Skip to main content

அபிராமி ஓர் ஆச்சரியம் - பகுதி 2

இன்று பொங்கல். இன்றும் விடுமுறை என்பதால் அனைவரும் வீட்டில் இருந்தனர். எங்கள் வீட்டில் இப்போது தான் கொண்டாட்டங்கள் முடிந்தது. அம்மா செய்த பொங்கல் நல்லா சாப்பிட்டேன். கீதாவும் அம்மாவும் தான் சேர்ந்து காலையில் இருந்து சமையல் செய்தார்கள். நான் வழக்கம் போல தூங்கி கொண்டுஇருந்தேன் அப்போது.
பூஜையும் சாப்பாடும் முடிந்துவிட்டதால் நான் டி.வீ பார்த்துகொண்டு இருந்தேன். அப்போ கீதா என்முன்னாடி வந்து தனது புது பாவாடை தாவணி பற்றி கேட்டாள்.
"ஆனந்த், எப்படிடா இருக்கு என்னோட புது பாவாடை தாவணி?"
"லூசு, வழி விடுடி.. டி.வீ ய மறைக்காத."
"சொல்லு டா.. எப்படி இருக்கேன்?"
"கேவலமா இருக்க" என்று அவளை வெறுப்பேத்தி அனுப்பி வைத்தேன்.
பூர்ணிமா இன்னும்அவள் வீட்டுக்கு வராததால் எனக்கு செம போர். அவள் வருகைக்காக மாலை வரை காத்திருந்தேன். இதோ மாலை வந்து விட்டது.. அவளும் வந்து விட்டாள்.
நான் அவள் வீட்டுக்கு சென்றபோது அவளது உறவினர்கள் நிறைய இருந்தனர். நான் உள்ளே சென்றவுடன், அவள் என்னை கூட்டிகிட்டு வீட்டு மொட்ட மாடிக்கு சென்றாள்.
 அப்போது என் தங்கை கீதாவும் மாடிக்கு வந்தாள்.
"ஹலோ பூரணி. எப்படி இருக்க? பொங்கல் வாழ்த்துக்கள்" என்றால் கீதா.
"பொங்கல் வாழ்த்துக்கள். எனக்கு என்ன? நான் நல்ல தான் இருக்கேன். நீ?"
"நானும் நல்லாஇருக்கேன்."
"நீ ஏண்டி இங்க வந்த?" என்று கேட்டேன் நான்.
"அவள் வந்தால் உனக்கு என்ன?" என்று பெண்ணுக்கு பெண் ஆதரவாய் பேசினாள் பூரணி.
"அம்மா உங்கவீட்டுல இனிப்பு கொடுத்துட்டு வர சொன்னாங்க. அதான் கீழ கொடுத்துட்டு மேல உன்னை பாக்க வந்தேன்." - கீதா சொன்னாள்.
"தேங்க்ஸ் டி கீதா. கொஞ்ச நேரம் முன்னாடி தான் வீட்டுக்கு வந்தோம். குடும்பமாய் போய் ஒரு சின்ன ட்ரிப் அடிச்சோம். அத்தை மாமா வந்துருக்காங்க, அதான்."
"நீ இல்லாம எனக்குஇன்னக்கி செம போர்" என்று என் கஷ்டத்தை சொன்னேன்.
"அதான் வந்துட்டேன்ல. ஹே கீதா.. உன்னோட இந்த பாவாடை தாவணி ரொம்ப நல்லா இருக்குடி. வா.. நம்ப ரெண்டு பேரும் சேந்து ஒரு போட்டோ எடுத்துக்கலாம் ".
"ரெண்டு பொண்ணுங்க ஒண்ணா இருந்தாலே சும்மா டிரஸ் பத்தித்தான் பேச்சு" என்று சொல்லிகொண்டே அவர்களை பூரணி போனில் போட்டோ எடுத்தேன்.
எடுத்த போட்டோவை ஒருதடவை பாத்துட்டு கீதா சென்று விட்டாள்.
"உன் தங்கச்சி இந்த பாவாடை தாவணில ரொம்ப அழகா இருக்காடா.தலை நிறைய மல்லிகை பூ வச்சி சூப்பர்ஆ இருக்கா" - என்றாள் பூரணி.

"அட.. இன்னக்கு ரொம்ப கேவலமா இருக்கா" என்று கொஞ்சம் கலாய்தேன்.
"போடா.. நீ கடைசி வரைக்கும் பொண்ணுங்களை பத்தி புரிஞ்சிக்கமாட்ட போல" என்ற பூரணி "கொஞ்சம் இருடா.. வரேன்" என்று சொல்லிவிட்டு கீழ் சென்றாள்.
சிறிது நேரம் கழித்து அவள் உடைமாற்றி வந்தாள்.
"என்னடி, திடிர்னு டிரஸ் மாத்திட்டு வர?" கேள்வி கேட்டேன் நான்.

"கீத்தாவை பார்த்தபின்ன எனக்கும் ஆசை வந்துடுச்சி. அதான்."
"என்னடி, எதோ வித்தியாசமா இருக்க இந்த டிரஸ்ல.. என்னடி அது?"
"அப்படி எல்லாம் ஒன்னும் இல்லடா.. வழக்கம் போலத்தான் இருக்கேன்.
தலைநிறைய மல்லிகைபூ வச்சிருக்கேன். ஜரிகை வச்ச பட்டு பாவாடை சட்டை போட்டுருக்கேன். கண்ணனுக்கு மை, போட்டு, தங்க வளையல், தங்க கம்மல், மூக்குத்தி, நெக்லஸ் போட்டுருக்கேன். என்னோட தலைமுடியை ப்ரீ ஸ்டைல் விட்டுருக்கேன்."
"அது எல்லாம் இல்லடி. வேற எதோ இருக்கு." என்றவுடன் "கண்டுபுடி" என்று கண்சிமிட்டிவிட்டு என் எதிரே நின்றாள். கண்டுபுடிக்க முடியாமல் நின்றேன்.
"சரி.. நானே சொல்றேன்.. உன்கிட்ட சொல்ல என்ன தயக்கம். என் அத்தை புதுசா வெளிநாட்டு பிரா நேற்று கொடுத்தார்கள். அது என் மார்பகங்களை இயல்பை விட பெரிசா காட்டுதுடா."
"பொண்ணுங்களுக்கு எவ்ளோ டிரஸ் வகைகள். எதோ காருக்கு உதிரி பாகங்கள் மாதிரி."
"அது எல்லாம் பொ....."
"பொண்ணுங்க சமாச்சாரம்.. எனக்கு புரியாதுன்னு சொல்ல போற",  கரெக்ட் இல்லையா?" என்றேன்.
"அதேதான்" என்று சிரித்தால்.
பின்பு, அவளே பேசத்தொடங்கினாள் - "நேத்து மாமாவிடம் என் அப்பா சொல்லிக்கொண்டு இருந்தார். அவரைப் போலவே நானும் ஒரு டீச்சர் ஆகணுமாம். ஸோ, என்ன டீச்சர் ட்ரைனிங் காலேஜ்ல சேர்க்கப் போறாராம்."
"அதனால என்ன?"
"உனக்கு புரியலையா? நம்ம சிட்டில ஒரே ஒரு டீச்சர் ட்ரைனிங் காலேஜ் தாண்டா இருக்கு. அதுவும் ஒரு பெண்கள் கல்லூரி. நாமா ரெண்டு பேரும் ஒரே காலேஜ்ல தான் படிக்கணும்னு முடிவுபண்ணி இருந்தோம்.. இல்லையா?"
"ஆமாம்.. நீ சொல்றது இப்போ தான் புரியுது எனக்கு. இப்போ என்ன பண்ணலாம்?"
"நேத்து நைட் முழுசும் யோசிச்சி பாத்தேன்.. ஒரே ஐடியா தான் வருது."
"அது என்ன ஐடியா?முதல அதை சொல்லு."
"நீயும் என்கூட அதே காலேஜ்ல சேரனும்."
"எப்படி முடியும்.. அது பெண்கள் கல்லுரி."
"அதுனால என்னடா... ஒரு பொண்ணு மாதிரி நீ சேர்ந்து படி.. மொத்தம் 4 வருஷம் தான் -  3 வருஷம் B.Sc மற்றும் 1 வருடம் B.Ed. அவ்ளோதான்"
"நாலு வருடம் என்னை பொண்ணுமாதிரி இருக்க சொல்றியா? எப்படி முடியும்? எனக்கு பொண்ணுங்களை பத்தி ஒன்னும் தெரியாதுன்னு நீயே சொல்லிருக்க.என்னால முடியாது."
"நல்லா யோசிச்சி சொல்லுடா.. இது தான்ஒரே வழி நம்ம, ஒண்ணா படிக்க." சமாதானம் சொன்னாள் பூர்ணிமா.
"நிச்சியமா முடியாது பூரணி.. அம்மா ஒத்துக்கமாட்டாங்க"
"முதல உனக்கு சம்மதமா சொல்லு. அப்புறம் அடுத்ததை பத்தி.யோசிக்கலாம். 12th பரீட்சை முடிய இன்னும் ஒரு மாசம் இருக்கு."
"என்னடி.. என்னபாத்தா உங்களமாதிரி பொட்டச்சிமாதிரி தெரியுதா? வேற ஐடியா இருந்த சொல்லு." என்று கோபத்துடன் பேசிவிட்டு என் வீட்டுக்கு வந்துவிட்டேன்.

Comments

Popular posts from this blog

My Real Crossdressing Story

எனக்கும் 2 அனுபவம் உண்டு. எனது ஆசைகளை தெரிய படுத்தியதால் எனது முதல் காதலை இழக்க வேண்டியதாயிற்று. அதன் பின் காதலே தேவை இல்லை என்ற எண்ணத்தில் வாழ்ந்து வந்தேன். ரகசியமாக பெண் ஆடைகளை அணிவத்யும் முற்றாக தவிர்த்து விட்டேன். சில வரடுங்கங்களின் பின் இன்னொரு பெண்ணிடம் நட்பு கிடைத்தது.. காலபோக்கில் அது வளர்ந்து ஒரு நாள் அவள் என்னிடம் அவள் காதலை தெரிவித்தாள். அவள் மீது விருப்பம் இருந்த போதும் அதற்கு தொடர்ந்து மறுப்பு கூறியே வந்தேன். என் விருபங்களை தெரிவித்தால் எவரும் விரும்ப மாட்டார்கள் என்று நினைத்திருந்தேன். ஒரு நாள் இருவருக்கும் இடையில் வாகு வாதம் பெரிதாகி சந்த்யாகிவிட்டது. அவள் எப்படியோ எனக்கு அவள் மீதி இருந்த விருப்பத்தை சற்று உணர்ந்திருந்தாள். கோவம் மேலிட்டு என்னை ஒரு ஓர் இனசெற்கை ஆளான(homosexual) அஹ எனக்கேட்டு விட்டாள். எனக்கு சிறுவயதிலிருந்தே பெண்கள் உடையில் ஆர்வம் இருந்தாலும் ஓர் இனசெற்கையில் விருப்பம் இல்லை. முழக்க முழுக்க ஆணாகவே இருந்தேன். பின்னர் ஒரு நாள் ஆவலுடன் தனியாக இருக்கும் பொழுது உண்மையை கூறிவிட்டேன். அவள் கோவத்தில் என் கன்னத்தில் அறைந்து விட்டு வீடு சென்றுவிட்டாள். மறுபடிய...

மேடமும் நானும் !....

நான் ஒரு தனியார் கம்பெனி உயர் அதிகாரி .புதிதாய் திருமணமானவன் .என் கதை கொஞ்சம் விசித்திரமானது ....நான் கொஞ்சம் கர்வியும் கூட .யாருக்கும் அடங்காதவன் .நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம் அது .இதோ ..என் பிளாஸ் பேக் ...........அது ஒரு .கோ -எஜூகேசன் காலேஜ் .நான் ஸ்போர்ட்ஸ் மேன் .நிறைய விளையாட்டுகளில் பரிசு வாங்கியவன் .ஐந்தே முக்காலடி உயரத்தில் நல்ல உடல் கட்டோடு இருந்தேன் .என்னை காதலிக்க அழகான பெண்கள் பலர் முயற்சித்தனர் .அதில் ஒருத்தி அந்த கல்லூரியிலேயே பேரழகி என்று அனைவராலும் அழைக்கப்பட்ட சுஷா .....சுஷா என்னைவிட உயரம் .ஐந்தடி பத்து அங்குலம் .அராபிய குதிரை போன்ற உடம்பு ...நான் சுஷாவிடம் நன்றாக பேசினேன் ...நான் அவளுக்கு வாலிபால் கற்று தர  ,அவள் எனக்கு பேஸ்கட் பால் பயிற்சி அளித்தாள் . ஒரு கட்டத்தில் என்னை அறியாமல் ஒரு பெண்ணை காதலிக்க ஆரம்பித்தேன் .அவள் விளையாட்டில் ஆர்வம் கொண்டவள் அல்ல .படிப்பில் விருப்பம் கொண்டவள் .அழகானவள் .......அவள் தோழிகளோடு எப்போதும் இருப்பாள் .அவளின் தோழி சாந்திக்கு எப்போதும் என்னை கிண்டல் செய்வதே வேலை...............சாந்தி நல்ல சிவப்பு நிறம் .அளவான உயரம்...

வாடி என் !.... பட்டு ரோஜா!.....

எனக்கு பார்சலில் வந்திருந்த அந்த கவரை பிரித்து பார்த்தேன் .எனக்கு அதிர்ச்சியாக இருந்தது .அத்தனையும் போட்டோக்கள் .அதனுடன் ஒரு கடிதமும் இருந்தது .இந்த போட்டோ எப்படி வெளியில் போனது .குழம்பினேன் .நான் வசந்த் .எம் .காம்.,பி .ஜி .டி .சி.ஏ .,பி .பி.எம் .,உயர் படிப்பு படித்தவன் .பெரிய கம்பெனியில் அக்கவுண்ட்ஸ் ஆபீசர் ஆக இருந்தேன் .என் மனைவி ஹேமா கல்லூரி லெக்சரர் .இருவரும் நல்ல உயரம் .சிவப்பு நிறம் .அழகாய் இருப்போம் .புதியதாய் திருமணமானவர்கள் நாங்கள் .நான் போட்டோ க்ராபியில் ஆர்வமுள்ளவன் என்பதால் என் பணி பாதிக்காதபடி அடிக்கடி வெளியூர் நாலைந்துநாள் கிளம்பிவிடுவேன் .போட்டோ கிராபி டிரெயினிங் போய் வருவேன் . என்னுடைய தூரத்து உறவினர் எனக்கு நல்ல பழக்கம் .அவரும் நானும் சேர்ந்துதான் வெளியூர் போட்டோ கிராபி வகுப்புக்கு போவோம் .அவர் பிசினஸ் செய்கிறார் . அவர் என்னைவிட உயரம் குறைவு ஆனால் நல்ல கம்பீரம் .கட்டான உடல்.அவர் திருமணமாகி மனைவியை துரத்திவிட்டு தனியாக வசித்தார் .அவர் வீடு என் வீட்டில் இருந்து பத்து கிலோ மீட்டர் தூரம் உள்ளது .அவரிடமும் என்னிடமும் பைக் உண்டு .நான் ஆபீசில் இருந்து வந்தால் மோஸ்ட்லி அவர...