Friday 20 November 2015

அபிராமி ஓர் ஆச்சரியம் - பகுதி 14

காலை இதோ விடிந்துவிட்டது. எனது கேள்விகளும் எழுந்துவிட்டது எனக்குள் மீண்டும். கலையாத தூக்கத்தோடு படி இறங்கி ஹாலில் டிவி முன் அமர்ந்தேன். கீதாவும் அப்போதுதான் வந்து எனது அருகில் வந்து சன் மியூசிக் வைத்தாள்.

"என்னங்கடி காலையில் டிவி முன்னாடி? இப்படி இருந்தீங்க அப்படினா எப்படி  வீட்டுல எப்படி குப்பை கொட்ட முடியும்?" என்றார் அம்மா.

இந்த வார்த்தை என்னது சந்தேகத்தையும் கோபத்தையும் அதிகமாகியது. சற்றென்று நான் சமையலறை சென்று பாத்திரம் விலக்க ஆரம்பித்தேன். கீதாவும் என்னுடன் சேர்த்து வேலை ஆரம்பித்தாள். அப்போது என்னை அம்மா கூப்பிடும் சத்தம் கேட்டது.

"அபி, என்ன ஒரு மாதிரி இருக்க?"

"அது எல்லாம் ஒன்னும் இல்லைமா" பொய் சொன்னேன் நான்.

"இல்லை.. நேத்துல இருந்து எதோ வித்தியாசம் தெரியுது. மறைக்காம  சொல்லுடி" என்றார் அம்மா.

நான் என் மனதில் இருந்ததை சொல்லி முடித்தேன். அம்மாவும் தங்கையும் அமைதியாக கேட்டனர். பின்பு அம்மா பேசத் தொடங்கினார்.

"அபி, நம்ம எல்லோருக்குமே தெரியும் நீ இதை உன் நண்பி பூர்ணிமாக்காக செய்யுற. நீ என் ஒரே பையன். நீ ஒரு பொண்ணுமாதிரி இருக்குறது எனக்கு முதல சம்மதம் இல்லாட்டியும் நான் உன் ஆசைக்காக ஒத்துகிட்டேன். உன் ஆசையும் சந்தோசமும் தான் எனக்கு முக்கியம்.

நீ 4 வருஷம் ஒரு பெண் மாதிரி இந்த உலகத்துல நடிக்க போகிறாய். இல்லையா? அப்படி இருக்கும் பொது கரெக்டா இருந்தாதான் யாருக்கும் சந்தேகம் வராது. உனக்காகத்தான் நானும் பூரணி அம்மாவும் இவ்ளோ பெரிய ரிஸ்க் எடுக்குறோம். பூரணி அம்மா இந்த ஊரு கலெக்டர் என்பதால் நமக்கு கொஞ்சம் ஈசி.

நீ ஒரு உண்மையான பொண்ணு மாதிரி நடந்துகிட்டா தான் யாருக்கும் சந்தேகம் வராது. அதுக்கு உன்னை நீ ஒரு பெண்ணாக முதல ஏத்துக்கணும். அப்போ தான் மத்தவங்களை நம்ப வைக்க முடியும்.

ஆனா உனக்குள்ள இப்படி ஒரு குழப்பம் இருந்த மறுபடி யோசி. தப்பு இல்ல. நீ எந்த முடிவுக்கு வந்தாலும் நாங்க உனக்கு துணையாய் இருப்போம்." பேசி முடித்தார் அம்மா.

இப்போது என் மனதில் ஒரு தெளிவு பிறந்தது.

"இன்னும் வெறும் 4 வருஷம் தான் நான் அபிராமி மாதிரி இருப்பேன். அப்புறம் நான் பழையமாதிரி ஒரு பையன் மாதிரி வாழ்க்கை வாழ்வேன். இப்போ இந்த 4 வருஷம் மட்டும் இந்த உலகத்துக்கு நான் பொண்ணு மாதிரி இருக்க போறேன். இனி எனக்கு எந்த குழப்பமும் இல்லை" தெளிவாய் சொன்னேன் அம்மாவிடமும் கீதாவிடமும்.

கீதா சந்தோஷத்தில் என்னை கட்டிப்பிடித்தாள்.

"ரொம்ப தேங்க்ஸ் அக்கா. எனக்கு என் அக்காவைத் தான் ரொம்ப புடிச்சி இருக்கு. வாழ்க்கை முழுக்க இப்படி  இருந்தா எனக்கு ரொம்ப சந்தோஷம்."

கொஞ்சம் சிரித்து விட்டு அவளை கட்டிப்பிடுத்து நன்றி சொன்னேன்.

மேலும் அம்மா தொடர்ந்து பேசினார்.

"அபிராமி , நான் ஒண்ணு சொல்றேன். இது கீதாவுக்கு தெரியும், புரியும். நீயும் புரிஞ்சிக்கணும். ஒரு பொம்பளையா இருப்பது அவ்ளோ சுலபம் இல்லை. வெளியில் ஆண்கள் நம்மை ஒரு போதை பொருள் மாதிரித்தான் பாப்பாங்க. நேத்து நீ ஒரு பையன் உன்னை பாத்ததுக்காக அழுத என்று கீதா சொன்னாள். அவன் உன்னை ஒரு பொண்ணுமாதிரி பாத்தான். சோ அதுல தப்பு இல்லை. நம்மதான் ஜாக்கிரதையாய் இருக்கனும்.

பொண்ணுங்க ஈசியா ஒரு பையன் கிட்ட விழுந்துடுவாங்க. பாத்து நடந்துக்கோ." அறிவுரை முடித்தார் அம்மா. அப்புறம் வேலை எல்லாம் முடித்து நாங்கள் மூவரும் பாலிமர் டிவியில் ஹிந்தி சீரியல் பாத்துக்கொண்டு இருந்தோம். அப்போது பூர்ணிமாவும் அவளது அம்மாவும் எங்கள் வீட்டுக்குள்ளே வந்தனர். ஏனோ பூரணி பள்ளி சீருடை அணிந்திருந்தாள்.

"வாங்க ஆண்டி. வாடி பூரணி" இருவரையும் அழைத்து அமரச் செய்தேன். அம்மா என்னிடம் காப்பி போட்டு கொண்டு வரச் சொன்னார்கள். எங்கள் வீட்டு வேலைக்காரி செல்வி அக்கா விடுப்பில் சென்றதால் என்னிடம் சொன்னார்கள். ஆண்டி கீதாவிடம் அவளது விளையாட்டு போட்டி பற்றி பேசிக்கொண்டு இருந்ததால் அவள் வரவில்லை.

நான் சமையல் அறையில் காப்பி போட்டுக்கொண்டு இருக்கும் பொது பூரணி வந்தாள்.

"என்னடி, நல்லா காப்பி போட கத்துகிட்டியா? ஒழுங்கா கத்துக்கோ. பின்னாடி உன் புருஷனுக்கு நீ தான் டெய்லி காப்பி போட்டு காலைல எழுப்பனும்" என்று கிண்டல் அடித்தாள்.

"சீ..சும்மா இருடி."

"அய்யோ.. இங்க பாரேன் இவ வெட்கப் படுறத.. என் கண்ணே பட்டிடும் போல."

"ஏன் என்னை ரொம்ப கிண்டல் பண்ணுற பூரணி?"

"இல்லடி, வெட்கப்படும்போது நீ ரொம்ப அழகா இருக்க. இவ்ளோ வருஷமா உனக்குள்ள ஒளிஞ்சி கிட்டு இருந்த பெண்மை அழகா வெளிய வருதுடி."

எனக்கு வெட்கமும் பொங்கியது. அடுப்பில் பாலும் தான். காப்பி போட்டு ஒரு தட்டில் 5 கப்பில் ஒற்றி எடுத்து வந்தேன்.

"ஓ, உங்க பொண்ணு அபிராமி இப்போ ரொம்ப முன்னேறி விட்டாபோல. குட் குட். சரி, எனக்கு உங்க 2 பொண்ணுங்க போட்டோ வேணும். காலேஜ்ல கேட்டாங்க. ஸ்கூல் யூனிபார்ம் போட்ட மாதிரி தான் வேணுமாம். இவகிட்டையும் புது போட்டோ இல்லை. ஸோ இவங்க மூணு பேரும் ஸ்டுடியோ போய் புது போட்டோ எடுத்துட்டு வரட்டும்" என்றார் ஆண்டி.

"இவளுக்குன்னு யூனிபார்ம் இல்லை. கீதாவோட யூனிபார்ம்தான் இவ போடணும். சைஸ் கரெக்ட் இருக்கும். சோ ப்ரொப்லெம் இல்லை." அம்மா சொன்னார்.

"நல்லது.. அபிராமி இன்னுமா தலைக்கு விக் யூஸ் பண்ணுற? சீக்கிரம் உண்மையான கூந்தல் வளர்க்கணும். அப்போதான் இயல்பா இருக்கும். அப்புறம் வீட்டுக்கு யாராவது விருந்தாளிங்க வந்தா இப்படி வெறும் நைட்டி போட்டுக்கிட்டு நிக்க கூடாது. மேல டவல் எதாவது போட்டுக்கணும். நாங்க இருக்கும்போது இப்போ ஓகே. நான் பொதுவா சொல்றேன்."

"சரிங்க ஆண்டி. இனிமேல் பாத்துக்குறேன். எனக்கும் ரொம்ப ஆசைதான் கீதா மாதிரி நீளமான முடி வேணும்னு"

"ஹ்ம்ம்ம், இது பெண்களோட இயல்பான ஆசை..உனக்கும் ஒட்டிகிச்சா இந்த கொஞ்ச நாளைல" சிரித்தார்கள் அனைவரும்.

இப்போது கீதாவும் பூரணியும் என் அறைக்கு ஒரு பள்ளி சீருடை எடுத்துக்கொண்டு வந்தனர். என்னை அதை அணியச்சொல்லி விட்டு இருவரும் என் எதிரே அமர்ந்தனர்.

நான் அப்போது அணிந்திருந்த நைட்டி மற்றும் உள்பாவாடை கழட்டி விட்டு என் பிரா மற்றும் பேன்ட்டி மட்டும் அணிந்து நின்றுகொண்டு இருந்தேன்.

"இங்க பாத்தியா கீதா உன் அக்காவை, எதோ பிரா கம்பெனிக்கு விளம்பரம் பண்ணுறமாதிரி நிக்குறா..."

"என்ன இப்போ. என் அக்காவுக்கு என்ன குறைச்சல்." இது கீதாவின் குரல்.

நான் இதை எல்லாம் கண்டுகொள்ளாத மாதிரி சீருடை சட்டை அணிய ஆரம்பித்தேன். அப்போது பூரணி என்னை நிறுத்தச் சொன்னாள்.

"இந்த டிரஸ்க்கு இந்த பிரா எல்லாம் போடகூடாது. எல்லா பிரா எல்லா டிரஸ்க்குக்கும் போடா முடியாது. போட்டாலும் சரி இருக்காது. இந்த மாதிரி டிரஸ்க்கு சீம்லெஸ் பிரா தான் போடணும். அப்போதான் நல்லா இருக்கும். உனக்கும் நல்ல பிட்டிங் கிடைக்கும். இல்லாட்டி ட்ரெஸ்  கொஞ்சம் வித்தியாசமா தெரியும்."

கீதா அவள் அறையில் இருந்து ஒரு பிங்க் பிரா எடுத்துக் கொடுத்தாள். அதை அணிந்தபின் நான் சீருடை அணிந்து தயாரானேன். நாங்கள் மூவரும் தயார். நாங்கள் ஸ்டுடியோவில் தனித்தனியாக போட்டோ எடுத்துக்கொண்டு, கீதாவின் ஆசைக்காக மூவரும் சேர்ந்து ஒரு குரூப் போட்டோ எடுத்துக்கொண்டோம்.

வீட்டுக்கு வரும் வழியில் ஒரு கடையில் நின்று கீதா விஸ்பர் சானிடரி நாப்கின் ஒன்று வாங்கினாள்.

"ஹே கீதா, இப்போ எதுக்கு இதை வாங்குற? அதான் ஒரு பாக்கெட் வீட்டுல இருக்குல?"

"இது எனக்கு இல்லடி. உனக்கு. நேத்து நீதான உனக்கும் இது வேணும்னு கேட்ட. எனக்கும் அது சரினு தோணிச்சு. ஒரு பொண்ணுனா இது எல்லாம் பழகனும்." என்றாள் கீதா.

"ஆமா அபி.. இதுல்லாம் உன் காலேஜ் பைல இருந்தாதான் உன்னை ஒரு பொண்ணுன்னு இயல்பா நினைப்பாங்க. அப்புறம் பீரியட்ஸ்னு சொல்லி லீவ் கூட எடுக்கலாம்" சிரித்தாள் பூர்ணிமா.


வீட்டுற்கு வந்தபின் சீக்கிரம் ஓடியது. அம்மா வேளைக்கு சென்றதால் நாங்கள் மூவர் மட்டும் இருந்து விஷயங்கள் பல பேசினோம். இறுதியில் பொழுது சாந்தது. அதோடு என் உடம்பில் நைட்டியும் ஏறியது.

2 comments: