Monday 4 January 2021

நர்சிங் காலேஜ் - 10

 ரம்யா என்னை மிகவும் அழகாக்கியிருந்தாள். எனக்கே என்னை பார்த்து கொண்டே இருக்க வேண்டும் என தோன்றியது. அன்று முழுவதும் அடிக்கடி கண்ணாடி முன் நின்று பார்த்து கொண்டிருந்தேன்.


இப்போது புடவையை handle செய்யும் விதம் அனிச்சையாக  எனக்கு வந்திருந்தது.. என்னை அறியாமலேயே மார்பின் மேல் உள்ள புடவை தலைப்பை அவ்வப்போது இழுத்துவிட்டு கொண்டேன். படிகளில் ஏறி இறங்கும் போது கொசுவத்தை தூக்கி பிடித்துக் கொண்டேன். இடுப்பில் உள்ள மடிப்பு கீழே இறங்கும் போது மேலே இழுத்து விட்டேன்.

முந்தானையை இழுத்து சொருகுவது, பின்னால் free ஆக விடுவது, மார்பின் மேல் மடிப்புகள் இல்லாமல் plain ஆக போர்த்துவது, என டிவி யில் பெண்களை பார்த்து அனைத்தையும் முயற்சி செய்தேன். மேக்கப் என்னுடைய மன பலத்தை கூட்டியிருந்தது. நாமும் அழகாகத்தான் இருக்கிறோம், ஏன் டிவியில் வரும் மற்ற பெண்கள் செய்வதை செய்து பார்க்க கூடாது என தோன்றியது. முக்கியமாக மெகா சீரியல் ஹீரோயின் மற்றும் செய்தி வாசிக்கும் பெண்களை கவனிக்க ஆரம்பித்தேன். அவர்களை போல என்னுடைய புடவையையும் அணிவதற்கு முயற்சி செய்தேன்.

அம்மா இரவில் வரும்போது எல்லா ஜாக்கெட்டுகளையும் alter செய்து வாங்கி வந்துவிட்டார். அனைத்தும் perfect fit. அத்துடன் சில தோடுகளும் match ஆக செயின்களும் வாங்கி வந்திருந்தார். மறுநாள்  உடுத்துவதர்காக பச்சை கலர் புடவை எடுத்து தந்தார். ஜாக்கெட் முக்கால் கை அளவுக்கு இருந்தது. அந்த புடவைக்கான உள்பாவாடையையும் எடுத்து கொடுத்தார்.

ஏதோ திடீரென ஞாபகம் வந்து,

"ராஜா, இது வரை உள்பாவாடை கொடுக்கவில்ல்லையே? என்ன செய்த? இன்னைக்கு என்ன உள்பாவாடை கட்டியிருக்க? கொஞ்சம் புடவையை தூக்கி காட்டு." - அம்மா சொன்னார்.

நான் புடவையை தூக்கி உள்பாவாடையை காட்டிய படியே . "நேற்று ரம்யாவோட பாவாடை வாங்கி கட்டிகிட்டேன். இன்னைக்கு சிவப்பு கலர் உள்பாவாடை உங்க கப்போர்டில் இருந்து எடுத்துகிட்டேன்."

"very good. ரம்யா, இதே மாதிரி அவ்வப்போது ஏதாவது தேவை வந்தால் அண்ணனுக்கு கொடுத்து உதவிக்கோ" - அம்மா.

"சரிம்மா.. அந்த green  கலர் தாவணி ரொம்ப நாளா கட்டாம இருந்தது. அதான் அண்ணனுக்காவது பயன்படுமே என்று உள்பாவாடை அவனுக்கு கொடுத்துட்டேன். பட்டு பாவடையும் தாவணியும் கூட அவனுக்கே கொடுத்துட்டேன். இப்போ நல்ல fit-ஆ ஜாக்கெட் வேற இருக்கு. அவன் அப்பப்போ அந்த தாவணியும் கட்டிக்கலாம்." - ரம்யா

"சரி. அவன ரொம்ப tease பண்ணாத" - அம்மா.


ரம்யா அந்த தாவணி set கொடுக்கும் போது என்னை tease பண்ணுவதாக தோன்றியது. இப்போது அவளுடன் மிக நெருக்கமாகி விட்டதால், அவள் tease செய்வதாக தோன்றவில்லை.


மறுநாள் நானே புடவை கட்டி கொண்டேன். ரம்யாவின் உதவி தேவை இருக்கவில்லை. பின்னர் அவளை அழைத்து மேக்கப் போட்டு விட சொன்னேன். முந்தைய நாளை போலவே மேக்கப் போட்டு விட்டு, அம்மா வாங்கி வந்த செயின் மற்றும் தோடை அணிவித்தாள். பச்சை பட்டு புடவையில் சூப்பராக இருந்தேன்.

அன்று முழுவதும் என்னை பார்க்கும் போது எனக்கே ஒரு புது energy வந்த மாதிரி இருந்தது. இதே போல அந்த ஒரு வாரம் முழுவதும் புடவை கட்டியே இருந்தேன். இப்போது நானே மேக்கப் போடவும் கற்று கொண்டேன். ஞாயிற்று கிழமை வந்துவிட்டது.

நாளை ரம்யாவுக்கு காலேஜ் ஆரம்பிக்கிறது. அவள் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தாள். அம்மாவும் வீட்டில் இருந்தார்கள். மத்தியானம் சாப்பாடு முடித்த பிறகு மூன்று பேரும் ப்ரீ ஆகி விட்டோம். மூன்று பேரும் உட்கார்ந்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது தெருவினில் பூ விற்கும் சப்தம் கேட்டது.

"ரம்யா, வா கொஞ்சம் பூ வாங்கி விட்டு வரலாம். நாளைக்கு காலேஜ் join பண்ண போற. இன்னைக்கு கோவிலுக்கு போயி சாமி கும்பிட்டு வரலாம்." - அம்மா சொன்னார்.

இருவரும் சென்று உதிரி பூ வாங்கி வந்தார்கள். பேசிக்கொண்டே தொடுக்க ஆரம்பித்தார்கள்.

"அண்ணா, நீயும் பூ கட்ட கத்துக்கோ. புடவை கட்டிட்டு, பூ வச்சா ரொம்ப நல்லா இருக்கும்." - ரம்யா சொன்னாள்

"எனக்கு என்ன பூ வைக்குற அளவுக்கு முடியா இருக்கு" - நான் சொன்னேன்.

"அம்மாவுக்கும் எனக்குமாவது உபயோகமா இருக்கும்ல.. எதுவும் இல்லன்னாலும் சாமிக்கு போடலாம்."

பேசிக்கொண்டே பூ தொடுத்து முடித்து விட்டார்கள். ஆறு முழம் பூ வந்தது.

"ரம்யா, ரெண்டு முழம் நீ வச்சிக்கோ, ரெண்டு முழம் நான் வசிக்கிறேன். ரெண்டு முழம் கோவிலுக்கு" -அம்மா சொன்னார்.

"சரிம்மா.." - ரம்யா.

"சரி. நீங்க ரெண்டு பெரும் போயி ரெடி ஆகுங்க."  - அம்மா சொன்னார்.

நான் இன்றும் புடவை தான் கட்டியிருந்தேன்.

"சரி. நான் பான்ட் ஷர்ட் போட்டு ரெடி ஆகிறேன்" - நான் சொன்னேன்.

"ராஜா, உனக்கு ஒரு பட்டு புடவைஎடுத்து வச்சிருக்கேன். அத கட்டிட்டு வா" - அம்மா சொன்னார்.

"நான் எப்படிம்மா புடவை கட்டிட்டு வெளியே வர முடியும்?"

"உனக்கு இன்னும் 4 நாளில் காலேஜ் திறந்திருவாங்க. அப்போ எப்படியும் புடவை கட்டிட்டுதானே போகணும். இப்போ உன்ன பாத்தா யாருக்கும் பையன்னு தெரியாது. உண்மையிலேயே பொண்ணு மாதிரிதான் இருக்க."

"வாண்ணா.. நாம போயி ரெடி ஆகலாம். நாம ரெண்டு பெரும் ஒரே மாதிரி saree கட்டிக்கலாம்" - ரம்யா சொன்னாள்.

இப்போதெல்லாம் அவள் சொல்வது எதையும் தட்ட முடிவதில்லை. சரி என்று அவளுடன் சென்றேன்.

ரம்யா இதுவரை புடவை கட்டியதில்லை. அவளிடம் புடவைகள் இல்லை. அம்மாவின் புடவைகளில் தேடினோம். Orange வண்ண புடவை இரண்டு இருந்தது. அவற்றை அணிந்து கொள்ளலாம் என முடிவெடுத்தோம். முதலில் நான் புடவை அணிந்து கொண்டேன். இப்போதெல்லாம் 5 நிமிடத்திற்கு மேல் ஆவதில்லை.


ரம்யா அவளாகவே புடவை கட்ட முயற்சி செய்தாள். முதல் தடவை அதலால் முடியவில்லை. பின்னர் நானே ரம்யாவுக்கும் புடவை கட்டி விட்டேன். இருவரும் மேக்கப் டேபிள் முன் சென்றோம்.

"அண்ணா! முதலில் நீ உட்காரு. நான் உனக்கு இன்னைக்கு மேக்கப் பண்ணி விடுறேன்."

மற்ற நாட்களை விட இன்று கொஞ்சம் அதிகமாகவே மேக்கப் செய்து விட்டாள். கண்கள் மை இட்டு எடுப்பாக தோன்றின. பின்னர் அவள் அமர்ந்தாள்.

"அண்ணா! முதலில் தலை சீவி விடு. அப்புறம் மேக்கப் போடலாம்." - ரம்யா சொன்னாள்.

நான் தலை சீவ ஆரம்பித்தேன். அப்போது அம்மாவும் ரெடி ஆகி மேக்கப் போட வந்துவிட்டார்.

"ராஜா, என்னடா செய்யிற? ரம்யா, நீதான் இதெல்லாம் பண்ண சொல்லுறியா? அவனுக்கு எப்படி ஜடை எல்லாம் போட தெரியும்?" - அம்மா கேட்டார்.

"அம்மா! அண்ணன் இப்போ இதிலெல்லாம் expert ஆயிட்டான். இந்த ஒரு வாரமும் அவன்தான் எனக்கு தலை சீவி விட்டான். இப்போ நமக்கு கவலையே இல்ல. ஜாலியா உட்காந்துக்கலாம். அண்ணன் நல்லா தலை சீவி, சிக்கெடுத்து, ஜடை போட்டு விட்டுருவான். நீ வேண்ணா பாரேன். நீ, நான் பண்ணுறதுக்கும் அண்ணன் பண்ணுறதுக்கும் வித்தியாசமே இருக்காது."

நானும் அவள் கூந்தலை பின்னி முடித்திருந்தேன். அம்மாவுக்கும் மிகவும் பிடித்திருந்தது. என்னை பாராட்டினார்.

"அண்ணா! அந்த பூவில ரெண்டு முழம் எடுத்துட்டு வரியா?" - ரம்யா சொன்னாள்.

"அப்படியே எனக்கும் எடுத்துட்டு வந்துரு", அம்மா

நான் போய் எடுத்து வந்தேன்.

"அண்ணா, நீயே இதையும் வச்சு விட்டுடு.", ரம்யா.

நானும் முயற்சி செய்தேன். அம்மாவின் உதவியுடன் வைத்து விட்டேன்.

மூன்று பேரும் ரெடி ஆகி விட்டோம். வெளியே கிளம்பும் போது எனக்கு nervous ஆக இருந்தது. ரம்யாதான் தைரியம் சொன்னாள்.

"பதட்ட படாதண்ணா. எங்களை போலவே நீயும் பொம்பள மாதிரிதான் இருக்க. யாராலும் நீ ஆம்பளன்னு கண்டு புடிக்க வாய்ப்பே இல்ல.. நாம வேற ஊருக்கு புதுசு. அதனால யாராலும் கண்டுபுடிக்க முடியாது."

இருந்தாலும் எனக்கு உடம்பில் பதட்டம் குறையவில்லை. ரோட்டில் ஒரு சில பேர் எங்களை cross செய்து போனார்கள். யாரும் என்னை வித்தியாசமாக பார்க்கவில்லை. இப்போது எனக்கே ஒரு தைரியம் வந்துவிட்டது. கோவிலுக்கு நடந்தே சென்று வந்தோம். அம்மா auto வேண்டாம் என சொல்லி விட்டார். வெளி உலகத்தை பழக எனக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என சொன்னார். யாருக்கும் சந்தேகம் வராமல் கோவிலுக்கு சென்று வந்து விட்டோம். எனக்கு ஏதோ பெரிய சாதனை செய்தது போல இருந்தது.

No comments:

Post a Comment