Skip to main content

அபிராமி ஓர் ஆச்சரியம் - பகுதி 7

காலையில் எழுந்தவுடன் மேலிருந்து என் தங்கச்சியை அழைத்தேன். அவளும் மேலே வந்தாள்.
"என்ன அக்கா? என்ன வேணும்?"
"ஒன்னும் இல்லடி. முதல்தடவை என்னை நீங்க ஒரு பொண்ணா பாக்கப்போரிங்க. அதனால் நான் நல்ல ஒரு ட்ரெஸ் போட்டுக்கிட்டு உங்க முன்னாடி வரலாம்னு இருக்கேன்"
"நல்ல ஐடியா தான். கொஞ்சம் இருங்க அக்கா, இதோ வரேன்" என்று சென்ற அவள் சிறிது நேரம் கழித்து வந்தாள்.

"அக்கா, இந்தாங்க என்னோட பாவாடை சட்டை. நான் வயசுக்கு வந்தப்போ எடுத்தது. நம்ம ரெண்டு பேரும் ஒரே சைஸ் தான். ஸோ, உங்களுக்கும் கரெக்டா இருக்கும்கா" என்று என் கையில் கொடுத்தாள். அது ஒரு நல்ல சிகப்பு நிற பாவாடை சட்டை.
மேலும் அவள் ஒரு பிரா மற்றும் பேட்டி தந்தாள்.
"இது தான் நீங்க போட்ட என்னோட முதல் பிரா, பேன்ட்டி. இதை இனிமேல் நீங்களே வச்சிக்கலாம் அக்கா. என்னோட கிப்ட் உங்களுக்கு" என்று சிரித்தாள்.
"ரொம்ப தேங்க்ஸ் கீதா"
"இருக்கட்டும்.. என் அக்காவுக்காக இதை கூட தரமாட்டேனா? நீங்க டிரஸ் பண்ணிட்டு சொல்லுங்க. அம்மா கடைக்கு போயிருக்காங்க. அவங்க வெயிட் பண்ண சொன்னங்க."
"சரி டி" என்று சொல்லி அவள் சென்றபின் கதவை தாழிட்டேன். பிறகு எனது நைட்டி கழட்டிவிட்டு குளிக்கச் சென்றேன். இப்போது அணிந்திருக்கும் பிரா, பேன்ட்டி கூட நானே வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்துவிட்டேன்.
குளித்துவிட்டு கீதா குடுத்த பிரா மற்றும் பேண்டி போட்டுக் கொண்டேன்.  பின்பு பாவாடை சட்டை அணிய முயற்சித்தேன். போன முறை அணிந்த மாதிரி இல்லை இது.பின்பக்கம் 7 அல்ல 8 கொக்கிகள் இருந்தன. முதுகில் கொக்கிகள் இருந்தாதல் என்னால் அணிய முடியவில்லை. மீண்டும் கீதாவை அழைத்தேன்.
"அக்கா, நான் கொடுத்த பிரா போட்டு இருக்கீங்களா?"
"ஆமா கீதா. நீ கொடுத்த அதே பிங்க் நிற பிரா மற்றும் பிரவுன் நிறபேண்டி போட்டுஇருக்கேன்"
"அப்புறம் ஏன் முன்னாடி இப்படி சமமா இருக்கு? அக்கா, ஒரு பொண்ணுக்கு முன்னழகு ரொம்ப முக்கியம். நீங்க முன்னாடி பண்ண மாதிரி துணி வைங்க பிரா உள்ள" என்று சொல்லிவிட்டு வெளியே காத்திருந்தாள்.
நான் அவள் சொன்னதுபோல் பிராவினுள் சில துணிகளை வைத்தேன். பின்பு அவள் மீண்டும் உள்ளே வந்து முதுகுக்கு பின்னால் இருந்த அனைத்து கொக்கிகளையும் மாட்டி விட்டாள்.
"ஏய் கீதா, இப்போ திடிர்னு டிரஸ் ரொம்படைட்டா இருக்குற மாதிரி இருக்கு பா"
"அப்படித்தான் இருக்கும் கா, இப்போ உங்களுக்கு என்னமாதிரி மார்பகங்கள் இருக்குல.அதான். சரி, நீங்க இங்கேயே இருங்க. நான் அம்மா வந்ததும்மேல வாரேன்" என்று சொல்லி சென்றுவிட்டாள்.
நான் சிறிது நேரம் கண்ணாடியில் எனது உடையை கண்டு ரசித்தேன். பின்பு அவள் கையில் ஒரு பையுடன் வந்தாள்.
"அம்மா இப்போதான் வந்தாங்க. உனக்காக என்ன வாங்கி வந்துருக்காங்க பாரு" என்று அதை காமித்தாள்.அது ஒரு தலை முடி விக். என் தலையில் வைத்து எப்படி அணிய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தாள். எனக்கு அது ரொம்ப பிடித்திருந்தது. என் கழுத்துக்கு கீழ் சிறிது நீண்டிருந்தது.
"அக்கா, நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. எனக்கே பொறாமையா இருக்கு. இப்போ வாங்க. அம்மா ரொம்ப ஆர்வமா இருக்காங்க அவங்க பெரிய பொண்ண பாக்க" என்று என்னை கீழ் அழைத்துச் சென்றாள்.


அம்மா என்னைப் பார்த்து உண்மையில் ஆச்சரியபட்டர்கள். அவர் கண்ணில் ஒரு ஆனந்தம்.
"இங்க வாடி அபிராமி, என் தங்கமே. எவ்ளோ அழகா இருக்க நீ. என் கண்ணே பட்டிடும் போல. இவ்ளோ நாள் எங்கடி இருந்த? ரொம்ப லட்சணமா இருக்கா இல்லடி உன்னோட அக்கா?"
எனக்கு ரொம்ப வெட்கமாய் இருந்தது. தலையை குனிந்து கொண்டேன்.
"ஆமா அம்மா. எனக்கே கொஞ்சம் பொறாமையா தான் இருக்கு அக்காவை பாக்கும்போது" என்றாள் கீதா.
"நீயே கண்ணு வைகாதடி. அவளுக்கு திருஷ்டி சுத்தி போடணும் அப்புறம். சரி, இது நீ வயசுக்கு வந்தப்போ எடுத்த பாவாடை சட்டைதான இது"
"அதே ட்ரெஸ் தான் மா இது."
"அப்போ எடுத்தது இன்னக்கி இவளுக்கு யூஸ் ஆகுது. சரி அபிராமி, என் பக்கத்துல வந்து உட்காரு" என்று அழைத்தார். நான் அம்மா அருகில் அமர்ந்தேன்.
"கொஞ்சம் திரும்பி உட்காருடி" என்றார் அம்மா.
நான் திரும்பி அமர்ந்ததும் அம்மா அவுங்க கழுத்தில் இருந்த ஒரு நெக்லஸ்  கழட்டி என் கழுத்தில் மாட்டிவிட்டார்.
"ஏன் அம்மா.. நீங்க போட்டுக்க வேண்டியதுதான?" என்று கேட்டேன்.
"பரவாயில்லை. அம்மா நகை எல்லாம் பொண்ணுக்குதான. உனக்கு இது நல்லா இருக்கு" என்றார். அப்படியே எனக்கு நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு வைத்துவிட்டார்.
"அப்போ உங்க நகை எல்லாம் எனக்கு இல்லியா" என்றாள் கீதா.
"உங்க ரெண்டு பேருக்கும் தாண்டி எல்லாம் சொந்தம்".
"நீங்க என் கல்யாணத்துக்கு 100 சவரன் நகை போடணும். அக்காவுக்கு உங்க இஷ்டம்" கிண்டலடித்தாள் கீதா.
"என்னோட பெரிய பொண்ணு அபிராமிக்கு தான் நான் 200 சவரன் போட்டு கல்யாணம் பண்ணுவேன்" என்று அவரும் கிண்டலடித்தார். எனக்கு ரொம்ப வெட்கம் வந்ததால் என் அம்மாவின் தோளில் முகத்தை புதைத்துக் கொண்டேன்.
"அக்கா நேற்று ஒரு பொண்ணுமாதிரி அழுத, இன்னக்கி பொண்ணு மாதிரி வெட்கப்படுற. நிஜமா நீ பொண்ணு மாதிரி எனக்கு தோணுது" கீதா சொன்னாள்.
"என்னடி சந்தேகம் உனக்கு. அவ என்னோட பொண்ணுதான்.சரி, பிரா போட்டிருகியா இல்லையா?"
"போட்டிருக்கிறேன் மா.கீதா அவ பிரா ஒன்னு எனக்கே கொடுத்துட்டா. அதை தான் இப்போ போட்டிருக்கிறேன்."
"ஆனா அவளோட சைஸ் 36 ஆச்சே. உனக்கு ஒக்கே வா அபி?" கேட்டார் அம்மா.
"எனக்கும் 36 சைஸ் தான் வேணும்" என்று வெட்கத்துடன் சொன்னேன். அம்மவும் கீதாவும் மாறிமாறி பார்த்து அவர்களுக்குள் சிரித்து கொண்டனர்.
எனக்கு என்ன செய்வதுன்னு தெரியாமல் என் அறையில்  படிக்கப்போவதாக சொன்னேன்.உடனே அம்மா என்னை இருக்க சொலிவிட்டு பூஜை அறையில் இருந்து மல்லிகை பூ கொண்டு வந்து வைத்து விட்டார்.
"ஒரு வயசு பொண்ணு, நெத்தியில பொட்டும், தலையில் பூ இல்லாமல் எப்போதும் இருக்க கூடாது" என்றார். பின் நான் என் அறைக்கு சென்றேன். மேலிருந்து நானே என்ன முன்னழகை பார்க்கும்போது என் மார்பகங்கள் கொடுத்த மேடு பள்ளங்கள் என்னை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தது.
நான் படித்துக்கொண்டிருக்கும் போது பூர்ணிமா வந்தாள். கீதா அவளுக்கு போன் பண்ணதாகவும் நான் முதல் முதலில் போட்ட அவளோட பிரா, பேண்டி எனக்கே தரும்படி கீதா சொன்னாளாம். அதான் என்கிட்டே அதை கொடுக்க வந்தாள்.
"அபிராமி, யாரு டிரஸ் டி இது. ரொம்ப சூப்பர்." என்று கேட்டாள் பூரணி.
"இது கீதா டிரஸ்.அவ வயசுக்கு வந்தப்போ எடுத்ததாம்"
"அப்போ நீ எப்படி வயசுக்கு வரபோற? நான் வயசுக்கு வந்து ரொம்பநாள் ஆச்சி. நீ?" என்று சிரித்தாள். மீண்டும் என்னை வெட்கம் பிடித்துக்கொண்டது.
மேலும் அவள் "டெய்லி நான் தான் இனி உன்னோட வீட்டுக்கு வரணும். நம்ம இங்க ஒன்னா படிக்கலாம்" என்றாள். இரவும் ஆனது. பூர்ணிமா சென்றுவிட்டாள்.
நான், அம்மா, கீதா ஒன்றாக அமர்ந்து இரவு உணவு சாப்பிட்டோம். நாளையில் இருந்து நானும் வீட்டு வேலை எல்லாம் பாக்கணும்னு சொல்லிட்டாங்க. நாளைக்கு நாங்க மூணு பேரும் ஷாப்பிங் போகபோறோம். பின்பு உள்ளாடைகளை கழற்றாமல் அம்மா எடுத்துக் கொடுத்த நைட்டி போட்டுக் கொண்டு படுக்கச் சென்றேன்.

Comments

Popular posts from this blog

My Real Crossdressing Story

எனக்கும் 2 அனுபவம் உண்டு. எனது ஆசைகளை தெரிய படுத்தியதால் எனது முதல் காதலை இழக்க வேண்டியதாயிற்று. அதன் பின் காதலே தேவை இல்லை என்ற எண்ணத்தில் வாழ்ந்து வந்தேன். ரகசியமாக பெண் ஆடைகளை அணிவத்யும் முற்றாக தவிர்த்து விட்டேன். சில வரடுங்கங்களின் பின் இன்னொரு பெண்ணிடம் நட்பு கிடைத்தது.. காலபோக்கில் அது வளர்ந்து ஒரு நாள் அவள் என்னிடம் அவள் காதலை தெரிவித்தாள். அவள் மீது விருப்பம் இருந்த போதும் அதற்கு தொடர்ந்து மறுப்பு கூறியே வந்தேன். என் விருபங்களை தெரிவித்தால் எவரும் விரும்ப மாட்டார்கள் என்று நினைத்திருந்தேன். ஒரு நாள் இருவருக்கும் இடையில் வாகு வாதம் பெரிதாகி சந்த்யாகிவிட்டது. அவள் எப்படியோ எனக்கு அவள் மீதி இருந்த விருப்பத்தை சற்று உணர்ந்திருந்தாள். கோவம் மேலிட்டு என்னை ஒரு ஓர் இனசெற்கை ஆளான(homosexual) அஹ எனக்கேட்டு விட்டாள். எனக்கு சிறுவயதிலிருந்தே பெண்கள் உடையில் ஆர்வம் இருந்தாலும் ஓர் இனசெற்கையில் விருப்பம் இல்லை. முழக்க முழுக்க ஆணாகவே இருந்தேன். பின்னர் ஒரு நாள் ஆவலுடன் தனியாக இருக்கும் பொழுது உண்மையை கூறிவிட்டேன். அவள் கோவத்தில் என் கன்னத்தில் அறைந்து விட்டு வீடு சென்றுவிட்டாள். மறுபடிய...

மேடமும் நானும் !....

நான் ஒரு தனியார் கம்பெனி உயர் அதிகாரி .புதிதாய் திருமணமானவன் .என் கதை கொஞ்சம் விசித்திரமானது ....நான் கொஞ்சம் கர்வியும் கூட .யாருக்கும் அடங்காதவன் .நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம் அது .இதோ ..என் பிளாஸ் பேக் ...........அது ஒரு .கோ -எஜூகேசன் காலேஜ் .நான் ஸ்போர்ட்ஸ் மேன் .நிறைய விளையாட்டுகளில் பரிசு வாங்கியவன் .ஐந்தே முக்காலடி உயரத்தில் நல்ல உடல் கட்டோடு இருந்தேன் .என்னை காதலிக்க அழகான பெண்கள் பலர் முயற்சித்தனர் .அதில் ஒருத்தி அந்த கல்லூரியிலேயே பேரழகி என்று அனைவராலும் அழைக்கப்பட்ட சுஷா .....சுஷா என்னைவிட உயரம் .ஐந்தடி பத்து அங்குலம் .அராபிய குதிரை போன்ற உடம்பு ...நான் சுஷாவிடம் நன்றாக பேசினேன் ...நான் அவளுக்கு வாலிபால் கற்று தர  ,அவள் எனக்கு பேஸ்கட் பால் பயிற்சி அளித்தாள் . ஒரு கட்டத்தில் என்னை அறியாமல் ஒரு பெண்ணை காதலிக்க ஆரம்பித்தேன் .அவள் விளையாட்டில் ஆர்வம் கொண்டவள் அல்ல .படிப்பில் விருப்பம் கொண்டவள் .அழகானவள் .......அவள் தோழிகளோடு எப்போதும் இருப்பாள் .அவளின் தோழி சாந்திக்கு எப்போதும் என்னை கிண்டல் செய்வதே வேலை...............சாந்தி நல்ல சிவப்பு நிறம் .அளவான உயரம்...

வாடி என் !.... பட்டு ரோஜா!.....

எனக்கு பார்சலில் வந்திருந்த அந்த கவரை பிரித்து பார்த்தேன் .எனக்கு அதிர்ச்சியாக இருந்தது .அத்தனையும் போட்டோக்கள் .அதனுடன் ஒரு கடிதமும் இருந்தது .இந்த போட்டோ எப்படி வெளியில் போனது .குழம்பினேன் .நான் வசந்த் .எம் .காம்.,பி .ஜி .டி .சி.ஏ .,பி .பி.எம் .,உயர் படிப்பு படித்தவன் .பெரிய கம்பெனியில் அக்கவுண்ட்ஸ் ஆபீசர் ஆக இருந்தேன் .என் மனைவி ஹேமா கல்லூரி லெக்சரர் .இருவரும் நல்ல உயரம் .சிவப்பு நிறம் .அழகாய் இருப்போம் .புதியதாய் திருமணமானவர்கள் நாங்கள் .நான் போட்டோ க்ராபியில் ஆர்வமுள்ளவன் என்பதால் என் பணி பாதிக்காதபடி அடிக்கடி வெளியூர் நாலைந்துநாள் கிளம்பிவிடுவேன் .போட்டோ கிராபி டிரெயினிங் போய் வருவேன் . என்னுடைய தூரத்து உறவினர் எனக்கு நல்ல பழக்கம் .அவரும் நானும் சேர்ந்துதான் வெளியூர் போட்டோ கிராபி வகுப்புக்கு போவோம் .அவர் பிசினஸ் செய்கிறார் . அவர் என்னைவிட உயரம் குறைவு ஆனால் நல்ல கம்பீரம் .கட்டான உடல்.அவர் திருமணமாகி மனைவியை துரத்திவிட்டு தனியாக வசித்தார் .அவர் வீடு என் வீட்டில் இருந்து பத்து கிலோ மீட்டர் தூரம் உள்ளது .அவரிடமும் என்னிடமும் பைக் உண்டு .நான் ஆபீசில் இருந்து வந்தால் மோஸ்ட்லி அவர...