Sunday 22 March 2015

அபிராமி ஓர் ஆச்சரியம் - பகுதி 9

தினமும் கீதா  நைட்டி போட்டுக்கொண்டு படுப்பது எனக்கு பழக்கமாகி விட்டது. நேற்றும் அதான் நடந்தது. அனால் இன்று காலை நான் எழுந்தவுடன் கீதா பொய்யாய் என்னுடன் சண்டை போட்டாள். இந்த பொய் சண்டைகள் மிகவும் சந்தோசமாக இருந்தது. இதோ அந்த சண்டைகள்."ஹேய், ஏன் டி என்னோட நைட்டி போட்டுருக்க? அதான் நேத்து உனக்குன்னு புதுசு எல்லாம் வாங்கியாச்சி இல்ல?""போடி நான் அப்படித்தான் போடுவேன். என் தங்கச்சி நைட்டி நான் போடாம வேற யாரு போடுவா?""சரி தொலைஞ்சி போ... நைட்டி போட்டுக்கோ. ஆனா என் பிரா கூடவா போடுவ?""ஆமாம், அப்படித்தான் போடுவேன்.""அடிப்பாவி, புது புது பிரா வாங்கி வைச்சிருக்க..அப்படி இருந்தும் ஏன் என்னோட பழைய பிரா போடுற?""என்னதான் இருந்தாலும் என் தங்கச்சி பிரா மாதிரி வருமா?" என்றதும் என்னை அடிக்க வந்துவிட்டாள். நாங்கள் இருவரும் சிறு வயது பெண்பிள்ளைகள் போல் வீட்டுக்குள் ஓடிக் கொண்டிருந்தோம். அம்மாவும் இதை பார்த்து சிரித்தார் என்று தான் சொல்ல வேண்டும்.சிறிது நேரம் கழித்து நாங்கள் மூவரும் அமர்த்து சும்மா பேசிக் கொண்டிருந்தோம். அப்போது கீதாவின் மார்பகங்கள் சிறிது தெரிந்தது. அதை பற்றி அவளிடம் சொன்னதும் , எனக்கும் அது மாதிரி அழகாய் தெரியனுமா என்று மெதுவாய் கிண்டல் அடித்தாள்  என் காதில், அருகில் அம்மா இருந்ததால். பின் கீதா நான் சொல்லத் தயங்கியதை பேச ஆரம்பித்தாள்."அம்மா, அபிராமிக்கு நேற்று ஷாப்பிங் புடிக்கல போல.. என்ன கரெக்டா?"அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. முதல் முதலா ஷாப்பிங் போறேன்ல பொண்ணுங்க ட்ரெஸ் வாங்க. அதான் கொஞ்சம் கூச்சமா இருந்தது""இவ பொய் சொல்றா மா. எல்லா டிரஸ் -ஐயும் எவ்ளோ  ஆர்வமா பாத்தா தெரியுமா? நீங்க அங்க இல்லாம போய்டீங்க. நீங்க எங்க போயிருந்தீங்க?""அப்படியா அபிராமி? நான் எங்க போனேன்னு நாளைக்கு தெரியும்""இல்ல அம்மா அவ பொய் சொல்றா" என்றேன் நான்."இல்ல மா. இவ தான் பொய் சொல்றா. இவ ஒரு சுடிதார் காமித்து அது மாதிரி வேணும்னு கேட்டா. அது முதுகு முழுசா தெரியுற மாதிரி இருந்தது. நீங்க ஒத்துக்க மாட்டீங்கன்னு சொன்னேன்" என்று அம்மாவிடம் என்னை மாட்டி விட்டாள்."ஓ.. அப்படியா அபிராமி? சொல்லவே இல்லை? சரி பொண்ணுங்களா, இன்னக்கி நீங்களே போய் உங்களுக்கு என்ன என்ன வேணுமோ அதையெல்லாம் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். நான் ஏதும் சொல்ல மாட்டேன்" என்று அம்மா ஆச்சரியம் அளித்தார்."உண்மையாவா மா சொல்றீங்க" கேட்டாள் கீதா."அமாம்டி, அபிராமி முதல் முதலா என்கிட்ட ஆசை பட்டு கேட்டிருக்கா. அவ சந்தோசமா இருக்கனும். நீயும் எதாவது போய் எடுத்துக்கோ""அப்போ, நாங்க பூர்ணிமா கூட்டிட்டு பஸ்ல போறோம்" என்றேன்."சரிடி என் செல்லங்களா" என்று அவரோட ATM கார்டு மற்றும் சிறிது பணமும் கொடுத்தார் அம்மா.
சிறிது நேரம் கழித்து நான், கீதா, பூர்ணிமா ஷாப்பிங் போக கிளம்பினோம். பூர்ணிமா இளம் பச்சை சுடிதாரும் கீதா அதே நிறத்தில் குர்தி-யும் அணிந்திருந்தனர். நான் ஆண் உடையில் இருந்ததால் எனக்கு சந்தோசம் இல்லை இன்றும்.முதலில் எனக்கு பிரா வாங்க போலாம் என்ற பூர்ணிமா, எங்களை தி-நகர் கடை ஒன்றுக்கு அழைத்தச் சென்றாள். இங்கே தான் அவளும் அவள் அம்மாவும் உள்ளாடைகள் வாங்க வருவார்களாம். கடை மிகவும் பெரிது இல்லை என்றாலும் நிறைய வகைகள் இருந்தன. அவர்கள் அடிக்கடி அங்கே செல்வதால் அங்கே பணிபுரியும் பெண் பூர்ணிமாவிற்கு நன்றாக தெரியும் என்று அவள் சொன்னாள். கடையில் வேறு யாரும் இல்லை எங்களைத்தவிர."நான் எல்லாத்தையும் சொல்லிட்டேன் அவ கிட்ட. ஸோ, கவலைப்படாத. நிம்மதியா நீ ஷாப்பிங் பண்ணலாம்" என்றாள் பூர்ணிமா."என்னடி சொன்ன?""உனக்குத்தான் பிரா வாங்க வந்திருகோம் என்று சொன்னேன்""அய்யோ, ஏன் அப்படி சொன்ன? அவ என்னை பார்த்து சிரிக்க போறா.""அவ என் கூட பத்தாவது வரை என்னோடு பழைய ஸ்கூலில் படித்தாள். நீ ஒன்னும் கவலைப் படாதடி" என்று சொல்லி என்னை இழுத்துச் சென்றாள்.பிங்க் நிற புஷ்-அப் பிரா ஒன்றை என் கையில் கொடுத்து அளவு பார்கச் சொன்னாள் அந்த பெண். அவள் பெயர் பத்மினி என்று அறிந்து கொண்டேன். அளவு சரி பார்க்க என்னை பூர்ணிமா ஒரு அறைக்கு அழைத்து சென்றாள். என்னோடு அவளும் உள்ளே வந்து அந்த பிரா அணிய உதவி செய்தாள். புஷ்-அப் பிரா மார்பகங்களை நல்லா அழகாய் காமிக்கும் என்று சொன்னாள்.என்னை அந்த பிரா அணித்து இருக்க சொல்லிவிட்டு , அவள் போய் கீதா மற்றும் பத்மினி இருவரையும் அழைத்து வந்து காமித்தாள். கீதா என்னைப் பார்த்து எதோ சிரித்தாள், காரணம் தெரியவில்லை.பத்மினி என்னை திரும்ப சொல்லி ஒரு முறை என்னை பார்த்தாள்.பின்பு சில பஞ்சு போன்று இருந்த பேட்களை பூர்ணிமாவிடம் தந்து என் பிரா உள்ளே வைக்கச் சொன்னாள். அவைகளை உள்ளே வைத்ததும் என் மார்பகங்கள் உண்மையான ஒன்றாய் தோன்றியது."இவளுக்கு இயற்கையான மார்பகங்கள் இல்லாததால் இன்னும் பெரிய பேட்(pad) தாங்க. அப்போதான் கரெக்டா இருக்கும்" என்று கீதா பத்மினியிடம் சொன்னதும், பத்மினி சிலிகான்யில் தயாரித்த பெரிய பேட் 2 ஜோடி கொடுத்தாள். அதில் ஒன்றை இப்போது அணிந்து பார்க்கும் படி கீதா கட்டாயப் படுத்தினாள் என்பதால் நான் செய்தேன்."இப்போ எப்படி இருக்கு கீதா? உன்னோட சைஸ் மாதிரி இருக்கா?" என்றேன்."ஆமா. இப்போதாண்டி உனக்கு அம்சமா இருக்கு. உனக்கு இப்போ எல்லா டிரஸ் கச்சிதமா இருக்கும்"பின்பு அந்த பிரா அளவான 36 சைஸ்-யில் மேலும் சில பிரா எடுத்துக் கொடுத்தனர். அந்த பிரா அனைத்திலும் சின்ன ரிப்பன் மற்றும் லேஸ் இருத்தன. பூர்ணிமா வீட்டில் இது மாதிரி பார்த்திருக்கிறேன். நான் ஏதும் மறுப்பு சொல்லாமல் வாங்கிக் கொண்டேன்."நாளைக்கு இந்த லேஸ் வச்ச பிரா போட்டு பாரு. உனக்கே ரொம்ப புடிக்கும். எல்லா பெண்களுக்கும் புடிக்கும்" என்றாள் பூர்ணிமா.அதே நிறங்களில் பேன்ட்டி மேட்சிங் பார்த்து எடுத்துக் கொண்டோம். சிம்மி எனப்படும் ச்லிப்ச் எடுத்துக்கொண்டு சுடிதார் எடுக்க மேல் மாடி சென்றோம். அங்கே ஒரே ஒரு அனார்கலி சுடிதார் மட்டும் எடுத்துக்கொண்டு சுடிதார் தைக்க 3 துணிகளை வாங்கினோம். எனக்கு புடித்த மாதிரி தைக்க வேண்டும் என்பதால் டைலரிடம் கொடுத்து அளவு பார்த்து தைக்க வேண்டும் என்று கீதா சொன்னாள்.புடவை வேண்டுமா என்று பத்மினி கேட்டதற்கு நான் புடவை அணிய இன்னும் வயது இருக்கு என்று வெட்கத்துடன் சொன்னேன்.அதற்கு அவள் "36b சைஸ் பிரா போடணும் என்று ஆசை படும்போதே சேலை அணியும் வயசு வந்துடுச்சி என்று அர்த்தம்" என்று சிரித்தாள். கூடவே மற்ற இருவரும் சிரித்தனர். இறுதியாக எனக்கு மட்டும் 6000 ரூபாய்க்கு துணிகள் வாங்கி இருந்தோம் இன்று மட்டும். கீதாவின் செலவு தனி.
அதற்குள் மதியம் ஆகிவிட்டதால் உணவு உண்ண ஹோட்டல் சென்றோம். உண்டபின் பூர்ணிமா எங்களை ஒரு தெரு ஓர கடைக்கு அழைத்துச் சென்றாள். அது ஒரு கம்மல் கடை. பூர்ணிமா ஒரு கம்மல் வாங்கி அங்கேயே அணிந்தாள். எனக்கும் ஆசை வந்தது."எனக்கும் கம்மல் போடணும்.. அந்த ஜிமிக்கி மாடல் வேணும்" என்றேன்."காது குத்தாம எப்படி போடமுடியும்" என்றாள் கீதா."அப்போ வா, இப்போவே காத்து குத்திக்கலாம்""அம்மா திட்டப் போறாங்க""ஒன்னும் திட்ட மாட்டாங்க" என்று நான் அவர்களை கட்டாயப் படுத்தினேன். அவர்களும் வேறு வழி இல்லாமல் என்னை அழைத்துச் சென்று ஒரு நகை கடையில் காது குத்தித் கொண்டேன். அந்த வழியிலும் ஒரு சந்தோசம் இருந்தது. ரொம்ப ஆர்வமாய் இருந்தேன் வீட்டுக்கு போய் அந்த குடை ஜிமிக்கி அணிய வேண்டும் என்று. பின்னர் வீட்டுக்கு சென்றோம்.வீட்டுக்கு போனதும் முதலில் அதை சொல்லி விட்டாள். அம்மா முதலில் என்ன அவசரம் என்று திட்டினாலும் பின்னர் சமாதானம் அடைந்தார். அனால் நாளை தான் அந்த ஜிமிக்கி மற்றும் இன்று வாங்கிய ஆடைகளை அணிய வேண்டும் என்று கட்டாயமாக சொன்னார் காரணம் சொல்லாமல். அதனால் கீதாவின் பழைய நைட்டி போட்டுக் கொண்டு படுக்கச் சென்றேன்.நாளை காலை நிறைய ஆச்சரியங்கள் காத்திருந்ததை அம்மா மாட்டும் அறிந்தார்.

No comments:

Post a Comment