Monday 4 January 2021

நர்சிங் காலேஜ் - 5

 "இன்னும் ஒரு ப்லெளஸ் இருக்கு. அதயைும் போட்டு பாத்துரலாம்." - அம்மா அந்த ப்லௌஸை மாட்டிவிட்டார்கள்.

எனக்கு அது முந்தையதை விட கொஞ்சம் பெரிதாக மற்றும் எளிதாக இருந்தது. ஆனால் அம்மாவும் ரம்யாவும், இது மிகவும் பெரிதாக இருப்பதாகவும், முதலில் போட்ட ப்லௌஸ் அளவுக்கே தைக்க வேண்டும் எனவும் முடிவு செய்தனர்.

"நாளை காலைல குளிக்கும் போது என்னை கூப்பிடு. உனக்கு மஞ்சள் பயத்த மாவு எல்லாம் தேய்ச்சு விடனும்" - அம்மா சொன்னார்கள். நாளை குளிக்கவே வேண்டாம் என நினைத்துக்கொண்டேன்.

மறுநாள் காலையில் முழிழ்த்த பின்பும் படுக்கையில் தூங்குவது போல் படுத்து கொண்டிருந்தேன். இன்று அம்மாவுக்கு அலுவலகம் உள்ளது. காலையில் சீக்கிரமே கிளம்பி விட்டார்கள். அம்மா சென்ற பின்தான் படுக்கையில் இருந்து எழுந்திருந்தேன். பின்னர் அம்மாவிடம் இருந்து போன் வந்தது. Speaker  Phone -ல் போட சொன்னார்கள். நானும் ரம்யாவும் கேட்டோம்.

"ராஜா, முதல் வேலையா முகத்த நல்ல ஷேவ் பண்ணிடு. உனக்கு இன்னும் நல்ல மீசை தாடி வளர ஆரம்பிக்கலதான். இருந்தாலும் முகத்துல கொஞ்சம் முடி இருக்கு. புடவை கட்டும்போது இப்படி இருந்தா எல்லோரும் கிண்டல் பண்ணுவாங்க. முடிஞ்ச அளவு உன்ன  ஒரு பொம்பள மாதிரி காமிக்க try பண்ணுவோம். அதுதான் உனக்கும் நல்லது. இல்லன்னா எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க."

அம்மா சொல்லுவது எனக்கும் சரி என்று தோணியது. ஆண் புடவை கட்டியிருக்கிறான் என தெரிந்தால் எல்லோரும் கிண்டல் பண்ணுவார்கள். முடிந்த அளவு பெண் போல் தோற்றம் அளித்தால் பிரச்சனைகள் குறைவு. எனவே அம்மா சொல்வதை கேட்டு ஒத்துழைக்கலாம் என முடிவு செய்தேன்.

"அப்புறம் ரம்யா, இன்னைக்கு அண்ணன் குளிக்கும் போது கொஞ்சம் ஹெல்ப் பண்ணு. மஞ்சள் எல்லாம் எடுத்து கொடு. எவ்வவளவு தேய்க்கணும் எல்லாம் சொல்லி கொடு. ப்ளௌஸ் தைக்க கொடுத்துருக்கிறேன். முடிஞ்ச அளவு இன்னைக்கு night வாங்கிட்டு வர ட்ரை பண்ணுறேன். நைட் புடவை கட்டி பாத்திறலாம்."

நான் அப்புறம் ஷேவ் செய்தேன். முகத்தில் எந்த முடியும்  இல்லதவாறு பார்த்து கொண்டேன்.

குளிப்பதற்கு தயாரானேன். ரம்யாவை கூப்பிடுவதற்கு வெட்கமாக இருந்தது. அவளும் நான் குளிக்க போகிறேன் என்று தெரிந்தும், நானே கூப்பிட வேண்டும் என்று எதிர் பார்த்து காத்திருந்தாள்.

"நான் குளிக்க போறேன்." - என்று பொதுவாக சொல்லி விட்டு பாத்ரூமினுள் சென்றேன்.

கதவை தாழிடாமல் குளிக்க ஆரம்பித்தேன். எப்போதும் இல்லாமல் இன்று ஜட்டி அணிந்தே குளிக்க ஆரம்பித்தேன்.
ரம்யா வந்து கதவை தட்டினாள்.

"உள்ளே வரலாமா?" - ரம்யா கேட்டாள்.

இதற்கு முன்னால் அவள் முன் ட்ரெஸ் மாற்றும் போது ஜட்டியுடன் நின்றுருக்கிறேன். அது இரண்டு முன்று நொடிகள்தான் இருக்கும். இப்போது பாத்ரூமில் தங்கை முன் ஜட்டியுடன் இருக்க வெட்கமாக இருந்தது.

கதவை திறந்தேன். ரம்யா உள்ளே வந்தாள்.

"வெக்கபடாதண்ணா, இப்போ  நீ எனக்கு அக்கா மாதிரி," - என்றாள்.

எனக்கு கோபமாக வந்தது.

"கிண்டல் பண்ணாம ஒழுங்கா வேலைய பாரு." என்றேன்.

அவள் மஞ்சள் பொடி எடுத்து என் முகத்தில் நன்றாக தடவினாள். பின்னர் உடம்பு முழுவதும் தடவினாள். அதே போல் பயத்தமாவு தேய்த்து விட்டாள். பின்னர் தலைக்கு சிகைகாய் பொடி தேய்தோம்.

குளித்து முடித்த பின் ரம்யா கிண்டல் செய்வாள் என நினைத்தேன். ஆனால் அதன் பின்னர் எதுவும் நடக்கவில்லை. ரம்யா அம்மா வரும் வரை காத்திருந்தாள்.

அம்மா evening வந்தார்கள்.

எப்போதும் அம்மாவும் ரம்யாவும் தான் dinner சமைப்பார்கள். இருவரும் கிட்செனுள் சென்று சமையல் ஆரம்பித்தார்கள்.

"அம்மா இன்னைல இருந்து அண்ணனையும் சமையலுக்கு help பண்ண சொல்லு."

"வாய மூடுடி. அவனே mind மூட் அவுட் ல இருப்பான்.இப்ப்போ அவன கடுப்பேதாத"

இருவரும் சேர்ந்து சமையல் முடித்தார்கள். சாப்பிட ஆரம்பித்தோம்.

"அம்மா, ப்ளௌஸ் தைத்து வாங்கிட்டு வந்துட்டியா." ரம்யா கேட்டாள்.

"உனக்கு என்னடி அவசரம். உன் uniform தச்சு வாங்கியாச்சான்னு கேக்குறியா? அண்ணா uniform ல அப்படி என்ன ஆர்வம்" - அம்மா திட்டினார்கள்.

"இன்று கிடைக்க வில்லை. ரெண்டு பேரோட uniform ம் நாளை கேடச்சிரும்." - அம்மா.

அப்புறம் அம்மா என்னை பார்த்து சொன்னார்.

"ராஜா, இன்னைக்கு ஒரு தடவை புடவை கட்டி பாத்திடலாம். இன்னொரு ப்லௌச use பண்ணிக்கலாம். இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு. அதுக்குள்ள உனக்கு எல்லாம் சொல்லி தரணும்."

சாப்பிட்டு முடித்து டிவி பார்த்து கொண்டிருந்தோம். அம்மா பெட்ரூமில் இருந்து கூப்பிட்டார்கள் - "ரம்யா, ராஜா ரெண்டு பேரும் இங்க வாங்க. "

இருவரும் பெட்ரூமினுள் போனோம்.

"ராஜா இந்த ப்லௌச  போடு."

"அம்மா பிராவ மறந்துட்டிங்க." - ரம்யா ஞாபகபடுத்தினாள்.

எனக்கு கோபமாக வந்தது. "அம்மா, இவள வெளிய போக சொலூங்க" ன்னு சொன்னேன்.

"அவளும் இங்கதான் இருப்பா. அவளும் புடவை பண்ண கத்துக்கட்டும்."

அம்மா பிரா மாட்ட உதவி செய்தார்கள்.

"ராஜா நீயே பிரா மாட்ட கத்துக்கணும். எல்லா நாளும் நானே உதவ முடியாது. நாளைக்கு பகல்ல ட்ரை பண்ணி பாரு. நாளை நீயே மாட்டிக்கணும்"

ப்லௌசை நானே மாட்டினேன்.

"இந்த உள்பாவடைய கட்டிக்க."

போட்டிருந்த shorts மேலேயே உள்பாவாடை கட்டினேன்.

என்னை பார்த்து ரம்யா விழுந்து விழுந்து சிரித்தாள். அம்மா அதட்டிய பின் அமைதியானாள்.

அம்மா ஒரு அவரிகளின் கலர் புடவை எடுத்தார்கள்.

"வெள்ளை புடவை சீக்கிரம் அழுக்காகிடும். இப்போதைக்கு கலர் புடவை கட்டிக்கலாம்."

எப்படி கட்ட வேண்டும் என்று சொல்லி கொண்டே என் மீது கட்டி விட்டார்கள்.

"ரொம்ப அழகா இருக்கண்ணா" - ரம்யா சொன்னாள்.

"ஆமாடா, இன்னிக்குத்தான் ஷேவ் பண்ணிருக்கயா, அப்படியே பொண்ணு மாதிரி இருக்கு. முடி மட்டும் கொஞ்சம் நீளமா இருந்தால், யாரும் உன்ன ஆம்பள ன்னு கண்டுபுடிக்க முடியாது. " - அம்மா ஆமோதித்தார்.

"சரி  போய் டிவி பாருங்க." - அம்மா சொன்னார்.

"நான் டிரஸ் மாத்திட்டு போறேன்." நான் சொன்னேன்.

"இல்ல, இந்த ஒரு வாரத்துக்கும் நீ புடவை தான் கட்டிக்கணும். அப்போதான் பழக்கமாகும்."

1 comment:

  1. உங்களின் அடுத்த கதை எப்போது வரும்

    ReplyDelete