அம்மா என்னைக் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றாள். நான் அழுது கொண்டே யிருந்தேன். அம்மா என்னை ஒரு கல்யாணப் பெண்ணைப் போலவே அலங்காரம் பண்ணி விட்டாள். மெரூன் கலர் பட்டுப்புடவை..காலில் கொலுசு.. கண்களில் மை..தலையில் விக் வைத்துப் பின்னல் போட்டு தலை நிறைய மல்லிகையை வைத்து விட்டாள். கன்னங்களில் சிவப்பு.. உதடுகளில் கிளிட்டரிங் லிப்ஸ்டிக். - இந்தா இந்தக் காபியை எடுத்துட்டுப் போம்மா சரண்யா.. நான் தயக்கத்துடன் ஹாலில் போய் நின்றேன். வட்டமாக அமைக்கப்பட்டிருந்த விலை யுயர்ந்த சோபாக்களில் ஒவ்வொருவரும் புதைந்திருந்தார்கள். அபிஷேக் என்னைப் பார்த் ததும் : ஹாய் டார்லிங்.. என்றான். விநாயகம் அங்கிள் நிமிர்ந்து பார்த்து: வாவ்.. உண்மையிலயே ரொம்ப அழகாயிருக் கம்மா.. நா போன வாட்டி வந்தப்ப கூட சரியா நோட்டீஸ் பண்ணல.. வெரி நைஸ் எல்லாருக்கும் காபி கொடுத்து முடித்ததும் விநாயகம் அங்கிளின் மனைவி யமுனா என்னைக் கையைப் பிடித்து தன் அருகில் உட்கார வைத்துக் கொண்டாள். நான் குனிந்த தலை நிமிராமல் நிலத்தைப் பார்த்தபடி சோபாவின் விளிம்பில் உட்கார்ந்திருந்தேன். என் முகவாய்க் கட்டையைப் பிடித்து உயர்த்திய...