளைக்கு போகமுடியாது.""அது எல்லாம் ஒன்னும் கஷ்டம் இல்ல. எங்க அம்மா கலெக்டர் தான. ஈசியா எல்லா செர்டிபிக்கேட் வாங்கிடலாம்."அவள் சிறிது நேரம் யோசித்தாள்."இதுதான் அவனுக்கு சந்தோசம்னா எனக்கும் ஓகே தான். நானே அம்மாகிட்ட பேசி சம்மதம் வாங்குறேன்" என்றாள்.பின்பு, கீதாவும், பூர்ணிமாவும் சென்று அம்மாவிடம் பேசினார்கள். அம்மா அதிர்ச்சி அடைந்தார்கள்.பின்பு அவர் தெளிவாக பேசினார்கள்."எனக்கு கொஞ்சம் கஷ்டமாவும் இருக்கு, கொஞ்சம் சந்தோசமாவும் இருக்கு. ரொம்ப வருஷம் தவம் இருந்து பெத்தபையன் இவன். இவன ஒரு பொண்ணா பார்க்க என் மனசு வலிக்குது.ஆனா அவன் பூர்ணிமா என்ற பிரண்டுக்காக இவ்ளோ தியாகம் பண்றான்னு நினைக்கும்போது எனக்கு பெருமையா இருக்கு. ஒரு பெண்ணுக்காக அவனே ஒரு பெண் மாதிரி இருக்கணும்னு நினைக்குறான்.அதுதான் அவனுக்கு விருப்பம் என்றாள் எனக்கும் சம்மதம்தான். என்னோட இறந்துபோன இரண்டாவது குழந்தை அபிராமி தான் இப்போ இங்க இருக்குறதா நான் நினைச்சிகுறேன்" என்று சொன்னபோது அவரின் கண்கள் கலங்கி இருந்தது."அதனால்தான் அபிராமி என்ற பெயர் வச்சிக்கிட்டா அவ. என்கிட்டே முன்னாடியே சொல்லிருக்கா" என்று பூர்ணிமா சொன்ன போது அம்மா என்னை ஓடி வந்து கட்டிப்பிடித்தாள். நான்மிக அதிகமா அழத் தொடங்கி விட்டேன்.கட்டுப்படுத்த முடியாமல் தேம்பி தேம்பி அழுது கொண்டு இருந்தேன்."இங்க பாருங்கடி, எப்படி அழுறா என்று. ஒரு வயசுப்பொண்ணு அழுகுற மாதிர அப்படியே அழுகிறாள்" என்ற சிரிப்போடு சொன்னார் அம்மா."சீ, போங்கமா" என்று நான் வெட்கத்துடன் சொன்னேன்.உடனே அங்கே இருந்து 3 பெண்களும் வாய்விட்டுச் சிரித்தனர். பின்பு நாங்கள் எல்லோரும் சாப்பிட வரும்மாறு அம்மா கூப்பிட்டாள். பூர்ணிமாவும் எங்களோடு வந்தமர்ந்தாள். அப்போது அம்மா பேசத் தொடங்கினார்."இன்றில் இருந்து எனக்கு 2 பொண்ணுங்க. மூத்தவ அபிராமி. சின்னவ கீதா. எனக்கு இப்போ பொறுப்பு அதிகமாயிடிச்சி.கீதா, இனிமேல் அவள அக்கா என்றுதான் கூப்பிடனும். முன்னமாதிரி அவன், இவன் என்று மரியாதை இல்லாமல் பேசக்கூடாது. அபிராமிதான் எனக்கு இனி செல்ல பொண்ணு" என்றபோது கீதா பொய்யாய் கோபித்துக் கொண்டாள். பின்பு அம்மாவே பேசத் தொண்டங்கினார்."அபிராமி, இனிமேல் நீ கீதா ட்ரெஸ் போடணும்னு அவசியம் இல்ல. உனக்கு புது டிரஸ் வாங்கலாம். ஆனால் +2 பரீட்சை முடியும்வரை நீ வீட்டுக்குள் மட்டும்தான் உடை அணியவேண்டும். அதுக்கு அப்புறம் நீ வெளியே பெண் போல் செல்லலாம். உனது பள்ளியில் எந்த பிரச்சனையும் வரக்கூடாது, அதனால்தான் சொல்றேன்.""சரிமா.. நான் இப்போ நல்ல பொண்ணு. நீங்க சொல்றத கண்டிப்பா கேட்பேன்" என்றேன். நேரம் ஆனதால் பூரணி அவள் வீட்டுக்கு சென்று விட்டாள்.நான் என் அறைக்கு சென்றபின் கீதாவும் என் பின்னே வந்தாள்."அக்கா, ரொம்ப சாரி. காலைல இருந்து உன்னை ரொம்ப அழ வச்சிட்டேன். எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு இப்போ. எனக்கு ஒரு அக்கா கிடைசிச்டாங்க.""எனக்கும் ரொம்ப சந்தோஷம்""அக்கா,  உங்களுக்கு வேணும்னா என்னோட டிரஸ் எடுத்து போட்டுக்கலாம். ஆனால் என்னோட பிரா, பேன்ட்டி மட்டும் போடக்கூடாது. பொண்ணுங்க உள்ளாடைகளை ஷேர் பண்றது நல்லது இல்ல. அதான் சொல்றேன்""புரியுதுடி கீதா"."ஆனா இன்னும் சிலநாள் மட்டும் என்னோட உள்ளாடைகளை போட்டுக்கலாம். உங்களுக்கு புதுசு வாங்கும் வரை. இன்னக்கி நைட் என்னோட இந்த நைட்டி போட்டுக்கோங்க" என்று நைட்டி மற்றும் உள்ளாடைகளை வைத்துவிட்டு சென்றாள். நாங்கள் எல்லோரும் மிகவும் உணர்ச்சிவயப்பட்டதால் அதிகமாய் யாரும் பேசிக் கொள்ளவில்லை.எனக்கு இன்று தான் வாழ்வின் மிக முக்கியமான நாள். வாழ்கையில் இதுவரை இவ்வளவு சந்தோசமா தூங்க சென்றது இல்லை.