முதல் நாள் கல்லூரி சீக்கிரமே முடிந்து விட்டதால் வீட்டிற்கு வந்து விட்டேன். அம்மாவும் ரம்யாவும் வருவதற்கு நேரம் ஆகும். வெயிலில் வந்ததால் வியர்வையாக இருந்தது. புடவையை அவிழ்த்து விட்டு குளிக்கலாம் போல இருந்தது. நன்றாக குளித்து விட்டு வந்தேன். வேறு ஒரு காட்டன் புடவை கட்டலாம் என நினைத்தேன். உள்பாவாடை மற்றும் பிரா அணிந்தேன். பின்னர் வேறு ஒரு எண்ணம் தோன்றியது. shorts போட்டு ரொம்ப நாள் ஆச்சு, shorts போட்டுக்கலாம் என தோன்றியது. உள்பாவாடையை கழற்றி விட்டு shorts அணிந்தேன். பின்னர் ஒரு T-Shirt எடுத்து பிரா மேலேயே அணிந்து கொண்டேன். ஏனோ பிராவை கழற்ற வேண்டும் என தோன்றவில்லை. பின்னர் நன்றாக தூங்கி எழுந்தேன். மாலை மணி 5 ஆகிவிட்டது. இன்னும் அம்மாவும் தங்கையும் வரவில்லை. போர் அடித்தது. மஞ்சள் தேய்த்து முகம் கழுவி விட்டு கொஞ்சம் மேக்கப் போட்டு கொண்டேன். T-Shirt போட்டிருந்தாலும் பெண் போலவே இருந்தேன். கண்ணாடி முன் பார்த்து கொண்டிருக்கும் போதே ரம்யா வந்து விட்டாள். "என்ன அண்ணா! முதல் நாள் காலேஜ் எப்படி இருந்தது." "நான் நினைத்த அளவுக்கு மோசமாக இல்லை. யாரும் அவ்வளவா கிண்டல் பண்ணவில்லை" ...