Tuesday 3 May 2016

தாயுமானவன்



என் பெயர் ஸ்வேதா. வயது 20. புனே திரைப்பட கல்லூரியில் படித்து வருகிறேன். என் தாய் தந்தை இருவரும் விவாகரத்து பெற்று 10 ஆண்டுகள் முன்னர் பிரிந்து வாழ்கின்றனர். எதற்காக விவாகரத்து பெற்றனர் என்று இன்றுவரை எனக்குத் தெரியாது. என் அம்மா இரண்டாவது திருமணம் முடிந்து இப்போது அமெரிக்காவில் இருக்கிறார். என் அப்பா சென்னையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். அவர் திரைப்படத்துறை தொடர்புடைய ஒரு பிரபல நிறுவனத்தை நிர்வகித்து வந்தார். நான் புனேயில் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தேன். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என் தந்தையை பார்க்க சென்னை வருவேன். சென்ற மாதம் என் தந்தையின் பிறந்தநாளை அவருடன் கொண்டாட சென்னைக்கு கிளம்பினேன். சென்னைக்கு வந்தேன். என் தந்தையின் பிறந்தநாளை கொண்டாட கேக் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தேன். என் வீட்டின் கதவு பூட்டியிருந்தது. என் அப்பா இன்னும் வீட்டிற்க்கு வரவில்லை என நினைத்து என்னிடம் இருந்த சாவியால் கதவை திறந்து வீட்டிற்க்குள் சென்றேன். வீடு முழுவதும் இருட்டாக இருந்தது. ஆனால் என் தந்தையின் படுக்கை அறையில் மட்டும் விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது. அங்கு சென்று பார்த்த நான் அதிர்ச்சியடைந்தேன்.
அங்கே என் தந்தை பாவாடை ரவிக்கை அணிந்துக் கொண்டிருந்தார். அப்பொழுது தான் புடவை கட்ட ஆரம்பித்தார். எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. நான் கோபமாக அங்கிருந்து கிளம்ப நினைக்கையில் என் அப்பா என்னைப் பார்த்து விட்டார். அவரும் அதிர்ச்சியடைந்தார். அவருக்கு அவமானமாகப் போய்விட்டது. அவர் உடனே அணிந்திருந்த உடைகளை மாற்றி ஹாலுக்கு வந்தார். நான் மிகவும் கோபமாக அவரிடம் பேசவே பிடிக்காமல் ஸோஃபாவின் ஒரு மூலையில் அமர்ந்திருந்தேன். என் அருகில் வந்த அப்பா என் அருகில் வந்து தரையில் அமர்ந்தார். அவர் என் கைகளைப் பிடித்துக்கொண்டு ஓவென தேம்பித் தேம்பி அழுதார். ஸ்வேதா நீயும் என்னை விட்டுட்டு போய்விடாதே. நான் இந்த நிமிஷம் வரைக்கும் உயிர் வாழ்வதே உன் ஒருத்திக்காக தான். கொஞ்சம் நான் சொல்வதை கேட்டுட்டு உன் முடிவை சொல்லும்மா. நீ என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம். ஆனால் நீயும் என்னவிட்டுட்டு போய்விடாதேனு சொன்னார். நான் கோபமாக அவரது கைகளை உதறிவிட்டு என்ன சொல்லப் போறீங்கனு கேட்டேன். எனக்கு பத்தாம் வகுப்பில் இருந்தே பெண்களைப்போல உடையணிய பிடிக்கும். வீட்டில் யாரும் இல்லாத போது என் அக்காவின் உடைகளை அணிந்துக் கொள்வேன். என் திருமணத்திற்கு பிறகு நானும் பத்து வருடங்களாக எனக்கு ஆசை ஏற்படும் போது மிகவும் கட்டுப்பாட்டுடன் இருந்தேன். ஒரு கட்டத்திற்க்கு மேல் என்னால் முடியவில்லை. எனவே உன் அம்மாவிடம் எனக்கு இருந்த பெண்கள் உடையணியும் ஆசையைப் பற்றி சொல்லிவிட்டேன். ஆனால் உன் அம்மா என்னை பற்றி தவறாக நினைத்து என்னிடம் தினமும் சண்டை போட்டு நான் எவ்வளவோ கெஞ்சியும் கடைசியில் என்னுடன் வாழ விருப்பமில்லை என்று விவாகரத்து பெற்று நம்மை பிரிந்து சென்றுவிட்டாள். உன்னையும் தன்னுடன் அழைத்துச்செல்ல விருப்பமில்லை என்று என்னுடன் விட்டுச் சென்றாள். அன்றுமுதல் உனக்காக தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன். உன்னிடமும் என் பழக்கங்களை சொன்னால் எங்கே நீயும் என்னைவிட்டு போய்விடுவாயோ என்று மறைத்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு ஸ்வேதா என்று சொல்லிவிட்டு அவரது அறைக்கு சென்றுவிட்டார். நானும் பத்து வருடங்களுக்கு முன் நீதிமன்றத்தில்தான் என் அம்மாவை கடைசியாகப் பார்த்தேன். இந்த பத்து வருடங்களும் என் அப்பா என் மேலிருந்த பாசத்தினால் வேறு திருமணம் செய்துக்கொள்ளாமல் எனக்கு ஒரு தந்தையாக மட்டுமில்லாமல் ஒரு தாயாகவும் என் மனதில் தாயில்லாத குறை தெரியாமல் பாசமழை பொழிந்து எனக்காக தன் சுகங்களை இழந்து வாழந்த உத்தமர் அவரது இந்த ஆசையையும் எனக்காக விட்டுவிட தயாராக இருந்த என் தந்தையை அந்த நொடி முதல் என் தாயாகவும் நினைக்க ஆரம்பித்தேன். மறுநாள் அப்பாவின் அறைக்குச் சென்றேன். அங்கு என் தந்தை இல்லை. எங்கே சென்றிருப்பார் என்று தேடினேன். அவர் எனக்காக காபி தயார் செய்து எடுத்துக் கொண்டு வந்தார். நான் எதுவும் சொல்லாமல் அவர் கொடுத்த காபியை குடித்து விட்டு என் அறைக்கு சென்றுவிட்டேன். என் தந்தையும் குழப்பத்துடனே அலுவலகம் சென்றார். நானும் சிறிது நேரம் கழித்து கடைக்கு சென்று JEANS, TOPS மற்றும் சில உடைகள் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தேன். மறுநாள் என் தந்தையின் பிறந்தநாள். நான் காலையிலிருந்து என் தந்தையுடன் பேசவில்லை. புனேவில் இருக்கும் போது தினமும் அரைமணி நேரமாவது என் தந்தையுடன் பேசுவேன். மாலை என் தந்தை வாடிய முகத்துடன் வந்தார். என் அருகில் வந்து உனக்கும் நான் பெண்கள் உடையணிவது பிடிக்கவில்லை என்று புரிந்துக்கொண்டேன். இனிமேல் நான் பெண்களின் ஆடைகளை அணியமாட்டேன். நீயும் என்னிடம் பேசாமல் இருந்து விடாதே என்று சொன்னார். நானும் இரவு என்ன சமைக்கனும்னு கேட்டேன். உனக்கு என்ன பிடிக்குமோ அதையே சமைச்சுடு ஸ்வேதா எனக்கு பசிக்கல எதுவும் வேணாம்னு சொல்லிட்டு அவரோட அறைக்கு சென்று விட்டார். நானும் எதுவும் சமைக்காமல் என் அறைக்கு சென்று தூங்காமல் எப்ப மணி 11.59 ஆகும்னு காத்துகிட்டு இருந்தேன்.
சரியாக 11.59 க்கு என் தந்தையின் அறைக்குள் நான் வாங்கியிருந்த உடைகளையும் பிறந்தநாள் கேக்கையும் எடுத்துக் கொன்டு நுழைந்தேன். சரியாக 12 மணிக்கு அவரை எழுப்பி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று அவரது கன்னத்தில் முத்தமிட்டேன். அவருக்கு நான் அவருடன் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. அவரை தயாராக இருந்த கேக்கை வெட்டச் சொன்னேன். அதில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உமா என்று இருந்தது. என் தந்தையின் முழுப் பெயர் உமாபதி. அவருக்கு ஒன்றும் புரியவில்லை. நான் தான் என்ன அம்மா யோசிக்குரீங்க? முதல்ல கேக்க வெட்டுங்க. என் மன்னிச்சுடுங்க அம்மா உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி தரனும்னு தான் காலைல இருந்து நான் பேசாம இருந்தேன். இனிமேல் நீங்க எப்ப விரூம்புரீங்களோ அப்ப உங்களுக்கு பிடிச்ச உடையணிந்துக் கொள்ளுங்கனு சென்னேன். அப்பா இது என் அம்மாவுக்கு என் பரிசு. நான் காலையில எழுந்திருக்கும் போது என் அம்மாவோட முகத்தில தான் முழிக்கனும்னு ஆசைப்படுறேன் . குட்நைட்னு சொல்லிட்டு என் அறைக்கு சென்றேன். காலை என் அம்மா உமா என்னை காபி கொண்டு வந்து எழுப்பினார். என் அம்மா மிகவும் அழகாக சிவப்பு நிற பட்டுப் புடவைய கை நிறைய கண்ணாடி வளையல் அணிந்து நெற்றியிலும் வகிட்டில் குங்குமம் வைத்து அந்த உமாதேவியைப் போல பார்த்தவுடன் கையெடுத்து கும்பிடும் தேவதையாக எனக்கு தெரிந்தார். ஆனாலும் என் முகம் வாடியிருப்பதை பார்த்த அவர் உன் முகம் ஏன் வாடியிருக்குனு தெரியும் ஸ்வேதா. எனக்கு புடவை தான் ரொம்ப பிடிக்கும். JEANS, TOPS லாம் போட்டு பழக்கமில்லமா கோவிச்சுக்காதனு சொன்னாங்க. நானும் சரி இன்னைக்கு முழுக்க என் அம்மா என் கூட இருக்கணும் இது என் கட்டளைனு சொன்னேன். அம்மாவும் நானே இன்னக்கு முழுதும் உமாவாகதான் என் பெண்ணோட இருக்கனும்னு ஆசைப்பட்டேன் ஸ்வேதானு சொல்லிட்டு என்னை குளிச்சுட்டு வரச் சொன்னாங்க. நானும் குளிச்சுட்டு வந்து காலை சிற்றுன்டி சாப்பிட்டு நீங்க இன்னைக்கு முழுதும் எனக்கு அம்மாவாக இருக்கனும் அதனால நான் கடைக்குப்போய் எல்லாம் வாங்கிட்டு வரேனு சொல்லி போய்ட்டு வந்தேன். அம்மாவும் ரொம்ப அனுபவிச்சு சமையல் பண்ணாங்க. அம்மா சமையல் ரொம்ப அற்புதமா இருந்தது.

இரண்டு பேரும் சாப்பிட்டு முடித்ததும் அவங்களோட அறையில் ஒன்னா படுத்துக்கிட்டு இருந்தோம். அப்பநான் அம்மா இவ்வளவு நாளா உங்கள பத்தி எனக்கு தெரியாம இருந்தது. ஒரு மகளா அப்பாகிட்ட பகிர்ந்துக்க தயங்கின விஷயங்கள உங்ககிட்ட ஒரு தோழியா பகிர்ந்து கொள்வேன். நீங்களும் என்னை உங்க தோழிதாக நினைச்சு பழகணும். நமக்குள்ள எந்த ஒளிவு மறைவும் இருக்க கூடாதுனு சொன்னேன். அவங்களும் சரினு சொன்னாங்க. சில நேரங்களில் என் தோழி உமாவ பெயர சொல்லியும் கூப்பிடுவேன் என்றேன். அம்மா எனக்கு முழு சம்மதம்டி. நீ .என்ன வாடி போடினு கூப்பிட்டாலும் சந்தோஷம் தான். எனக்கு இருக்க ஒரே தோழியை நான் சாகுர வரைக்கும் இழக்க மாட்டேனு சொன்னாங்க. இன்னைக்கு உமாவா சமையல் பண்ணும்போது வீட்டு வேலைகள் செய்யும் போது எப்படி இருந்துச்சு அம்மானு கேட்டேன். அதுக்கு அவங்க ஒவ்வொரு நொடியையும் அனபவிச்சேன் ஸ்வேதா. என்னை நீ அம்மாகவும் ஏத்துகிட்டது தான் எனக்கு வாழ்நாளில் கிடைச்ச பெரிய பதவினு என்ன கட்டிப் பிடிச்சு முத்தம் தந்தாங்க. நானும் உங்கள அம்மாவாக மட்டுமில்ல நல்ல தோழியாகவும் பழகுவேன்ଞஎன்றேன். அம்மாவும் சரிடி ஸ்வேதானு சொன்னாங்க. அப்ப நான் நீங்க உமாவாக உடையணிந் தனிமையில் படுத்துக் கொண்டிருக்கும் போது எப்படி இருக்கும். உங்க பக்கத்தில் யாராவது ஆண்மகன் இருந்தா அவன் கூட சந்தோஷமா இருப்பியா உமானு கேட்டேன். அதற்கு அம்மா நான் பெண்கள் உடையணியும் போது என்னை ஒரு ஒரு பெண்ணாகதான் பாவித்து ‍இருப்பேன். நான் ஒரு ஆண்தான். சில நேரங்களில் பெண்கள் உடை அணிந்தாலும் எந்த நொடியிலும் ஒரு ஆணுடன் படுக்கையை பகிர்ந்துக் கொள்ளும் எண்ணம் வந்ததில்லை. இன்னும் உண்மைய சொல்லனும்னா நான் ஒரு பெண்ணுடன் என் படுக்கையை பகிர்ந்து உடலுறவு கொண்டு பத்து வருடங்கள் ஆகிறது ஸ்வேதா. எந்த ஒரு உண்மையான CROSS DRESSERம் தன் மனைவியை தவிர மற்ற பெண்களை சகோதரியாகத்தான் நினைப்பான். என்னை பிரிந்தாலும் உன்னை பெற்றவளைத்தவிர வேறு பெண்ணுக்கு என் மனைவு என்ற அந்தஸ்த்தை தரமாட்டேன் என்றார். அப்படி என்றால் உங்கள் ஆசைகளை எப்படி தீர்த்துக் கொள்வீங்க என்று கேட்டேன். அதற்கு அவர் மனமிருந்தால் மார்க்கமுண்டு. தன் மனைவியை உண்மையாக காதலிப்பவன் அவன் இறந் பிறகு மண்ணில் புதைத்தாலும் அவளுக்கு துரோகம் செய்ய மாட்டான். ஒரு உண்மையாந. CROSS DRESSERம் வேறு ஒரு ஆணிடம் உடலுறவு கொள்ள கனவிலும் நினைக்கமாட்டான் என்றார். இப்படி கள்ளமில்லா அன்புடன் ஒரு தந்தை கிடைத்தது என் பூர்வஜென்ம பலன் என்றே சொல்வேன்.
குறிப்பு:- இந்தக் கதை ஒரு CROSS DRESSER வாழ்வின் நடந்த உண்மை நிகழ்வுகளே.

நிர்மல் நிர்மலாவாகிய கதை

என் பெயர் நிர்மல். வயது 27. ஒரு வேலையில்லா பட்டதாரி. ஒரு சிறிய நடுத்தர அளவான குடும்பத்தின் மூத்த மகன். என் தாய், தந்தை, தங்கை மற்றும் தம்பியுடன் வாழ்ந்து வந்தேன். என் தந்தை ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அம்மா ஹவுஸ் ஃவைப். தங்கை கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தாள். தம்பி +2 படித்துக் கொண்டிருக்கிறான். நான் நன்றாக படித்ததால் பத்தாம் வகுப்பில் மாநில அளவில் மூன்றாம் இடத்திலும் பன்னிரன்டாம் வகுப்பில் இரண்டாம் இடமும் வந்தேன். அதனால் எனக்கு merritல் அண்ணா பல்லைல்கழகத்தில் இடம் கிடைத்தது. என் தந்தையும் என் குடும்ப சூழ்நிலை பற்றி கவலைப்படாமல் என் படிக்க வைத்தார். நானும் படித்து முடித்து பல இடங்களில் முயற்ச்சித்தும் தகுந்த வேலை கிடைக்காமல் இருந்தேன். பத்தாவது படிக்கும்போதே எனக்கு பெண்களைப்போல உடையணிய ஆசை. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அம்மா மற்றும் தங்கையின் உடைகளை அணிந்து சந்தோஷப்படுவேன். என் குடும்ப சூழ்நிலை காரணமாக என்னுடைய ஆசைகளை அடக்கிக்கொண்டு வாழ்ந்து வந்தேன்.
ஒருநாள் என் நண்பனின் தந்தையின் ஆலோசணை மற்றும் சிபாரிசின் மூலம் வங்கியில் கடன் வாங்கி சொந்தமாக ஒரு சிறுநிறுவனத்தை துவங்கினேன். இரண்டே வருடங்களில் கடுமையாக உழைத்து ஒரு நல்ல நிலைமைக்கு வந்தேன். என் தந்தை என் படிப்பிற்க்காக வாங்கிய கடனையும் வங்கியில் வாங்கிய கடனையும் அடைத்தேன். ஒரு அழகிய பெரிய வீட்டைக்கட்டி வாடகை வீட்டில் வாழ்ந்த நாங்கள் எங்கள் சொந்த வீட்டிற்க்கு மாறினோம். மீண்டும் என்னுள் இருந்த நிர்மலா உயிர் பெற்றாள். தினமும் இரவு எனக்கு பிடித்த புடவை, சுடிதார், நைட்டி அணிந்து சந்தோஷமாக வாழ்ந்து வந்தேன்.
என் கடின உழைப்பால் என் நிறுவனமும் வளர்ந்து நல்ல நிலைமைக்கு வந்தேன். என் தங்கைக்கும் அவள் காதலித்தவனையே இருவரின் பெற்றோர் சம்மதமுடன்திருமணம் வெகுவிமரிசையாக நடத்தினேன். என் தம்பியும் நன்றாக படித்து அவன் விருப்பியவாரே அவனும் அமெரிக்காவில் ஒரு பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து செட்டில் ஆனான். இனிமேல் நான் இந்தியா வரமாட்டேன். என் அமெரிக்க மனைவியுடன் இங்கு தான் இருப்பேன் என்று கூறிவிட்டான் . இதைக்கேட்ட என் தந்தை மாரடைப்பில் காலமானார். சில மாதங்கள் கழித்து என் அம்மாவும் என் திருமணம் பற்றி என்னிடம் பேசினார். அப்போது நான் என் அம்மாவிடம் என் மனதில் உள்ள ஆசைகளை சொன்னேன். எனக்கு பெண்களைப்போல உடையணியும் பழக்கம் சிறுவயதில் இருந்து இருக்கிறது. மேலும் என் மனைவியாக வருபவள் உங்களிடம் பாசமாக நடந்துக் கொள்வாள் என்றும் உறுதியாக சொல்லமுடியாது. எனவே எனக்கு திருமணம் செய்ய விருப்பமில்லை என்று சொனனேன். என் அம்ம அப்படியென்றால் நீ திருநங்கையாக மாறப்போகிறாயா என்று கேட்டார். நான் அதற்கு இப்போது இருக்கும் நிலையில் என் தொழில் மற்றும் தங்கையின் வாழ்க்கை பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதால் திருநங்கையாக மாறும் எண்ணமில்லை, நான் ஒரு ஆண் தான் பெண்களைப்போல உடையணிய பிடிக்கும் அவ்வளவு தான் என்றேன். என் அம்மாவிடம் நான் வெளியுலகத்திற்க்கு உங்கள் மகன் நிர்மலாகவும் மனதளவில் உங்கள் மகள் நிர்மலாவாகவும் கடந்த 15 வருடங்களாக வாழ்ந்து வருகிறேன். என் வாழ்நாள் முழுதும் உங்களை பிரியமாட்டேன். அம்மா என்னை உங்கள் மகள் நிர்மலாவாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அம்மாவின் காலில் விழுந்து அழுதேன். என் அம்மா எதுவும் சொல்லாமல் அழுதுக்கொண்டே முதலில் சாப்பிடு மற்றதை காலை பேசிக்கொள்ளலாம் என்று சொல்லி அவரது அறைக்கு போய்விட்டார். எனக்கு சாப்பிட பிடிக்காமல் என் அறைக்கு சென்றேன். அன்று இரவு நான் நீண்ட நாள் கழுத்து ஆணுடையில் தூங்கினேன். எனக்கு நரகவேதனையாக இருந்தது. எப்போது தூங்கினேன் என்றே தெரியவில்லை.
மறுநாள் காலை என் அம்மா என் அறைக்கு வந்து என்னை எழுப்பினார். எனக்கு என் அம்மாவைப் பார்க்க தர்மசங்கடமாய் இருந்தது. அம்மா என்னிடம் நிர்மலா எழுந்துரிடி என் செல்லமே என்றார். எனக்கு வானத்தில் பறப்பதை போன்று உணர்ந்தேன். அம்மா என்னை உங்க மகளா ஏத்துகிட்டீங்களா இல்ல என் சந்தோஷத்துக்காக நிர்மலானு கூப்பிடுரீங்களா என்றேன். அம்மா இந்த குடும்பத்திற்காக நீ உன்னோட சந்தோஷங்கள் எல்லாத்தையும் இழந்துட்டடி இனிமேல் என் மூத்த மகளோட சந்தோஷம் தான் எனக்கு முக்கியம். மனப்பூர்வமா உன்னை என் மகளா ஏத்துகிட்டேன்டீ நிர்மலா முதல்ல இந்த காபிய குடிச்சுட்டு வாடி என் ராசாத்தினு என் நெற்றியில் பாசமா முத்தம் கொடுத்தாங்க. நானும் குளித்துவிட்டு என் தொழிற்சாலைக்கு கிளம்பினேன். அம்மா என்னிடம் நிர்மலா இன்னக்கி வெள்ளிக்கிழமைடி ஒரு 5 மணிக்கு வீட்டுக்கு வந்துடுமானு சொன்னாங்க. எனக்கு மறுபிறவி எடுத்த உற்சாகம். மாலை 5 மணிக்கு வீட்டுக்கு வந்தேன். அம்மா சீக்கிரம் குளிச்சுட்டு வாடி. மறக்காம முகத்துக்கு மஞ்சள் பூசிக்க எல்லாம் தயாரா வைச்சிருக்கேன்னு சொல்லிட்டு எனக்கு என் பொண்ணு நிர்மலாவ பாக்கனும்னு காலைல இருந்து காத்துகிட்டு இருக்கேனு சொன்னாங்க. நானும் உற்சாகமா குளிக்கப் போனேன். குளிச்சுட்டு வந்து பாத்தா என் கட்டில் மேல ஒரு பட்டுப்புடவை, ரவிக்கை உள்ளாடைகள் எல்லாம் இருந்துச்சு. எனக்கு ஒரே இன்ப அதிர்ச்சி. அம்மா பூஜையறையில இருந்து நிர்மலா அந்த புடவைய கட்டிகிட்டு பூஜையறைக்கு உடனே வாடினு கூப்பிட்டாங்க. நானும் என்4 அடி WIG அழகா பின்னி அந்த புடவைய கட்டிகிட்டுபோனேன். அம்மா 
எனக்கு ஒரு ஆறு முழமிருந்த மல்லிகைபூவ தலையில வச்சிவிட்டு என் கண்ணே பட்டிடுச்சுடி தங்கமேனு திருஷ்டி சுத்தி என்னை விளக்கு ஏற்ற சொன்னாங்க. நானும் விளக்கேற்றி சாமி கும்பிட்டேன். பிறகு வாழும் தெய்வமான என் அம்மா காலில் விழுந்து அம்மா உங்க மகள ஆசிர்வாதம் பண்ணுக்கனு அம்மா காலில் விழுந்து வணங்கினேன். அம்மா புடவை பிடிச்சிருக்கா நிர்மலானு கேட்டாங்க. நானும் ரொம்ப பிடிச்சிருக்கு சரி எப்படீ சரியான அளவுல எனக்கு ரவிக்கை தெச்சிங்கனு கேட்டேன். அம்மா உன்னோட ரவிக்கை எடுத்துகிட்டு போய் தான் தெச்சேன் நிர்மலானு சென்னாங்க. இன்றும் நான் பாதுகாத்துவரும் பொக்கிஷம் அது. என்னை தவிர யாரையும் அந்த புடவைய தொடக்கூட அனுமதிக்க மாட்டேன். இப்படியே என் வாழ்க்கை பகலில் நிர்மலாகவும் இரவில் நிர்மலாவாகவும் சந்தோஷமா வாழ்ந்து வந்தேன்.

ஒருநாள் மறுபடியும் என் கல்யாணத்த பத்தி பேச ஆரம்பிச்சாங்க நான் அம்மா கிட்ட எனக்கு கல்யாணத்துல விருப்பமில்லைனு சொன்னேன். அம்மா என்கிட்ட எனக்கு பிறகு உன்ன பாத்துக்க ஒருத்தி வேணும்னு சொல்லி உன் அம்மாவோட ஆசைய நிறைவேத்துவேனு சத்தியம் பண்ண சொன்னாங்க. நானும் மறுக்க முடியாம சத்தியம் பண்ணினேன். ஒருநாள் என் தங்கை என் வீட்டிற்க்கு வந்தாள். அன்றும் நீண்ட நாட்களுக்கு பிறகு நிர்மலாக உறங்கினேன். அம்மா என் தங்கை கர்ப்பமாக இருப்பதாக சொன்னார். அனைவருக்கும் விருந்து கொடுக்க என் வீட்டில் ஏற்பாடு செய்தேன். என் தங்கையின் மாமியார் வீட்டிலுருந்து அனைவரும் வந்திருந்தனர். எங்கள் இரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் இருந்தோம். உறவினர்களுக்கு கூட நான் சொல்லவில்லை. அப்போது மீண்டும் என் தங்கை என்னிடம் நீங்க எப்ப கல்யாண சாப்பாடு போடப்போரிங்கனு கேட்டாள். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நான் அம்மாவின் முகத்தை பார்த்தேன். அப்போது என் தங்கையின் மாமியார் எங்க பெரிய மகளை நிர்மலுக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும்னு எங்களுக்கு ரொம்ப ஆசை. ஆனால் உங்க விருப்பம் என்ன சொல்ரீங்கனு கேட்டாங்க. அந்தப் பெண் என் தங்கையின் கணவனின் அக்காதான். அவங்க கல்யாணத்தின் போது மேல்படிப்பிற்காக இங்கிலாந்தில் இருந்ததால் என் தங்கையின் திருமணத்திற்க்கு வரமுடியவில்லை. அவளின் பெயர் கார்த்திகா. அவளின் பெற்றோர் என் மகளிடம் பேசினோம். அவளுக்கும் நிர்மலை திருமணம் செய்துக் கொள்வதில் சம்மதம் என்று சொல்லிவிட்டாள் என்றார்கள்.என் அம்மாவும் தங்கையும் என்னை தனியே அழைத்து சென்றனர். அப்போது என் தங்கை என்னிடம் அக்கா உங்கள கல்யாணம் பண்ணிக்க மாமாவும் ரொம்ப ஆசைப்படுரார் என்றாள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என் அம்மா என்னிடம் ஆமாம் நிர்மலா உன் தங்கைக்கு உன்னைப்பத்தி எல்லாம் தெரியும். அவகிட்ட ஒருநாள் எல்லாத்தையும் சொல்லிட்டேன். அவளும் உன்ன அக்காவாகதான் நினைக்குறாள். கார்த்திகாவுக்கு அவங்க வீட்டில கல்யாணம் பத்தி பேசும் போது அவளுக்கு உன்னோட மனைவியாகதான் வாழ விருப்பம்னு அவங்க அப்பா அமாமாகிட்ட சொல்லிட்டாளாம். உன் தங்கச்சிதான் கார்த்திகாகிட்ட கல்யாணத்துக்கு பிறகு என் அம்மாவையும் பாசமா பாத்துக்குர ஒருத்தி கிடைக்கமாட்டா அதனால கல்யாணம் ஒண்ணிக்க வேணாம்னு இருக்கனு சொல்லி இருக்கா அப்ப கார்த்திகா எனக்கு நிர்மல் மாமாவும் அத்தையும் ரெண்டு கண்கள் போல பாத்துப்பேன் சித்ரானு சொல்லிட்டாளாம். அப்புறம் சித்ரா கார்த்திகாகிட்ட உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும் அதிர்ச்சியா இருக்கும் இந்த விஷயத்தை யார்கிட்டயும் சொல்லமாட்டேனு சத்தியம் பண்ணுங்கனு சத்தியம் வாங்கிட்டு உன்னோட பெண்கள் உடையணியும் ஆசைகளையும் சொல்லிஇருக்கா. அப்ப கார்த்திகா எனக்கு இதில வருத்தமே இல்ல இங்கிலாந்துல நிறை CD PARLOURS இருக்கு. இந்த மாதிரி ஆசையுள்ளவங்க தாலி கட்டி மனைவியா ஏத்துகிட்ட ஒருத்திக்கு எப்பவும் துரோகம் பண்ணமாட்டாங்க. எனக்கு நிர்மல் மாமாவ கல்யாணம் பண்ணிக்க முழு சம்மதம். சித்ரா. ஆனால் இந்த விஷயம் எனக்கு உனக்கு அத்தை நிர்மல் மாமா நாலுபேரதவிர என் அப்பா அம்மா தம்பி யாருக்கும் தெரியகூடாதுனு சொல்லிட்டானு சொன்னாங்க. எனக்கு சம்மதம் அம்மானு சொன்னேன். அம்மா ஹாலுக்கு வந்து நிர்மல் கார்த்திகா கிட்ட கொஞ்சம் பேசனும்னு சொல்ரானு சொன்னாங்க. சரி போய் பேசிட்டு வாங்கனு பெரியவங்க சொன்னதும் ஒரு அறைக்குள்ள போனோம். அங்க வந்த கார்த்திகா என்கிட்ட மாமா என்ன பிடிச்சுருக்கானு கேட்டா. நான் ரொம்ப அதிர்ஷசாலி கார்த்திகா என்ன முழுசா புரிஞ்சுகிட்ட உன்ன கல்யாணம் பண்ணிக்கபோர நான் அதிர்ஷடசாலி தானேனு சொன்னேன். அப்ப என் ஒண்களின் ஓரத்தில் கண்ணீர் வந்தது. அப்ப கார்த்திகா என்னருகில் வந்து அழாதே நிர்மலா உனக்கு சாகுர வரைக்கும் நல்ல தோழியாக இருப்பேன்டினு சொல்லி இருக்கி அணைத்தாள். என் மாமாவுக்கு அன்பான மனைவியாகவும் நிர்மலாவுக்கு நல்ல தோழியாகவும் இருப்பேன் என்றாள். அடுத்த மாதமே எங்கள் திருமணம் நடந்தது. என் மனைவி கார்த்திகா தான் அவளது தோழி நிர்மலா அணியும் உடைகளை தேர்ந்தெடுக்கிறாள். நானும் அவளும் இப்போது கணவன் மனைவி மட்டுமல்ல அன்பான தோழிகள். இன்று இரண்டு குழந்தைகளுடன் நிர்மலாகவும், நிர்மலாவாகவும் என் வாழ்க்கை சந்தோஷமாக தொடர்கிறது.