என் பெயர் ஸ்வேதா. வயது 20. புனே திரைப்பட கல்லூரியில் படித்து வருகிறேன். என் தாய் தந்தை இருவரும் விவாகரத்து பெற்று 10 ஆண்டுகள் முன்னர் பிரிந்து வாழ்கின்றனர். எதற்காக விவாகரத்து பெற்றனர் என்று இன்றுவரை எனக்குத் தெரியாது. என் அம்மா இரண்டாவது திருமணம் முடிந்து இப்போது அமெரிக்காவில் இருக்கிறார். என் அப்பா சென்னையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். அவர் திரைப்படத்துறை தொடர்புடைய ஒரு பிரபல நிறுவனத்தை நிர்வகித்து வந்தார். நான் புனேயில் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தேன். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என் தந்தையை பார்க்க சென்னை வருவேன். சென்ற மாதம் என் தந்தையின் பிறந்தநாளை அவருடன் கொண்டாட சென்னைக்கு கிளம்பினேன். சென்னைக்கு வந்தேன். என் தந்தையின் பிறந்தநாளை கொண்டாட கேக் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தேன். என் வீட்டின் கதவு பூட்டியிருந்தது. என் அப்பா இன்னும் வீட்டிற்க்கு வரவில்லை என நினைத்து என்னிடம் இருந்த சாவியால் கதவை திறந்து வீட்டிற்க்குள் சென்றேன். வீடு முழுவதும் இருட்டாக இருந்தது. ஆனால் என் தந்தையின் படுக்கை அறையில் மட்டும் விளக்கு எரிந்துக் கொண்டிருந...